கைவிடப்பட்ட ஜெய்சங்கரின் திருகோணமலை விஜயம்

Published By: Vishnu

15 Oct, 2023 | 06:29 PM
image

நமது அர­சியல் நிருபர்

2024ஆம் வருடம் நடைபெறும் என உத்­தே­சிக்­கப்­ப­டு­கின்ற தேர்­தல்கள் குறித்து தற்­போது பல்­வேறு சர்ச்­சைகள் ஆளும் கட்­சிக்குள் உரு­வெ­டுத்­துள்­ளன. அதா­வது ஜனா­தி­பதி தேர்­தலை முதலில் நடத்­து­வதா? அல்­லது பாரா­ளு­மன்ற தேர்­தலை நடத்­து­வதா? என்­பதே ஆளும் கட்­சிக்குள் தற்­போ­துள்ள நெருக்­க­டி­யாகும். பஷில் ராஜ­ப­க் ஷ­வுடன் நெருக்­க­மான ஆளும் கட்­சியின் உறுப்­பி­னர்கள் முதலில் பாரா­ளு­மன்ற தேர்­தலை நடத்­து­மாறு வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஜனா­தி­ப­திக்கு நெருக்­க­மான ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் சிலரும் முதலில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வது ஆட்­சிக்கு நல்­லது என்று வலி­யு­றுத்­து­கின்­றனர். எந்தத் தேர்தல் வந்­தாலும் எந்­த­வொரு கட்­சியும் தனித்து போட்­டி­யிட விரும்­ப­வில்லை என்­பதை தேசிய அர­சியல் நகர்­வு­களின் ஊடாக உணர முடி­கி­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் கடந்த வாரம் முழு­வதும் பிர­தான கட்­சிகள் அனைத்­துமே தமது அர­சியல் முகாம்­களை வலுப்­ப­டுத்­து­வதில் தீவி­ர­மாக செயல்­பட்­டன.

ஜனா­தி­ப­தியின் அவ­தானம்

இலங்­கையில் இடம்­பெற்ற சர்­வ­தேச மாநா­டு­களில் கலந்­து­கொள்­வ­திலும் நாட்­டிற்கு வருகை தந்­தி­ருந்த 28 நாடு­களின் வெளி­வி­வ­கார அமைச்­சர்கள் மற்றும் பாது­காப்பு துறை­சார்ந்த அதி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­திலும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூடுதல் கவனம் செலுத்­தி­யி­ருந்தார்.

இலங்கை கடந்­த­கால நெரு­டிக்­க­டி­யான நிலை­மை­களை கடந்து நம்­பிக்­கை­யுடன் முன்­னேறி வரு­வது குறித்து பன்­னாட்டு அமைச்­சர்­க­ளுக்கும் சந்­திப்­புக்­களில் தெளி­வுப்­ப­டுத்­திய ஜனா­தி­பதி, இது­வரை காலமும் இலங்கை தொடர்பில் சர்­வ­தேசம் கொண்­டி­ருந்த அசா­தா­ர­ண­மான நிலைப்­பா­டுகள் தற்­போது புதிய நம்­பிக்­கை­க­ளுக்கு வித்­திடும் வகையில் மாற்­ற­ம­டைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில், வழ­மைப்போல் கடந்த திங்­கட்­கி­ழமை காலை தனது அலு­வ­ல­கத்­திற்கு சென்ற ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துடன் நேர­டி­யாக தொடர்­பு­படக் கூடிய பல்­வேறு விட­யங்கள் குறித்து அவ­தானம் செலுத்­தி­யி­ருந்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்

குறிப்­பாக சர்­வ­தே­சத்தின்  அவ­தா­னத்­திற்கு உட்­பட்­டுள்ள இஸ்ரேல் -– பலஸ்­தீன    போர் குறித்து இதன் போது பேசப்­பட்­டது.

உலக வல்­ல­ர­சு­க­ளுக்கு இடையில் ஏற்­படக் கூடிய எந்­த­வொரு நெருக்­க­டி­யான நிலை­மையும் இலங்கை போன்ற அபி­வி­ருத்தி அடைந்து வரும் சிறிய நாடு­க­ளுக்கு பாரி­ய­ளவில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என கூறிய அரச தகவல் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் தினித் சிந்­தக, இஸ்ரேல் - ஹமாஸ் போர் சூழலை கலந்­து­ரை­யா­ட­லுக்குள் கொண்டு வந்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிலை­மைகள் எந்­த­ளவு தூரம் செல்லும் என்று கூற இய­லாது. ஆனால் எரி­பொருள் மற்றும் எரி­வாயு விலை­களின் ஏற்­றத்­திற்கு கார­ண­மாகி விடும் என்று ஜனா­தி­பதி ரணில் இதன் போது கூறினார்.

ஆம்... உலக சந்­தையில் எரி­பொ­ருள்­களின் விலை அதி­க­ரித்­துள்­ளது. இஸ்ரேல் –- ஹமாஸ் போருக்கு முன்னர் விலைகள் குறைந்து வந்த போதிலும் தற்­போது வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வஜிர அபே­வர்­தன குறிப்­பிட்டார்.

எரி­பொருள் விலை­யேற்றம் ஏற்­பட்டால் ஏனைய அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்கும். இது நேர­டி­யா­கவே மக்­களை பாதிக்கும் என்று ஜனா­தி­பதி அலு­வ­லக பிர­தானி சாகல ரத்­நா­யக்க இதன் போது ஜனா­தி­ப­தியை நோக்கி கூறினார்.

இந்த நிலை­மையை மக்­க­ளுக்கு எடுத்து கூற வேண்டும். ஏனெனில் சில விட­யங்­களை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடியும். மேலும் சில விட­யங்­களை எம்மால் கட்­டுப்­ப­டுத்த இய­லாது. எனவே தான் உண்மை நிலை­மையை மக்­க­ளுக்கு எடுத்­து­ரைப்­பது முக்­கி­ய­மாகும் என ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக­நா­யக்க இங்கு தெரி­வித்தார்.

அமைச்­ச­ரவை கூட்­டத்தில் இந்த விடயம் குறித்து பேசு­வ­தாக உறு­தி­ய­ளித்த ஜனா­தி­பதி, நாட்டு மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­து­வ­தா­கவும் இதன் போது கூறினார்.

ஹரின் – மனு­ஷவின் பத­விகள்

கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை வழ­மைப்போல் அமைச்­சர்கள் மற்றும் ஆளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய ஜனா­தி­பதி சம­கால அர­சியல் நிலை­மைகள் குறித்து கருத்­துக்­களை கூறினார்.

எங்­க­ளது அமைச்சு பத­விகள் இல்­லாமல் போய் விடும் என்றே பலரும் கூறு­வ­தாக அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ ஜனா­தி­ப­தியை நோக்கி குறிப்­பிட, வீணாக அச்­சப்­பட வேண்டாம். நஷீர் அஹ­மட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி குறித்து வழங்­கப்­பட்ட நீதி­மன்ற தீர்ப்பை தெளி­வாக வாசி­யுங்கள் என்று அனை­வ­ரையம் நோக்கி ஜனா­தி­பதி கூறினார்.

குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து கட்­சியின் உயர்­பீடம் அனுப்­பிய கடி­தத்­திற்கு தன்னை நியா­யப்­ப­டுத்தி நஷீர் அஹமட் பதி­ல­ளித்­தி­ருக்­க­வில்லை. மாறாக பதி­ல­ளிக்க கால அவ­கா­சத்­தையே கோரி­யி­ருந்தார். தனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் தவ­றென்­பதை அவர் குறிப்­பிட்­டி­ருக்க வேண்டும். அதனை செய்ய தவ­றி­ய­மை­யி­னா­லேயே நீதி­மன்றம் இவ்­வா­றா­ன­தொரு தீர்ப்பை வழங்­கி­யது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வஜிர அபே­வர்­தன நீண்ட விளக்­கத்­துடன் இந்த விட­யத்தை தெளி­வுப்­ப­டுத்­தினார்.

ஆறுதல் கூறிய முக்­கி­யஸ்தர்

அமைச்சர் நஸீர் அஹமட்­டுக்கு எதி­ரான உயர்­நீ­தி­மன்றத் தீர்ப்பு அவ­ரது எம்.பி. பத­விக்கு ஆப்பு வைத்­தி­ருக்­கின்­றது. இதனால் கட்சி மாறிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தற்­போது அச்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­றனர்.

