பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் ஆபாசப் படங்கள் அடங்கிய இறுவட்டுக்களை விற்பனை செய்துவந்த வர்த்தகர் ஒருவரை கண்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்ததுடன் 50 ஆபாசப் படங்கள் அடங்கிய இறுவட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களையடுத்து குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எச்.ஏ.டி. ஜயசிங்க தலைமையில் சார்ஜன்ட் உபாலி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான குமார, பெரேரா ஆகியோரைக் கொண்ட குழுவினர் கண்டி குட்செட் பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலை யம் ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது அங்கு ஆபாசப் படங்கள் அடங்கிய 50 இறுவட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வர்த்தகர் இவற்றை கம்பஹா பிரதேசத்திலிருந்து நபர் ஒருவர் தனக்குக் கொண்டுவந்து தருவதாகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பொலி ஸார் வர்த்தகரை கைதுசெய்து நீதிமன்றத் தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள் ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM