முழு­மை­யாக  கோட்­டா­வாக மாறிய ரணில்

Published By: Vishnu

09 Oct, 2023 | 12:45 PM
image

என்.கண்ணன்

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜேர்­ம­னிக்­கான பய­ணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்­பிய நிலையில், ஜேர்­ம­னியில் 'டி. டபிள்யூ' ஊட­கத்­துக்கு அவர் வழங்­கிய செவ்வி, கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யா­கி­யது.

இது­வரை காலமும் யாரும் பார்த்­தி­ராத ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முகத்தை- அந்த செவ்வி வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இலங்­கை­யிலும் உலகம் முழு­வ­திலும், பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட, பார்க்­கப்­பட்ட, விமர்­சிக்­கப்­ப­டு­கின்ற செவ்­வி­யாக இது அமைந்­தி­ருக்­கி­றது.

முழு­மை­யாக கோட்­டா­பய ராஜபக்ஷவாக மாறிய ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை இந்தச் செவ்­வியில் காண முடிந்­தது.

ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்ற பின்னர் அவர், ‘அர­க­லய’ போராட்­டக்­கா­ரர்­களை ஒடுக்க ஆரம்­பித்த போதே ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கோட்­டா­பய ராஜபக்ஷவாக மாறத் தொடங்­கினார்.

2009ஆம் ஆண்டு போர் இறுதிக் கட்­டத்தை எட்டிக்  கொண்­டி­ருந்த போது, அவுஸ்­தி­ரே­லிய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு, அப்­போது பாது­காப்புச் செய­ல­ராக இருந்த கோட்­டா­பய ராஜபக்ஷவாக செவ்­வி­ய­ளித்­தி­ருந்தார்.

அந்தச் செவ்வி பதிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் தான் ஊட­க­வி­ய­லாளர் வித்­தி­யா­தரன் கொழும்பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அவ­ரது கைது தொடர்­பாக அந்தச் செவ்­வியில் அவுஸ்­ரே­லிய ஊட­க­வி­ய­லாளர் கேள்வி எழுப்­பிய போது, கோட்­டா­பய ராஜபக்ஷ அடைந்த சீற்­றமும், அதற்கு அவர் பதி­ல­ளித்த முறையும் - அந்தக் காலத்து அச்­சு­றுத்தல் நிலைக்கு உதா­ர­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

அந்தச் செவ்­விக்கு இணை­யா­ன­தாக, குறிப்­பிடக் கூடிய வகையில் தான், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஜேர்­ம­னியின் டி.டபிள்யூ ஊட­கத்­துக்­கான செவ்வி அமைந்­தி­ருக்­கி­றது.

கோட்­டா­பய ராஜபக்ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக, ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டங்­களில் பல செவ்­வி­களை வழங்­கி­யி­ருந்­தாலும், அவுஸ்­ரே­லிய ஊட­க­வி­ய­லா­ள­ரு­ட­னான செவ்­வியின் போது நடந்து கொண்­டது போல, அவர் கோபப்­பட்­ட­தில்லை. நிதா­ன­மா­கவே பதி­ல­ளித்­தி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டத்­திலும் சரி, பத­வி­யி­ழந்த போதும் சரி- கடி­ன­மான கேள்­வி­க­ளுக்குக் கூட, சிரித்­த­படி அல்­லது சிரித்து சமா­ளித்­த­படி, பதி­ல­ளித்­தி­ருக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட இது­வரை காலத்­திலும், அவ்­வா­றான ஒரு­வ­ராகத் தான் ஊட­கங்­க­ளினால் அறி­யப்­பட்­டி­ருந்தார். ஆனால், இப்­போது அவர், தனது இன்­னொரு பக்­கத்தை ஊட­கங்­க­ளிடம் காண்­பித்­தி­ருக்­கிறார்.

நாட்டு மக்­க­ளுக்கும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் அவர் தனது மற்­றொரு முகத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அவர் தனது இயல்பு நிலையை இழந்து இந்தச் செவ்­வியை எதிர்­கொண்­ட­மைக்கு செவ்வி கண்ட ஊட­க­வி­ய­லா­ளரின் கேள்­விகள் தான் கார­ணமா? அல்­லது அதற்கு முன்­ன­ரான தொடர் நிகழ்­வுகள் அவரை கடுப்­பான நிலைக்குத் தள்­ளி­யதா என்ற கேள்­விகள் இப்­போது இருக்­கின்­றன.

ஏனென்றால், இந்தச் செவ்­வியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­யிட்ட கருத்­துக்கள், ஊட­க­வி­ய­லா­ளரை நோக்கி எழுப்­பிய கேள்­விகள், கேள்­வி­களை எழுப்­பிய தொனி, ஊட­க­வி­ய­லா­ளரை அச்­சு­றுத்தும் வகையில் பதி­ல­ளித்த முறை எல்­லாமே, வேறு­பட்ட ஒன்­றாகத் தான் இருந்­தது.

அவர் செவ்­வியின் தொடக்­கத்தில் இருந்தே, முகத்தை இறுக்­க­மாக வைத்­தி­ருந்தார். இது அவர் ஜேர்­ம­னியில் எதிர்­கொண்ட இறுக்க நிலையை அல்­லது அண்­மைய அர­சியல் மற்றும் பிற சூழ்­நி­லை­களால் அவர் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்ற நிலையின் விளை­வாக இருக்க கூடும்.

இந்தச் செவ்­வியில் அவர், கேள்வி கேட்க உங்­க­ளுக்கு என்ன உரிமை என்று ஊட­க­வி­ய­லா­ளரைப் பார்த்து கேட்­கிறார் ரணில்.

ஜனா­தி­பதி ரணில் இவ்­வ­ளவு சிறு­பிள்­ளைத்­த­ன­மாக கேள்­வியை எழுப்­பி­யி­ருப்­பதும், முட்­டாள்­த­ன­மாக பேசு­கி­றீர்கள் என்று அதட்­டி­யதும், சாதா­ரண விட­யங்கள் அல்ல.

“எங்­களை இரண்டாம் தரத்­த­வர்­க­ளாக நினைக்­கி­றீர்­களா? இந்த மேற்­கு­லக மனோ­நி­லையில் இருந்து வெளியே வர வேண்டும். அதனை நிறுத்­துங்கள், நான் நிறுத்­து­கிறேன்.” என்று கூறும் அவர் ஒரு கட்­டத்தில் செவ்­வியில் இருந்து வெளியே போவ­தா­கவும் அச்­சு­றுத்­து­கிறார். இவை­யெல்லாம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் இருந்து எதிர்­பார்த்­தி­ராத பிர­தி­ப­லிப்­புகள்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எப்­போதும் நரித்­த­ன­மான அர­சி­யல்­வா­தி­யா­கவே இலங்கை மக்கள் பார்த்­தி­ருக்­கி­றார்கள். அவர் சிரித்துச் சிரித்துப் பேசுவார். ஆனால்,  செய­ல­ளவில் அந்த நெகிழ்வு இருக்­காது என்­பது பொது­வாகத் தெரியும்.

அதற்கு மாறாக, ஜேர்­ம­னிய ஊட­கத்­திடம் அவர் மேற்­கு­லக ஊட­கங்­களை விமர்­சித்த விதம், சனல் 4 போன்ற ஊட­கங்­களின் அறிக்­கை­களால் அவர் மிகவும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கிறார், நெருக்­க­டியை எதி்ர்­கொண்­டி­ருக்­கிறார் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது.

சனல் 4 குற்­றச்­சாட்டு என்று குறிப்­பிட்­டதும் அவர் கொந்­த­ளிக்க ஆரம்­பித்து விடு­கிறார். “முன்னாள் சட்ட மா அதிபர் குற்­றம்­சாட்­டினார், முன்னாள் குற்றப் புல­னாய்வுப் பணிப்­பாளர் குற்­றம்­சாட்­டினார் அதை­யெல்லாம் விட்டு விட்டு, சனல் 4 குற்­றச்­சாட்டை தூக்கிக் கொண்டு வரு­கி­றீர்­களே, சனல் 4 என்றால் புனி­த­மா­னதா?” என்று அவர் சீற்­ற­ம­டை­கிறார்.

அதன் தொடர்ச்­சி­யாக சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணைக் கோரிக்கை தொடர்­பாக கேள்வி எழுப்­பிய போதும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்னும் கோபப்­ப­டு­கிறார்.

அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக மாத்­தி­ர­மன்றி, எந்­த­வொரு விவ­காரம் குறித்தும் சர்­வ­தேச விசா­ர­ணையை அர­சாங்கம் நடத்­தாது என்று அறு­தி­யிட்டுக் கூறு­கிறார்.

இதனை ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமை­தி­யாக கூற­வில்லை. மேற்­கு­லக ஊட­கங்­க­ளையும், மேற்கு நாடு­க­ளையும் அவர், வம்­புக்கு இழுக்­கிறார்.

ஜேர்­ம­னி­யிலோ, பிரித்­தா­னி­யா­விலோ ஏதா­வ­தொரு விட­யத்­துக்கு சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றதா, இலங்­கை­யையும். ஆசி­யா­வையும் மட்டும் ஏன் அவ்­வாறு நடத்­து­கி­றீர்கள்? என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளிப்­ப­டுத்­திய கோபம், மேற்­கு­ல­கத்தின் அண்­மைய நகர்­வுகள் அவரை கடும் அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது என்­பதை உணர்த்­து­கி­றது.

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­க­ளையும், நாட்டில் ஜன­நா­யக விரோத செயல்கள் இடம்­பெ­று­வ­தான குற்­றச்­சாட்­டு­க­ளையும் நிரா­க­ரித்­தி­ருக்­கின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் அறிக்­கை­யையும் நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.

