சர்வதேச விசாரணையை நிராகரிப்பதாக கூறி ஜனாதிபதி நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார் - சாணக்கியன்

Published By: Vishnu

05 Oct, 2023 | 07:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சனல்4 வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரிப்பதாக கூறி ஜனாதிபதி நாட்டுக்கு பெருமை சேர்க்கவில்லை. 

மாறாக சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கிய ஜனாதிபதி, எங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்கின்றீர்களா என்று கேட்டுள்ளார். அவர்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை. இங்கே இவ்வாறு நடந்தால் அப்படி நினைப்பார்கள்.

நீதிவான் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் போது அப்படி கேட்கலாம் தானே. நீங்கள் இவ்வாறு செய்வதால் நடக்கும் வேலையே இது. 

பிரகீத் எக்னலிகொடவுக்கு எனன நடந்தது என்று அசாத் மௌலான கூறுவதாக தெரிவிக்கின்றார். ஆனால் நீங்கள் சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றீர்கள். நீங்கள் அவ்வாறு கூறி நாட்டுக்கு பெருமையை கொண்டு வரவரவில்லை. அபகீர்த்தியையே கொண்டு வந்துள்ளீர்கள்.

வெளிவிவகார அமைச்சின் மகன்தானே அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகின்றார். அவர்தான் ஜனாதிபதிக்கு இந்த நேர்காணலுக்கு ஆலோசனை வழங்கினாரோ தெரியவில்லை. சிறுபிள்ளை தனமான பதிலையே அவர் வழங்கியுள்ளார். 

இதேவேளை, யாழ்- தமிழ்நாடு படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அடிக்கடி கதைக்கப்படுகின்றது. ஆனால் அதற்கான தடைகள் எங்கே இருக்கின்றது என்பது தொடர்பில் தெரியவில்லை. இலங்கையில் வாழ முடியாமையினால் இந்தியாவுக்கு சென்ற இரண்டு இலட்சம் பேர் வரையிலானோர் அகதிகளாக இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இங்கு வருவதற்கு உரிமை உள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விமான நிலையம் உள்ளது. யாரேனும் அமைச்சர் வரும் போது மட்டும் சுற்றுப் பயண விமானங்கள் நடக்கும். மாலைதீவு போன்று உள்ளக விமான சேவைகளுக்கு அதனை பயன்படுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04