ராஜீவ் காந்தி படுகொலை - மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று கருதப்படும் இந்துத்துவ சக்திகளை விசாரணை செய்யாமல் காப்பாற்றும் நடவடிக்கைகள் – ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம்

19 Oct, 2023 | 02:32 PM
image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  மே 21 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன்  சந்திரா சாமி  சுப்பிரமணியன் சுவாமி  ஆகியோர் மீது சந்தேகத்தை எழுப்பி இந்த படுகொலையில் அயல்நாட்டு சதி இருக்க வாய்ப்புள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் அன்றைய மத்திய பாஜக அரசு பல்துறை கண்காணிப்பு முகமையை) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால்  இதுவரையில் பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமியை விசாரிக்கவில்லை.  இதனிடையே மத்திய அரசு 2022 மே மாதத்தில் இந்த பல்துறை கண்காணிப்பு முகமையை கலைத்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்ட தமிழர்களை மட்டும் முறையான விசாரணைக்கு உட்படுத்தி தண்டித்து விட்டு படுகொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று கருதப்படும் இந்துத்துவ சக்திகளை எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது.

மத்திய அரசின் இந்த செயலை கண்டித்தும் ராஜீவ் காந்தி படுகொலையில் சுப்பிரமணியன் சுவாமியின் தொடர்பை சட்டப்படி முறையான விசாரணைக்கு உட்படுத்தவும் வலியுறுத்தி நான் விரைவில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளேன்”.

இவ்வாறு சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதி உயிர்த்த ஞாயிறு செய்தியில் காசாவின்...

2025-04-21 16:56:43
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 14:46:10
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20