சாந்­த­மான அர­சி­யல்­வா­தி­யாக அறி­யப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிதா­ன­மாகப் பதி­ல­ளிக்க கூடி­யவர். அவர் ஏன் இவ்­வாறு ஜேர்­ம­னிய ஊட­கத்தின் செவ்வி முழு­வதும் கடு­க­டுப்­பா­ன­வ­ராக இருந்தார், சீற்­றத்தை வெளிப்­ப­டுத்­தினார் என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

இதற்கு இரண்டு கார­ணங்கள் சொல்­லப்­ப­டு­கி­றது. ஒன்று, அண்­மைக்­கா­லத்தில் அர­சாங்கம் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிகள்.

சனல் 4 வெளி­யிட்ட ஆவ­ணப்­ப­டத்தில் கூறப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள், அர­சாங்­கத்தை நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது. இந்த விவ­காரம் அர­சாங்­கத்தை எந்த நிலைக்குள் தள்ளி விடுமோ என்ற பயத்தை அவ­ருக்குள் ஊட்­டி­யி­ருக்­கி­றது.

அது­போ­லவே, நீதி­பதி சர­வ­ண­ராஜா நாட்டை விட்டு வெளி­யே­றிய விடயம், அந்தச் செவ்­வியில் இடம்­பெ­றாத போதும், அவர் செவ்­வி­ய­ளித்த கால­கட்­டத்தில், அந்த விவ­கா­ரமும் சர்­வ­தே­சத்தின் கைக்குச் சென்­றது, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். மேற்­கு­லகின் செல்­லப்­பிள்ளை என்று கரு­தப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லகம் அளித்து வரு­கின்ற நெருக்­க­டிகள், அவரால் எதிர்­பார்க்­கப்­ப­டா­த­தாக இருக்­கலாம்.

சீனா விட­யத்தில் அவ­ரது அர­சாங்கம் இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான் போன்ற நாடு­களின் அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கி­றது.

அண்­மையில் அமெ­ரிக்கா சென்­றி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, புவிசார் அர­சியல் குறித்த கரி­ச­னைகள் குறித்து, இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா அல்­லது ஜப்பான் பேச­லாமே தவிர, மூன்­றா­வது தரப்பு நாடு பற்றி பேசக் கூடாது என்று தகவல் அளித்­தி­ருக்­கிறார்.

இதுவும் மேற்­கு­லக அழுத்­தங்­களின் வெளிப்­பா­டு­களில் ஒன்று தான்.

பல பக்க நெருக்­கு­வா­ரங்­களில் சிக்­கி­யி­ருக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சர்­வ­தேச விசா­ரணைக் கோரிக்கை தொடர்­பான கேள்­வி­களை சீற்­றத்­துடன் எதிர்­கொண்­டி­ருக்­கலாம்.

செவ்­வியில் ஊட­க­வி­ய­லா­ளரை விஞ்சி கேள்­வி­களைத் தொடுத்து அவரைக் குழப்பி, அவ­ரது இலக்கை அடைய விடாமல் தடுப்­பது ஒரு உத்தி.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அவ்­வாறு தான், தனக்­கெ­தி­ராக போடப்­படக் கூடிய பந்­து­களை தவிர்ப்­ப­தற்­காக, அந்தக் களத்தில் இயல்­பற்ற சூழலை உரு­வாக்க முனைந்­தி­ருக்­கிறார்.

அதன் மூலம் அவர் உரு­வாக்க முயன்ற விம்பம் தான், இரண்­டா­வது காரணம்.

அதா­வது, சர்­வ­தேச அரங்கில் இலங்­கையின் பெயரை காப்­பாற்றி விட்டார், குற்­றச்­சாட்­டு­களை ஒதுக்கி விட்டு மேற்­கு­ல­கத்தை பிளந்து கட்டி விட்டார் என்­றெல்லாம், சிங்­களத் தேசி­ய­வா­திகள் சிந்­திக்கக் கூடிய வகையில் ஒரு உள­வியல் போரை நடத்­தி­யி­ருக்­கிறார் ரணில்.

விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் வேட்பாளராக இருப்பாரா- இல்லையா என்ற உறுதியான நிலை இல்லாத போதும், தன்னைக் கதாநாயகனாக நிறுவுவதற்கு இந்தச் செவ்வியைப பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ரணில்.

மேற்குலக ஊடகங்களை கடுமையாக எதிர்த்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர் காட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது எதனைக் கூறினாரோ, கோட்டாபய ராஜபக் ஷ எதனை கூறினாரோ அதனையே தான் ரணிலும் கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் முன்னையவர்களை விட ஆக்ரோசமாக கொடுத்திருக்கும் பதிலும், செவ்வியை எதிர்கொண்ட விதமும், அவரை சிங்கள மக்கள் கதாநாயகனாக பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறது.

இதுதான் ரணில் எதிர்பார்த்த இலக்காக இருந்தால்- இந்தச் செவ்வி அவருக்கு 100 சதவீத வெற்றி எனலாம்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள ஜேர்மனிய ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, இன்னொரு கோட்டாவை சிங்கள மக்கள் விரும்புவார்களா என்பதை அவர் சிந்திக்கத் தவறினாரா என்ற கேள்வியும் இருப்பதை மறந்து விடக் கூடாது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்