சகோதரர்கள் தொல்லை : ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்யமுயன்ற மாணவியை காப்பாற்றிய பொலிஸார்

Published By: Priyatharshan

14 Feb, 2017 | 02:46 PM
image

யாழ்தேவி ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற போது பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

குறித்த மாணவி கடந்த 11 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பகுதி நேர வகுப்பிற்கு செல்வதாகக் கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து பஸ்களில் பயணித்து கல்கமுல பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்திற்கு வந்த மாணவி அங்கிருந்த ரயில் வீதியில் நின்ற சந்தர்ப்பத்தில், மாணவி மீது சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொதுமக்களின் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த மாணவியை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் சகோதரர்கள் தொடர்ந்து தன்னை அடித்து தொல்லைப்படுத்துவதால் தான் இவ்வாறு தற்கொலை செய்துகொள்ள இங்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

வீட்டில் சகோதரர்கள் திட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 17 வயதுடைய பாடசாலை மாணவியே தற்கொலைக்கு முயன்ற சந்தர்ப்பத்தில்  பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு கைது செய்யப்பட்டவராவார்.

இதையடுத்து பொலிஸாரினால் குறித்த மாணவியின் பெற்றோர் அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர்...

2025-02-11 00:40:52
news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14