(நா.தனுஜா)
வட, கிழக்கில் வெள்ளிக்கிழமை (20) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் 'லியோ' திரைப்படத்தை திரையிடவேண்டாம் எனக்கோரி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தென்னிந்திய நடிகர் விஜய்க்கு கடிதம் அனுப்பியிருப்பதாக வெளியான செய்திகளை அக்கட்சிகளின் பிரதிநிதிகள் முற்றாக மறுத்துள்ளனர்.
தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை வியாழக்கிழமை (19) வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படம் இலங்கையிலுள்ள திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில், 'லியோ' திரைப்படம் நாளைய தினம் இலங்கையில் திரையிடப்பட்டால், அது அண்மையில் பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு நீதிகோரி தாம் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கவிருக்கும் ஹர்த்தாலுக்கு பின்னடைவாக அமையும் எனவும், ஆகவே அத்திரைப்படத்தை 20 ஆம் திகதி இலங்கையில் திரையிடவேண்டாம் எனவும் வலியுறுத்தி 6 தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து நடிகர் விஜய்க்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதாக நேற்றைய தினம் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
அதுமாத்திரமன்றி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய கட்சித்தலைவர் என்.சிறிகாந்தா ஆகியோரின் கையெழுத்துக்களுடன் தமிழ் அரசியல் கட்சிகளால் அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றும் தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல சினிமா விமர்சகர்களின் சமூகவலைத்தளப்பக்கங்களில் வெளியாகின.
இருப்பினும் இக்கடிதம் குறித்து வெளியான செய்திகளை முற்றாக மறுத்திருக்கும் மேற்படி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் விஜய்க்கு தாம் எந்தவொரு கடிதத்தையும் அனுப்பவில்லை என்றும், அவ்வாறு பரவியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் விளக்கமளித்துள்ளனர்.
அத்தோடு, தாம் அனுப்பிவைத்ததாகப் பகிரப்பட்டுவரும் கடிதங்களிலுள்ள கையெழுத்துக்கள் ஏற்கனவே தாம் வேறு தரப்பினருக்கு அனுப்பிவைத்த பழைய கடிதங்களிலிருந்து பெறப்பட்ட கையெழுத்துக்கள் என்வும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM