காசா மற்றும் மேற்குக்கரை தொழிலாளர்களுக்கு தடை ; இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் இலங்கையர்கள்

Published By: Digital Desk 3

16 Oct, 2023 | 04:50 PM
image

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையயே தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக காசா மற்றும் மேற்குக் கரையில் இருந்து இஸ்ரேலுக்குள் தொழிலாளர்களின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுப்படும் கும்பல் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக  தொழிலாளர்களை அனுப்புவதன் மூலம் வருமானம் பெற முயற்சிக்கின்றனர். இந்நிலையில், இஸ்ரேலிற்குள் நுழைய முயன்ற 50 இலங்கையர்கள்  ஜோர்தானில் சிக்குண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இஸ்ரேலுக்கு  ஜோர்தான், யேமன் மற்றும் எகிப்தில் உள்ள கெய்ரோ போன்ற இடங்கள் ஊடாக மக்கள் கடத்தப்படுகிறார்கள்.

சில இலங்கையர்கள்  இஸ்ரேலில் சிறந்த ஊதியம் பெறும் வேலைக்காக கடத்தல்காரர்களுக்கு 2.5 மில்லியன் ரூபா வரை பணம் கொடுக்கிறார்கள்.

இஸ்ரேலுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் சட்டவிரோதமாக வேலைக்கு  800- 1000 இலங்கையர்கள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக காசா மற்றும் மேற்குக் கரையில் இருந்து பாலஸ்தீன தொழிலாளர்களை அழைத்து வருவது தற்போது கடினமாக உள்ளது. இதனை மனிதக் கடத்தல்காரர்கள் அதிக வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

இதில் சிக்கும் பெண்கள் பயணிக்கும் வழியில் கடத்தல்காரர்களினால் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

குறித்த கடத்தல் கும்பல்கள் இலங்கையில் உள்ள தங்கள் முகவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். உள்ளூர் முகவர்கள் சட்டவிரோதமாக வேலை தேடுபவர்களுக்கு ஆவணங்களையும் தயார் செய்கிறார்கள்.

அவர்கள் ஒரு பகுதியாக கட்டணம் வசூலிக்கிறார்கள் பின்பு  முழு கட்டணம் செலுத்தப்பட்டவுடன் கடவுச்சீட்டை வெளியிடுகிறார்கள்.

அண்மையில்  ஜோர்தான் எல்லை ஊடாக சட்டவிரோதமாக பிரவேசித்த இரு இலங்கையர்கள் இஸ்ரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13