தற்­போ­தைய ஆளுங் கட்சி பக்கம் தாவி­யுள்­ள­வர்­களும் எதிர்க்­கட்­சியில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­ப­வர்­களும் இவ்­வாறு அச்சம் அடைந்­தி­ருக்­கின்­றனர். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் ஆளுங்­கட்­சியின் புதிய அர­சியல் கூட்­ட­ணியின் முக்­கி­யஸ்தர்கள்  அச்சம் கொள்ளத் தேவை­யில்­லை­யென்று கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

நஸீர் அஹமட் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து ஆளும் தரப்­புக்கு கோட்­டா­பய ராஜ­ப­க் ஷ காலத்தில் மாறி­யி­ருந்தார். அவ­ருக்கு அன்று அமைச்சு பதவியும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆளும் தரப்பில் இணைந்­துள்­ள­வர்­க­ளுக்கு நஸீர் அஹமட்டின் விடயம் பொருந்­தாது என்று இந்த முக்­கி­யஸ்தர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதனால் எவரும் அச்சம் கொள்ளத் தேவை­யில்­லை­யென்றும் அவர் ஆறுதல் கூறி­யி­ருக்­கின்றார்.

சீன கடன் நிவா­ரணம்

இதனை தொடர்ந்து கருத்து தெரி­வித்த பேரா­சி­ரியர் ஆசு மார­சிங்க, சீன கடன் நிவா­ரணம் தொடர்­பாக சர்­வ­தேச நாணய நிதியம் அறி­ய­வில்லை என்­பது உண்­மையா? என கலந்­து­ரை­யா­டலை வேறு திசைக்கு கொண்டு செல்லும் வகையில் ஜனா­தி­ப­தியை நோக்கி கேள்வி எழுப்­பினார்.

ஆம். அதனை சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் கூற­வில்லை. சீனா­வுடன் கடன் நிவா­ரணம் குறித்து கலந்­து­ரை­யா­டினோம். எமது கோரிக்­கையை சீன தரப்பு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. கலந்­து­ரை­யாடல் நிறை­வ­டைந்த பின்னர் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி அலு­வ­லக பிர­தானி சாகல ரத்­நா­யக்க இதன் போது நிலை­மையை தெளி­வுப்­ப­டுத்­தினார்.

அதனை தொடர்ந்து மற்­று­மொரு கேள்­வியை முன்­வைத்த அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க, சர்­வ­தேச நாணய நிதியம் 2 ஆம் கட்ட நிதியை இலங்­கைக்கு வழங்­காது என்று எதிர்க்­கட்சி கூறு­வதில் உண்மை உள்­ளதா என கேள்வி எழுப்பினார்.

எமக்கு மக்கள் மீது இனியும் பொரு­ளா­தார சுமை­களை சுமத்த இய­லாது. ஆனால் அரச வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் யோசனை திட்­டத்தை சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் கைய­ளித்­துள்ளோம். அதனை அவர்­களால் நிரா­க­ரிக்க இய­லாது. எனவே 2 ஆம் கட்ட நிதியை நாணய நிதியம் எமக்கு வழங்கும் என்று இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய இங்கு சுட்­டிக்­காட்­டினார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் கூட்டம்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பதவி நிலை­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­க­ளுக்கு அமைய கட்­சியின் மத்­திய செயற்­குழு வியா­ழக்­கி­ழமை மாலை கூடி­யது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு கட்­சியின் பொதுச் செய­லாளர் அல்­லது பிரதித் தலைவர் பத­வியை வழங்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட யோசனை குறித்து ஜனா­தி­பதி ரணில் மத்­திய செயற்­கு­ழுவில் குறிப்­பிட்டார்.

ஆனால் கட்­சியின் பத­வி­களில் தற்­போ­தைக்கு எவ்­வி­த­மான மாற்­றங்­க­ளையும் செய்ய வேண்டாம் என்ற கோரிக்­கையை பெரும்­பா­லான மத்­திய செயற்­குழு உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தினர். இதனால் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு சார்­பான யோசனை நிரா­க­ரிக்­கப்­பட்டு பதவி நிலை­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தா­தி­ருக்க இதன் போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

வரவு – செலவுத் திட்டம்

2024 ஆம் ஆண்­டுக்­கான வரவு –- செலவுத்திட்டம் எதிர்­வரும் நவம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­பட உள்­ளது. இதனை ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வரவு -– செலவுத் திட்­ட­மாக முன்­வைக்க  வேண்டும் என்ற விட­யத்தை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் பிர­தமர் தினேஷ் குண­வர்­த­ன­விடம் பஷில்  ராஜ­ப­க் ஷ  ஏற்­க­னவே வலி­யு­றுத்தி இருந்தார்.

அதா­வது மக்­க­ளுக்கு கூடுதல் நிவா­ர­ணங்கள் மற்றும் சலு­கை­களை வழங்கும் வகையில் இந்த வரவு -– செலவுத் திட்டம் இருக்க வேண்டும் என்­பது பஷிலின்   வலி­யு­றுத்­த­லாக உள்­ளது. இதனை மையப்­ப­டுத்­தியே பொது­ஜன பெர­மு­னவின் ஊடக சந்­திப்­புகள் இடம்­பெ­று­கின்­றன. குறிப்­பாக பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள பொது­ஜன பெர­முன அலு­வ­லக ஊடக சந்­திப்­பு­களில் 2024 ஆம் ஆண்டு வரவு –- செலவுத் திட்­டத்தில் மக்­க­ளுக்கு கூடிய சலு­கைகள் வழங்­கப்­படும் என்ற விட­யத்தை பஷில் ராஜ­ப­க் ஷவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய அதில் பங்­கேற்­ப­வர்கள் கூறி வரு­கின்­றனர்.

ஜனா­தி­பதி வேட்­பாளர்

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு வழங்கப் போவ­தில்லை என்ற நிலைப்­பாடு ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றானால் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பது குறித்து பல்­வேறு ஊகங்கள் அர­சியல் மட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக மூன்­றெ­ழுத்தில் பெயர் கொண்ட கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வர் வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அர­சியல் அரங்­கு­களில் பேசப்­ப­டு­கின்­றது. ஆனால் வேட்­பாளர் யார் என்­பதை பஷில் ராஜ­ப­க் ஷ தலை­மை­யி­லான குழு­வினர் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும், நிச்­ச­ய­மாக அவர்  மூன்­றெ­ழுத்தில் பெயர் கொண்­டவர் அல்ல என்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தக­வல்கள்  கூறு­கின்­றன.

புதிய அர­சியல் கூட்­டணி

ஆளும் கட்­சிக்குள் உரு­வெ­டுத்து வரும் புதிய அர­சியல் கூட்­ட­ணியின் சம்­மே­ளனம் மற்றும் மாவட்ட ரீதி­யி­லான பிர­சாரக் கூட்­டங்கள் குறித்து முக்­கிய கலந்­து­ரை­யா­டல்கள் கடந்த வாரம் முழு­வதும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்த கலந்­து­ரை­யா­டல்­களில் பல அர­சியல் கட்­சி­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் 12 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். அடுத்­து­வரும் தேர்­தல்­களில் வெற்றி இலக்­கு­களை அடை­வ­தற்காக   மக்கள் ஆத­ரவை மேலும் வலுப்­ப­டுத்த தேவை­யான நட­வ­டிக்­கைகள் குறித்து பல்­வேறு யோச­னைகள் இதன் போது முன்­வைக்­கப்­பட்­டன.

புதன்­கி­ழமை சந்­திப்பு

அர­சி­ய­லுடன் தொடர்­புப்­பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர்கள் சிலர் புதிய அர­சியல் கூட்­ட­ணியின் செயல்­பாட்­டா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இந்த கலந்­து­ரை­யாடல் கடந்த புதன்­கி­ழமை பிற்­பகல் கொழும்பில் அமைந்­துள்ள நட்­சத்­திர ஹோட்­டலில் இடம்­பெற்­றது. புதிய கூட்­ட­ணியின் செயல்­பாட்டு தலைவர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, நிமல் லான்சா  மற்றும் சுகீஷ்­வர பண்­டார ஆகியோர் இதன் போது கலந்­துக்­கொண்­டி­ருந்­தனர்.

பல்­வேறு அர­சியல் கூட்­ட­ணிகள் ஏற்­க­னவே உள்­ளன. எதிர்­கா­லத்­திலும் அவ்­வா­றான அர­சியல் நோக்­கங்­களை முன்­வைத்த கூட்­ட­ணிகள் உரு­வா­கலாம். எனவே உங்­க­ளது இந்த அர­சியல் கூட்­ட­ணியும் சரா­ச­ரி­யா­ன­தாக இருந்து விடக் கூடாது. மாறாக மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை ஈடு­செய்யக் கூடி­ய­தாக இருக்க வேண்டும் என்று கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்ற முன்னாள் நட்­சத்­திர கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அவ்­வாறு இல்லை. நாங்கள் ஆத­ரவு வழங்­கிய தலை­வர்­களை இன்று மக்கள் புறக்­க­ணித்­துள்­ளனர். எனவே மாற்று தலை­மை­க­ளையே மக்கள் விரும்­பு­கின்­றனர். வெற்றி பெறக் கூடிய, மக்கள் விரும்­பு­கின்ற ஒரு­வரை அடுத்த தலை­வ­ராக தெரிவு செய்வோம். இதற்­காக ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது என்று  அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஜெய்­சங்­கரின் கிழக்கு மாகாண விஜயம்  ரத்து

இந்து சமுத்­திர எல்லை நாடு­களின் சங்­கத்தின் 23ஆவது அமைச்­சர்கள் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக வருகை தந்­தி­ருந்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி சுப்­பி­ர­ம­ணியம் ஜெய்­சங்கர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். அவர் முன்­னி­லையில் மூன்று ஒப்­பந்­தங்­களும் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் அவ­ரது இந்த விஜ­யத்­தின்­போது, கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­ம­லைக்குச் செல்­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்­ட­மா­னுடன் சந்­திப்பு, நலத்­திட்­டங்கள் வழங்­குதல் மற்றும் இந்­திய நிதி உத­வியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற, முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள திட்­டங்கள் பற்­றிய கள ஆய்வு மற்றும் வர­லாற்றுச் சிறப்பு மிக்க திருக்­கோ­ணஸ்­வர ஆல­யத்­துக்­கான விஜயம் உள்­ளிட்­டவை நிகழ்ச்சி நிர­லி­டப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக, இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரகம் மற்றும் யாழ்ப்­பா­ணத்­துக்­கான துணைத்­தூ­த­ரகம் ஆகி­ய­வற்றின் அதி­கா­ரிகள் ஜெய்­சங்­கரின் கிழக்கு விஜ­யத்­துக்­கான ஏற்­பா­டு­களை கவ­னித்­துக்­கொள்­வ­தற்­காக அங்கே முகா­மிட்டும் இருந்­தனர். எனினும் இறுதி நேரத்தில் அவ­ரது விஜயம் ரத்துச் செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இதற்­கான காரணம், இஸ்ரேல் – பலஸ்­தீன மோதல் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில், அங்­குள்ள இந்­தி­யர்­களை பாது­காப்­பாக நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்­கான செயற்­பா­டுகள் உள்­ளிட்ட வெளி­வி­கார அமைச்சின் முக்­கிய செயற்­பா­டுகள் பல­வற்றை நேர­டி­யாக இருந்து கவ­னித்­துக்­கொள்­வ­தற்­காக அவர் அவ­ச­ர­மாக நாடு திரும்­ப­வேண்­டி­யி­ருந்­துள்­ளது. இத­னை­ய­டுத்தே அவர் மாநாட்டை முடித்­துக்­கொண்டு அன்­றி­ரவே நாடு திரும்­பி­யி­ருந்தார்.

இந்­தியா, இஸ்­ரேலில் உள்ள இந்­தி­யர்­களை பாது­காப்­பாக மீண்டும் நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்­காக இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை ‘ஒப்­ப­ரேஷன் அஜய்’ என்ற திட்­டத்­தினை ஆரம்­பித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரெலோவின் மீதான பங்­கா­ளி­களின் சஞ்­சலம்

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி ஆகிய ஐந்து தரப்­புக்­களும் இணைந்­துள்ள கூட்­டணி தான் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­டணி. இந்தக் கூட்­டணி அண்­மைய நாட்­களில் நீதி­பதி ரி.சர­வ­ண­ரா­ஜா­வுக்கு நீதி வேண்டி மனிதச் சங்­கிலி போராட்­டத்தில் பங்­கெ­டுத்­தி­ருந்­தது. அதே­போன்று எதிர்­வரும் 20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழு­விய பூரண ஹர்த்தால் அனுஷ்­டிப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் குறித்த விட­யங்கள் சம்­பந்­த­மான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் கூட்­டத்தில் ரெலோவின் முக்­கி­யஸ்­தர்கள் யாரும் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், பேச்­சாளர் குரு­சு­வாமி சுரேந்­திரன், வினோ எம்.பி. உள்­ளிட்­ட­வர்கள் யாழில் நடை­பெற்ற எந்­த­வொரு கூட்­டங்­க­ளிலும் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

அவர்­களின் பிர­தி­நி­தி­யாக முன்னாள் வலி.கிழக்கு தவி­சாளர் தியா­க­ராஜா நிரோஷ் மட்­டுமே பங்­கேற்­றி­ருந்தார். அதே­நேரம் விந்தன் கன­க­ரத்­தி­னத்தின் ஆத­ரவும் காணப்­பட்­டது. இதனால் தற்­போது பங்­கா­ளிக்­கட்­சிகள் ரெலோ எதற்­காக பின்­ன­டிப்புச் செய்­கின்­றது என்ற சஞ்­ச­லத்­தினை அடைந்­துள்­ள­னராம்.

விசே­ட­மாக, கட்­சி­களை ஒருங்­கி­ணைத்தல், அனைத்­துக்­கட்சி கூட்­டங்­களில் பங்­கெ­டுத்தல், ஊடக அறிக்­கை­களை தயா­ரித்து வெளி­யி­டுதல் போன்ற செயற்­பா­டு­களில் அதி­க­ளவு ஆர்­வத்­துடன் செயற்­படும் சுரேந்­திரன் ஒதுங்கிக் கொண்­டுள்­ள­மை­யாது ஆச்­ச­ரி­ய­ம­ளிப்­ப­தாக பங்­காளிக் கட்­சி­யினர் கூறு­கின்­றனர்.

மேலும், ஹர்த்தால் அனுஷ்­டிப்பை வினோ எம்.பி.போன்­ற­வர்கள் பகி­ரங்­க­மா­கவே விமர்­சித்­துள்ள நிலையில் ரெலோவின் போக்கு எதனை நோக்­கி­யது என்று பங்­காளிக் கட்­சி­யினர் தலையைப் பிய்த்துக் கொள்­கின்­றனர்.

ஜனா­தி­பதி மீதான விக்­கியின் விசனம்

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதான நம்­பிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­கமும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சி.விக்­னேஸ்­வரன் விசனம் வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் நடத்­தப்­ப­டு­வது கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கையில், அர­சியல் கட்­சிகள் மற்றும் ஆளு­நரை மையப்­ப­டுத்­திய ஆலோ­ச­னைக்­கு­ழு­வொன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான யோச­னை­யொன்றை வரைந்து ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வழங்­கி­யி­ருந்தார் விக்­னேஸ்­வரன்.

அந்த யோச­னையின் பிர­காரம் இழக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளவும் பெற்­றுக்­கொள்­ளவும், ஏறக்­கு­றைய ஒரு இடைக்­கால நிரு­வாக சபைக்கு நிக­ரா­ன­தாக அது அமைந்­தி­ருக்கும் என்றும் அவர் கரு­தி­யி­ருந்தார்.

அதற்­கான பணிகள் செப்­டெம்­பரில் ஆரம்­பிக்­கப்­படும் என்றும் பின்னர் அது ஒக்­டோபர் முதல்­வா­ரத்தில் ஆரம்­ப­மாகும் என்றும் அவ­ருக்கு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் உறு­தி­மொழி அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இப்­போது, அந்த உறு­தி­மொ­ழிகள் எவையும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இதனால், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட பல விட­யங்கள் இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யென சுட்­டிக்­காட்டி தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விக்­னேஸ்­வரன் ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை எழு­தி­யுள்ளார்.

