மக்கள் முறைப்பாடுகள், பொலிஸ் தலைமையக சுற்றறிக்கை, அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

Published By: Digital Desk 3

16 Oct, 2023 | 05:20 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மக்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையக சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் முறையாக செயல்படாத, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும்  உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலான அதிகாரிகளுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறிய பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய பொலிஸ் விசேட புலானாய்வுப்பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில்  சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தவறிழைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாத 120 சம்பவங்களும் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 84 பேரின் விசாரணைகளை நிறைவு செய்த பொலிஸ் விசேட புலானாய்வுப்பிரிவின் பணிப்பாளர் 64 பேரின் விடயங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். 

இதில் 9 அதிகாரிகளுக்கு எதிரான 13 சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 19 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 41 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தரக்ளுக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான ஒழுக்காற்று விசாரணைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06