சத்ரியன்
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தாமல் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட அறிக்கை, அவர் கனவுலகில் இருக்கிறாரா என சிலரின் நகைப்புக்குள்ளாகியது.
அடுத்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலையும், அதற்கு அடுத்த ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும்.
இந்த இரண்டு தேர்தல்களையும் பிற்போடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் கிடையாது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தல் சட்டம் தெளிவாக கூறியிருக்கிறது.
சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முந்திய வாரம், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், வெளியிட்டிருந்த கருத்தும், சஜித் பிரேமதாசவின் கருத்தை ஒட்டியதாகத் தான் இருந்தது.
கோட்டாபய ராஜபக் ஷவுக்கு வழங்கப்பட்ட மக்களாணையின் மூலம், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால், மேலதிகமாக ஒரு நாள் கூட பதவியில் இருக்க முடியாது, அவ்வாறு இருந்தால் அது அரசியல் சட்டமீறல் என்று அவர் கூறியிருந்தார்.
பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அதற்கு ஆயுள் இருக்காது, தற்போதைய உறுப்பினர்களின் பதவிகள் தானாகவே காலாவதியாகி விடும்.
அவ்வாறிருக்க, தேர்தல்களை நடத்தாமல் விடுவது எப்படி, அதற்கு சட்டம் இடம் கொடுக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆனால், சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை கண்மூடித்தனமாக வெளியிட்டதாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி தேர்தலையோ பாராளுமன்றத் தேர்தலையோ நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அடுத்த ஆண்டில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அண்மையில், எச்சரித்திருந்தார்.
பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திப்போடுவது அரசாங்கத்தின் உத்தியாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் அப்போதே தோன்றியிருந்தன.
ஏற்கெனவே உள்ளூராட்சித் தேர்தலை, நடத்த முடியாத நிலையை அரசாங்கம் இவ்வாறு தான் உருவாக்கியது.
உள்ளூராட்சித் தேர்தலை அறிவித்து நடத்துகின்ற அதிகாரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவே கொண்டிருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, வேட்புமனுக்களையும் ஏற்றுக் கொண்ட போதும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அந்த தேர்தல்களை நடத்த முடியவில்லை.
தேர்தலுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கத் தவறியதால் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்று அறிவித்து விட்டு தேர்தல் ஆணைக்குழு ஒதுங்கிக் கொண்டது.
இலங்கையின் வரலாற்றில் தேர்தல் ஆணைக்குழு அல்லது தேர்தல்கள் ஆணையாளருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது இதுவே முதல் முறை.
தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமானதாக உருவாக்கிய போதும், அதற்கென நிதி அதிகாரம் வழங்கப்படாதது தான் இந்த நிலைக்கான காரணம்.
இதே காரணத்தைக் கொண்டு ஜனாதிபதி தேர்தலையோ, பாராளுமன்றத் தேர்தலையோ நடத்த முடியாத நிலையை அரசாங்கத்தினால் உருவாக்க முடியும்.
அதற்கான வாய்ப்புகள் குறைவு, அது அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றாலும், அவ்வாறானதொரு வாய்ப்பு முற்றிலுமாக இல்லை என்று கூறமுடியாது.
உள்ளூராட்சித் தேர்தல் விடயத்தில் அது நடந்திருக்கிறது.
எவ்வாறாயினும், நிதியை முடக்கி அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலையை உருவாக்கினால், அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
உள்நாட்டில் போராட்டங்கள் மற்றும் குழப்பங்கள் உருவாகவும் காரணமாக அமையும்.
‘அரகலய’ போன்ற இன்னொரு போராட்டம் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.
தேர்தலை அரசாங்கம் உரிய நேரத்தில் நடத்தாது போனால் - மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்றும், அரகலய போன்று அந்த போராட்டம் இருக்கும் என்றும் ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.
எனவே, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கண்ணை திறந்து கொண்டு போய் படுகுழிக்குள் விழாது.
அதேவேளை பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் இன்னொரு வழியை தேர்ந்தெடுக்கத் தயாராகிறதா என்ற சந்தேகங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதுவும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் ஏற்கனவே கையாளப்பட்ட ஒரு உத்தி தான்.
சட்டத்திருத்தங்களை முன்வைத்து, தற்போதைய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த முடியாத நிலையை உருவாக்குவது தான் அந்த உத்தி.
இதன் மூலம் புதிய சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கான காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் தேர்தலை நடத்தாமல் தவிர்க்கலாம்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கம், மாகாணசபைத் தேர்தல் முறை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.
அதன் படி மாகாணசபைத் தேர்தலுக்கான தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், அந்த எல்லை நிர்ணயம் இன்னமும் முடியவில்லை.
அதனைக் காரணம் காட்டியே இன்று வரை மாகாணசபைகளுக்கு தேர்தலை நடத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
அந்த தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கணிசமாக பங்களித்திருந்தது.
ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், சம்பந்தன்- சுமந்திரன் ஆகியோர் அந்த நரித்தந்திர வலைக்குள் சிக்கியிருந்தனர்.
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்துமாறு இப்போது தமிழ்க் கட்சிகள் கோருகின்ற நிலைக்கு காரணமே, அவர்கள் அந்த கலைக்குள் சிக்கிக் கொண்டதன் விளைவு தான். .
