பொருளாதார பாதிப்பினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - சியம்பலாபிட்டிய

06 Oct, 2023 | 02:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்பினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களை திருத்திக்கொண்டுள்ளோம். மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற  மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதார பாதிப்பின் காரணமாகவே பெரும்பாலான மூளைசாலிகள் அப்போது  நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

பொருளாதாரத்தில் அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களை தற்போது திருத்திக் கொண்டுள்ளோம்.

பொருளாதார பாதிப்பின் காரணமாகவே தற்போதும் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழிற்றுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர் யுவதிகள் தொழில் பயிற்சிகளை பெற்று நாட்டை விட்டு தொழில்வாய்புகளுக்காக வெளியேறுகிறார்கள்.

இதனை பாதகமான அம்சம் என்று கருத முடியாது. தேசிய தொழிற்றுறையை பாதுகாக்க அமைச்சு சார் மட்டத்தில் பல புதிய கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வரிக் கொள்கையை திருத்தியமைக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் உணவல்லாத பணவீக்கம் சடுதியாக குறைவடைந்துள்ளன.

இந்த ஆண்டின் இறுதி பகுதிக்குள் வங்கி  வட்டி வீதங்கள் குறைக்கப்படும். நெருக்கடியான நிலையில் இருந்து கட்டம் கட்டமாக மீட்சியடைந்து வருகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15