இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடுகள் : நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் ஊடாக குறைக்க முடியும் - டிரான் அலஸ்

07 Oct, 2023 | 01:21 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

2016 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இந்த சட்டங்களை கொண்டு வரவேண்டியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட்ட தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது என்றும் அதனை உத்தேச சட்டமூலத்தின் ஊடாக குறைக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இதன்போது சிவில் அமைப்புகளின் தலைவர்கள், ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இலங்கை பத்திரிகை சங்கம், ஊடக சுதந்திர இயக்கம் மற்றும் சமூக ஊடக ஒன்றியங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக கலந்துரையாடல் அவசியம் என இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் உத்தேச சுதந்திரம்,  கருத்து சுதந்திரம் முடக்கப்படுவதாகவும் இதன்போது இவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் 2016 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இந்த சட்டங்களை கொண்டு வரவேண்டியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட்ட தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது என்றும் அதனை உத்தேச சட்டமூலத்தின் ஊடாக குறைக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் ஆசிய இணையம், இலங்கை சட்டத்தரணிகள் சங்க,ம் தூதரக அதிகாரிகள், ஊடக நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04