அதேபோன்றதொரு உத்தியை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கும் அரசாங்கத்தினால் கையாளப்படலாம் என்ற ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டம், ஜனாதிபதி முறைமை திருத்தம் போன்றவற்றைக் கொண்டு வந்து இந்த இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முற்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
தற்போது 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும், 29 உறுப்பினர்கள் எத்தகைய நவீன தொழில்நுட்ப புலனாய்வு, கண்காணிப்பு வசதிகளை இஸ்ரேல் கொண்டிருந்தாலும், அவையெல்லாவற்றின் கண்களிலும் மண்ணைத் தூவிக் கொண்டு- ஒரு திடீர்ப் பெருந் தாக்குதலை நடத்த முடியும் என்ற இராணுவ பாடத்தை ஹமாஸ் கற்றுக் கொடுத்திருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்குப் பிந்திய ஒன்றரை தசாப்தங்களில் மிக நவீனமான தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.
அவற்றை கையாண்ட இஸ்ரேலை ஏய்த்து விட்டு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பது தான் கவனிக்கப்பட வேண்டியது.
புலனாய்வுத் தவறுதான் இதற்குப் பிரதான காரணம் என்று கூறியிருக்கிறார் இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவின் முன்னாள் தலைவரான டன்னி யாடொம் (Danny Yatom).
“சனிக்கிழமை இஸ்ரேலின் பாதுகாப்பு தந்திரோபாயங்கள் அடியோடு சரிந்து விட்டன. ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது எல்லாமே தவறாகி விட்டது. யாருக்குமே புலனாய்வுத் தகவல் கிடைத்திருக்கவில்லை.” என்று அவர் கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் இஸ்ரேலியர்கள், தங்களின் மீது தங்களின் நாட்டின் மீது, தங்களின் படையினர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர்.
பலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, குடியேற்றங்களின் மூலம், பாதுகாப்பு வேலியை அமைத்த இஸ்ரேலிய தந்திரோபாயம் இப்போது தோல்வி கண்டிருக்கிறது.
காஸா எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான நகரங்களில் இருந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வாறானதொரு தாக்குதலை சந்திக்கவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அதுதான் யூதர்கள் மத்தியில் இஸ்ரேல் கட்டியெழுப்பியிருந்த நம்பிக்கை. முன்னர் ஹமாஸ் ஒரு ரொக்கட்டை ஏவினால் பலநூறு குண்டுகளை ஏவிப் பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்.
இஸ்ரேலியர் ஒருவர் காயப்பட்டால் பல பலஸ்தீனர்களின் உயிர்கள் பறிக்கப்படும். இது தான் இதுவரை இருந்தது. இப்போது ஹமாஸ் கொத்துக் கொத்தாக யூதர்களை வேட்டையாடி பழியைத் தீர்த்திருக்கிறது.
பொதுமக்களை மாத்திரமல்ல, படைத் தளபதிகளைக் கூட கொன்றிருக்கிறது. கேர்ணல் ஒருவர் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளையும் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பில் இருந்த ஓட்டைகளை சரியாக கவனித்து திட்டமிட்டப்பட்டிருக்கிறது இந்த தாக்குதல். இது யூத குடியேற்றவாத கொள்கைக்கு கிடைத்த பேரிடி.
யூதக் குடியேற்றங்களின் மூலம், பலஸ்தீனர்களின் நில உரிமைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் என்ற ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற பெருந்தோல்வி.
காஸா எல்லைக்கு அருகே இனி குடியேறுவதற்கு ஒவ்வொரு யூதரும் பயப்படுவார்கள்.
பலஸ்தீனர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக பொங்கிக் கொண்டிருந்த வெஞ்சினம் தான் இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
அவர்களின் நிலத்துக்கான போராட்டம் ஓயவில்லை, ஓயாது என்ற செய்தியை தெளிவாக கூறியிருக்கிறது.
தங்களின் நிலங்களை ஒப்படைத்து. தங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல், யூதர்களால் நிம்மதியாக தங்களின் நாட்டில் இருக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் உறைக்க கூறியிருக்கிறார்கள். இந்த உண்மையும், பாடமும் இலங்கைக்கு முக்கியமானது.
இலங்கை அரசாங்கமும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், பௌத்த மயமாக்கலின் மூலமும், தமிழரின் நிலங்களை அபகரித்து விடலாம் எனக் கணக்குப் போடுகிறது. இது ஆபத்தானது. இன்றில்லா விட்டாலும் என்றோ ஒருநாள், இதேபோல தமிழர்களும் கொதித்தெழும் நிலை வரலாம்.
பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் எவ்வாறு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததோ- அதேபோலத் தான், இங்கும் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அடித்தளம் போடுகிறது. ஆனால், தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் தான் சிங்களவர்களும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.
ஹமாஸின் தாக்குதலை, வெறுமனே பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற கோணங்களில் நோக்குவதை விட்டு- யதார்த்தபூர்வமாக இதனை பார்க்க வேண்டும்.
இன்றைக்கு இஸ்ரேலியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பாடத்தை, இலங்கை தனக்கானதாகவும் எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமானது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM