பாடசாலை மாணவர்களிடையே ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

05 Oct, 2023 | 02:50 PM
image

15 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே  ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் பலியாகி வருவது மிகவும் பரிதாபகரமானது என உளவியலாளர் கலாநிதி கிஹான் அபேவர்தன தெரிவித்தார்.

ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்கள்  ஏனைய போதைப்பொருள் பழக்கத்திற்கு அதிக நாட்டத்தை காட்டுகின்றனர், இதனால் அவர்களின் நிலைமை இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது என்று வைத்தியர் அபேவர்தன விளக்கினார்.

வைத்தியர் அபேவர்தன மேலும் கூறுகையில்,

ஹெரோயின் போதைப்பொருள் பாவனையை இடையில் நிறுத்துவதன் மூலம் உடல் சார்ந்த சோர்வு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கூடுதலான அளவில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்வதால் சுவாசத்தை கடுமையாக பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வலிப்பு அல்லது உடல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இது ஹெரோயின் போதைப்பொருள் பாவனையின் விளைவாக ஏற்படும்  அறிகுறிகளாகும்.

எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு வைத்தியர் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43