வெற்றிபெறக்கூடிய அணியொன்றை உருவாக்கித் தாருங்கள். போட்டியை ரசிக்கக்கூடிய வகையில் விளையாடும் அணியாக அது இருக்கவேண்டும். 10 ஓவர்களில் போட்டியை முடித்துவிடும் அணி வேண்டாம் என்று இலங் கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கோரிக்கை விடுத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
புதிய நிர்வாகக் குழு பொறுப்புகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ் வில் கலந்துகொண்டபோதே விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்குபேசுகையில்,
கடந்த எட்டு ஆண்டுகளாக இடைக்கால நிர் வாக சபைதான் செயற்பட்டுவந்தது. அந்த காலத்தில்தான் முறைகேடுகள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
அத்தோடு ஜனாதிபதியும் சரி பிரதமரும் சரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதன்படி தேர்தல் சுயாதீனமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தற்போது கிரிக்கெட் போட்டியை யார்தான் பார்க்கிறார்கள். பத்து ஓவர்களுக்குள் போட்டி முடிந்துவிடுகிறது. இந்த மாதிரியான அணியை தெரிவுசெய்யாமல் வெற்றி அணியொன்றை தெரிவுசெய்து கொடுங்கள் என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கோரிக்கை விடுத்தார் அமைச்சர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM