அம்பாறை நிந்தவூரில் வீடு ஒன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிளை திருடிச் சென்ற 3 பேரை புதன்கிழமை (04) பொலிஸார் கைதுள்ளனர்.
இதையடுத்து செய்ததுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கள் உட்பட 4 மோட்டார் சைக்கிள்களை வாகனம் திருத்தும் இடத்திலிருந்து மீட்டுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை தொலைத்தவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் விசேட புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக சம்பவதினமான புதன்கிழமை (04) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து திருடப்பட்ட 4 மோட்டர்சைக்கிள்கள் வாழைச்சேனையில் உள்ள வாகன திருத்துமிடமொன்றிலிருந்து பொலிஸார் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 28, 27 வயதுடைய பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM