மஹிந்­தவின் அர­சியல் முடி­வுக்கு வரு­கி­றதா?

Published By: Vishnu

15 Oct, 2023 | 06:28 PM
image

கார்­வண்ணன்

மஹிந்த ராஜபக்ஷவின் அர­சியல் சகாப்தம் முடி­வுக்கு வரப் போகி­றதா? அண்­மையில் அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற கருத்­துகள் தான் இந்தக் கேள்வி உரு­வாக காரணம்.

கடந்த வாரம் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்குப் பதி­ல­ளித்த அவர் “மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் எதிர்­பார்ப்பு தனக்கு இல்லை என்றும், போது­மா­ன­ள­வுக்கு நாட்டை ஆட்சி செய்து விட்டேன், புதிய தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­பட வேண்டும், முன்­னோக்கி செல்ல வேண்டும்” என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் யார் என்ற ஆராய்ச்­சிகள் தீவி­ர­மாக நடந்து கொண்­டி­ருக்கும் நிலையில், அந்தக் கட்­சியின் பிர­மு­கர்கள் பலரும் பல­வி­த­மான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் நிலையில் தான்- மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து இந்தக் கருத்து வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக இருக்­கின்ற போதும், அவர் அந்தப் பத­வியில் நீண்­ட­காலம் தொட­ரு­கின்ற எண்­ணப்­பாட்டைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்­ப­தையே அவ­ரது இந்தக் கருத்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

77 வய­து­டைய மஹிந்த ராஜபக்ஷ ஏற்­க­னவே இரண்டு முறை ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்து விட்­டதால் இனி, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யிட முடி­யாது.

அவர் ஜனா­தி­பதி பத­வியில் இருந்து வில­கிய பின்­னரும் கூட, இரண்டு முறை பிர­தமர் பத­வியை ஏற்றுக் கொண்­டாலும், அற்ப ஆயுளில் அந்தப் பதவி பறி­போ­னது. 2018 இல் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பிர­த­ம­ராக்­கப்­பட்ட அவர்,  52 நாட்கள் மட்டும், பத­வியில் இருந்தார்.

2019இல் கோட்­டா­பய ராஜபக்ஷவினால், பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 2022 மே மாதம் வரையே அந்தப் பத­வியில் இருக்க முடிந்­தது.

2015 ஜனா­தி­பதி தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­விக்குப் பின்னர், அர­சி­யலில் இருந்து வில­குவார் என எதிர்­பார்க்­கப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவை, மீண்டும் அர­சி­யலில் வெற்­றி­யாளர் ஆக்­கி­ய­வர்­களே, 2022இல் அவரை தோல்­வி­யாளர் ஆக்­கு­வதில் கணி­ச­மான பங்கை வகித்­தி­ருந்­தனர்.

ஜனா­தி­பதி தேர்தல் தோல்­விக்குப் பின்னர் அர­சி­யலில் இருந்து ஒதுங்கி அமை­தி­யாக வாழத் தொடங்­கி­யி­ருந்தால், அதற்குப் பின்­ன­ரான காலத்தில் மோச­மான தோல்­விகள், அவ­மா­னங்­களை சந்­திக்கும் நிலை அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­காது. ஜனா­தி­பதி தேர்தல் தோல்­விக்குப் பின்னர் மீண்டும்  தீவிர அர­சி­ய­லுக்கு வந்த மஹிந்த ராஜபக் ஷ அர­சி­யலில் இருந்து விலகும் பேச்­சுக்கே இட­மில்லை என்றும், உயி­ருடன் இருக்கும் வரை அர­சி­யலில் இருப்பேன் என்றும் கூறி­யி­ருந்தார்.

ஆனால், இப்­போது அவர் நாட்டில் அதி­கா­ரத்தை செலுத்­தி­யது போதும், இனி­மேலும் அதி­கா­ரத்­துக்கு வர ஆசைப்­ப­ட­வில்லை என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, சாகும் வரை அர­சி­யலில் இருக்கும் நிலைப்­பாட்­டையும் அவர் உறுதி செய்­தி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ இப்­போது வயது மூப்­பினால்  தளர்ச்­சி­ய­டையத் தொடங்­கி­யி­ருக்­கிறார். அர­சியல் ரீதி­யா­கவும் அவர் தளர்ந்து வரு­கிறார்.

இவ்­வா­றான நிலையில் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வது குறித்து அவரால் எதிர்­பார்ப்­பு­களை வைக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அதை­விட, பொது­ஜன பெர­மு­ன­வுக்குள் தற்­போது காணப்­ப­டு­கின்ற குழப்­பங்­களை நீக்கி, புதிய தலை­மைத்­து­வத்தின் கீழ் அதனைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய அவ­சி­யமும் அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளி­யே­றி­ய­தாக அறி­விக்­கா­ம­லேயே, நழுவிக் கொண்டு போய், பொது­ஜன பெர­மு­னவில் சங்­க­ம­மா­கி­யி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ. ஆரம்­பத்தில் அந்தக் கட்­சியை பசில் ராஜபக் ஷவே உரு­வாக்கி, ஒரு கட்­டத்தில் அதனை மஹிந்­த­விடம் கொடுத்தார்.

அது மஹிந்த ராஜபக் ஷவை மையப்­ப­டுத்­தியே உரு­வாக்­கப்­பட்­டது. அவர் இல்­லாமல் பொது­ஜன பெர­மு­னவை உரு­வாக்­கி­யி­ருக்­கவும் முடி­யாது. இந்­த­ளவு வேக­மாக அதனை மக்கள் மத்­தியில் கொண்டு சென்று வெற்­றியைப் பெற்­றி­ருக்­கவும் முடி­யாது.

பொது­ஜன பெர­மு­ன­வுக்குள் முடி­வு­களை எடுப்­பதில் பஷில் ராஜபக் ஷவின் தலை­யீ­டுகள் இருந்­தாலும், பின்னர் கோட்­டா­பய ராஜபக் ஷ, மஹிந்­த­வுடன் கலந்­தா­லோ­சிக்­காமல் முடி­வு­களை எடுத்­தாலும், கட்­சியில் மஹிந்­தவே  எல்­லா­மு­மாக இருந்தார்.

2019இற்குப் பின்னர் அவர் பிர­தமர் பத­வியில் இருந்­தாலும் அவ­ரி­டத்தில் அதி­காரம் இருந்­ததா என்ற கேள்வி இருந்­தது. ஏனென்றால், அப்­போது எடுக்­கப்­பட்ட பல முடி­வுகள் மஹிந்­தவின் கையை மீறி எடுக்­கப்­பட்­டவை என்­பதில் சந்­தேகம் இல்லை.

பொது­ஜன பெர­முன கட்சி என்­பது ராஜபக் ஷவி­ன­ருக்கு முக்­கி­ய­மா­னது. அவர்­களின் மீள் எழுச்­சிக்கும், அவர்­களின் அர­சியல் தொடர்ச்­சிக்கும் அது அவ­சி­ய­மா­னது. அந்தக் கட்சி இப்­போது அந்­த­ரத்தில் நிற்­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அதி­கா­ரத்தில் அமர்த்­தி­யதால், இப்­போ­தைக்கு தப்பிப் பிழைத்­தி­ருக்­கி­றது. ஆனால், இது நிரந்­த­ர­மான தீர்வு அல்ல.

ரணிலின் பத­விக்­காலம் முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்னர், பொது­ஜன பெர­மு­னவின் எதிர்­கால திட்­டத்தை தெளி­வாக வகுக்க வேண்­டிய நிலையில் மஹிந்த ராஜபக் ஷ இருக்­கிறார்.

இதே­போக்கில் இருந்தால், மக்­களின் ஆத­ரவை வெற்றி கொள்­வது கடினம் என்­பது அவ­ருக்கு நன்­றாக புரிந்­தி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ வைப் பொறுத்­த­வ­ரையில் இரண்டு முக்­கிய நோக்­கங்­களை நிறை­வேற்ற வேண்­டிய நிலையில் இருக்­கிறார்.

ஒன்று- பொது­ஜன பெர­மு­னவை குழப்­பங்­களில் இருந்து மீட்டு, அதனை வெற்­றி­பெற வைப்­பது.

இரண்டு, பொது­ஜன பெர­மு­னவின் ஊடாக ராஜபக் ஷ குடும்­பத்தை மீண்டும் அர­சியல் அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வது. இந்த இரண்டு நோக்­கங்­க­ளையும் நிறை­வேற்­று­வது தான் மஹிந்த ராஜபக் ஷவின் இப்­போ­தைய தேவை­யாக இருக்­கி­றது.

குறிப்­பாக நாமல் ராஜபக் ஷவின் பாது­காப்­பான அர­சியல் எதிர்­கா­லத்தை உறுதி செய்ய வேண்­டி­யது அவ­ருக்கு முக்­கி­ய­மா­னது.

மஹிந்த ராஜபக் ஷ தவிர்ந்த வேறெ­வ­ராலும் அதனை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க முடி­யாது என்­பதும், ராஜபக் ஷ குடும்­பத்­தி­லுள்ள மற்­ற­வர்­களால் அனை­வ­ரையும் ஒருங்­கி­ணைக்க முடி­யாது என்­பதும் மஹிந்­த­வுக்குத் தெரிந்த விட­யங்கள் தான்.

இவ்­வா­றான நிலையில்,  மீண்டும் அதி­கா­ரத்தில் அம­ரு­வதை விட முக்­கி­ய­மான பொறுப்பு மஹிந்த ராஜபக் ஷவுக்கு உள்­ளது. அவர் கட்­சி­யையும், குடும்­பத்­தையும் பலப்­ப­டுத்­தினால் தான் பாது­காப்­பான நிலையை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

கோட்­டா­பய ராஜபக் ஷவின் ஆட்­சிக்­காலம் பொது­ஜன பெர­மு­ன­வுக்கும், ராஜபக் ஷ குடும்­பத்­துக்கும் சவா­லா­ன­தாக மாறி­விட்­டது. கட்­சிக்குள் இருந்­த­வர்கள் பலர் வெளியே போய் சுயா­தீன அணி­க­ளாக இருக்­கி­றார்கள்.

கட்­சி­யுடன் கூட்­டணி வைத்­த­வர்­களும், சுயா­தீன அணியில் இணைந்­தி­ருக்­கி­றார்கள்.

ஆக, 2015இல் தோல்­வி­ய­டைந்து தங்­கா­லையில் ஓய்­வெ­டுத்துக் கொண்­டி­ருந்த மஹிந்த ராஜபக் ஷ வைத் தட்டி­யெ­ழுப்பி, மீண்டும் அர­சியல் மேடைக்கு கொண்டு வந்த பெரும்­பா­ன­வர்கள் இப்­போது அவ­ருடன் இல்லை. இது ஒரு இக்­கட்­டான சூழல்.

இதனைக் கடந்து செல்ல வேண்­டு­மானால் அது மஹிந்த ராஜபக் ஷவினால் மாத்­தி­ரமே முடியும்.

விட்டுப் போன­வர்­களை ஒன்­றி­ணைக்க இன்­னொரு வழியும் உள்­ளது. அது சிங்­கள பௌத்த தேசி­ய­வாதம்.

தன்னால் முடி­யாது போனால் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் தேசி­ய­வா­தத்தை கையில் எடுத்­தா­யினும் பொது­ஜன பெர­மு­னவை மீளக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிப்பார்.

இவ்­வா­றான நிலையில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக நில­வு­கின்ற குழப்­பங்­களும் மஹிந்­த­வுக்கு சவா­லா­கவே இருக்­கி­றது.

மூன்­றெ­ழுத்துக் கொண்­டவர் தான் மொட்டு வேட்­பாளர் என்று பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார். சிங்களத்தில், பஷில், நாமல், சமல் மாத்திரமல்ல, யோசித, ரோஹிதவும் கூட மூன்றெழுத்து பெயர்கள் தான்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக் ஷ குடும்பத்தில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யப் போகிறதா என்பது முக்கியமானது.

அவ்வாறு தெரிவு செய்தால் தான் கட்சியில் ராஜ பக் ஷ குடும்பத்தின் செல்வாக்கு பாதிக்கப்படாமல் இருக்கும்.

ராஜபக் ஷ குடும்பத்தின் வேட்பாளர் வெற்றி பெறக் முடியாது போனாலும், ராஜபக் ஷ குடும்பத் தின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப் பதை உறுதி செய்வது தான் இப்போது மஹிந்தவுக்கு அவசியம்.

அதுதான் அவரது எதிர்கால திட்டமாக இருக்கும். அதற்காகத் தான் அவர் அரசியலில் நீடிக்கப் போகிறார், அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவும் தயாராகி விட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும்...

2025-03-15 09:52:48
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு...

2025-03-14 20:24:33
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் வீடுகளை களனிபொலிஸின்...

2025-03-14 12:22:27
news-image

தொந்தரவு தரும் மீனவர் தகராறுக்கு தீர்வு...

2025-03-14 08:57:28
news-image

அரசாங்கம் அதன் மந்தவேகத்துக்கு விளக்கம் தரவேண்டியது...

2025-03-13 14:14:51
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவை 58...

2025-03-12 13:39:38
news-image

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?-

2025-03-11 16:44:44
news-image

அட்லாண்டிக்கில் ஏற்படும் பிளவு

2025-03-11 12:02:06
news-image

அண்ணாவையும் எம்.ஜி. ஆரையும் போன்று தன்னாலும்...

2025-03-11 09:26:14
news-image

தடைகள் தகர்க்கப்படுகின்றனவா அல்லது சுவர்கள் எழுப்பப்படுகின்றனவா?

2025-03-10 19:13:31
news-image

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் மருத்துவர் தன்மீதான...

2025-03-10 13:35:49
news-image

வனவளத் திணைக்கள அதிகாரிகள் வாகரையில் பற்றவைத்த...

2025-03-09 16:15:23