குறித்த கடி­தத்தில் ஜேர்மனி  பத்­தி­ரி­கை­யா­ள­ருக்கு ஜனா­தி­பதி அளித்த நேர்­காணல் மூலம் வெளி­நா­டு­களில் பெற்­றி­ருந்த நன்மதிப்பு  அனைத்தும் களங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதன் ஊடாக அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கடும்­போக்கு சிங்­க­ள­வர்­களின் வாக்­கு­களை உறு­திப்­ப­டுத்­தி­ய­போ­திலும் சிங்­க­ள­வர்கள் அல்­லா­த­வர்­களின் வாக்­குகளை இழக்க வேண்டி ஏற்­ப­டலாம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தமிழ் மக்­களின் வாக்­குகள் தேவை­யில்­லா­விடில் தங்­க­ளிடம் அதனை கூறு­மாறும் தமி­ழர்கள் பொது­வான தமிழ் வேட்­பா­ளரை நிய­மிப்­பது பற்றி சிந்­திப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­தக்­கூ­டிய ஆலோ­சனைக் குழு இது­வரை நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அது சம்­பந்­த­மாக எத்­த­கைய நிலைப்­பாட்டில் இருக்­கின்­றீர்கள் என்றும் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இந்தக் கடி­தத்­தினை ஜனா­தி­ப­திக்கு அனுப்பி ­வைத்து மூன்று நாட்­க­ளுக்கும் அதி­க­மான காலம் காத்­தி­ருந்த விக்­னேஸ்­வரன் பதில்கள் எவையும் வழங்­கப்­ப­டாத நிலையில் தான் அதனை ஊட­கங்­க­ளி­டத்தில் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

மஹிந்­தவும் நாமலும் பரஸ்­பர கருத்து

அண்­மைய நாட்­களில் விகா­ரைகள், கோவில்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­களில்  வழி­பா­டு­களை ஆரம்­பித்­துள்ளார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த. இதன்­போது ஊட­கங்­களும் அவரைப் பின்­தொ­டர்ந்து பல கேள்­வி­களைத் தொடுத்­து ­வ­ரு­கின்­றன.

இந்த நிலையில், அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் தான் அவ­ரி­டத்தில் அதி­க­மான வினாக்கள் தொடுக்­கப்­ப­டு­கின்­றன. அதன்போது நீங்கள் போட்டியிடுவீர்களா, நாமலை   களமிறக்குவீர்களா என்றவாறு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தான் அரசியலமைப்பின் பிரகாரம் போட்டியிட முடியாது என்றும் நாமல்  வயதில் சிறியவர் என்றும் கூறியிருந்தார்.

பின்னர், பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலத்தில் பஷில் ராஜபக் ஷவுடனான சந்திப்பினை நிறைவு செய்த பின்னர் நாமல் ராஜபக் ஷவிடத்தில் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகின்றீர்களா, உங்களது தந்தை நீங்கள் வயதில் சிறியவராக இருக்கிக்கின்றீர்கள்  என்று கூறியுள்ளாரே என்று  கேள்வி எழுப்பியபோது, எல்லா தந்தைகளுக்கும் தங்களது புதல்வர்கள் வயதில் சிறியவர்கள் தான். நானும் அவரது புதல்வன் என்பதால் அவர் அவ்வாறு கூறுவதையிட்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் எனது தந்தை 21வயதில் அரசியலுக்கு அழைத்து வந்து சமுத்திரத்தில் தள்ளிவிட்டால் நீந்தி வெளியே வரவேண்டும் என்று கூறி என்னை அம்பாந்தோட்டையில் தள்ளிவிட்டார் என்று பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மஹிந்தவிடத்தில் நாமலை ஜனாதிபதி வேட்பாளராக்குவது தொடர்பில் வினவியபோது, மக்களின் விருப்பம் அதுதான் என்றால் அவர் களமிறங்குவார் என்ற தொனிப்பட பதிலளித்துள்ளார். இவ்வாறு இவர்களது பரஸ்பர கருத்துக்கள் நீண்டுகொண்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் எண்ணம் இல்லையாம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருவதாகவும் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பஷிலின்  யோசனைக்கு இணங்கவே இந்த ஆலோசனை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் அத்தகையதொரு எண்ணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லையென்று ஆளுங்கட்சியின் புதிய அரசியல்  கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர்  கருத்து தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி தலைவர் ஒருவர் புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தருடன் கருத்து பரிமாறிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை. அவ்வாறானதொரு கட்டுக்கதை பரவ விடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறாராம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15
news-image

"தையிட்டி விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள்...

2025-01-21 20:27:32
news-image

அதிகாரம் படைத்தவர்களுடன் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாமல்...

2025-01-21 08:45:36
news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13