எம்மில் சிலருக்கு மூளை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அங்கு வீக்கம் ஏற்படக்கூடும். இதனை உடனடியாக துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை பெறாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய மூளை பகுதி பல்வேறு அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையமாக திகழ்கிறது. மூளையின் உட்பகுதியில் அனைத்து விடயங்களும் சரிசமமாகவும், சம விகிதத்திலும் இருக்க வேண்டும். மூளைக்கு தொடர்ந்து ஒக்சிஜனும், ரத்த ஓட்டமும் சீராக இருக்க வேண்டும். இதற்காக எம்முடைய மூளை பகுதியில் பல்வேறு அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையங்கள் உள்ளது. இந்த பாதுகாப்பு அடுக்குகளில் ஏதேனும் பாதிப்போ.. தடையோ.. இடையூறோ.. கோளாறுகளோ.. ஏற்பட்டால், அதன் காரணமாக மூளை பகுதியில் வீக்கம் ஏற்படும்.
பொதுவாக மூளை பகுதியில் ஏற்படும் வீக்கங்களை மருத்துவர்கள் சைட்டோ டாக்ஸிக் எடிமா , வாஸோஜெனிக் எடிமா, இன்டஸ்டியல் எடிமா என மூன்று வகையினதான பாதிப்புகளாக வகைப்படுத்துவர். மூளை வீக்க பாதிப்பை தொடக்க நிலையில் துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிக்கலாம். மேலும் இதற்கு ஆன்ட்டி செரிபிரல் எடிமா மெஸர்ஸ் எனும் சிகிச்சை வழங்கப்பட்டு முழுமையான நிவாரணம் அளிப்பர்.
டொக்டர் வேணி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM