காணி அபகரிப்புகளுக்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை : அமைச்சர் ஹரின் சபையில் உறுதி

Published By: Vishnu

04 Oct, 2023 | 02:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால்,  அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம்.

காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் எழுப்பிய கேள்யொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்ரான் மஹ்ரூப் தெரிவிக்கையில், குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் மதகுரு ஒருவர் அண்மைக்காலமாக மக்களுக்கு சொந்தமான காணிகளை அத்துமீறி பிடிக்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுத்துச்செல்கிறன்போது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மாத்திரமல்ல, நாட்டில் இன ரீதியான பிரச்சினைக்கும் காரணமாக அமைகிறது.

அதனால் இந்த மதகுருவின் செயற்பாடுகள் தொடர்பில் காணி அமைச்சர் என்றவகையில் அறிந்திருக்கிறீர்களா அல்லது இவரின் இந்த செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்போகிறது?

குறிப்பாக இந்த மதகுரு வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் ஆண்கள் ஜும்ஆ தொழுகைக்கு சென்றிருக்கும் வேளையில் பெண்கள் மாத்திரம் வீடுகளில் இருக்கும் நிலையிலேயே அத்துமீறி இவ்வாறு காணிகளை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

காணி தொடர்பில் பிரச்சினை இருக்குமானால் அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்காமல் இவ்வாறு காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்ன என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேசங்களில்  காணி அபகரிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.

உத்தியோகபூர்வமற்ற முறையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் பிரகாரமே எமக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது.

இருந்தபோதும் அரசாங்கம் என்றவகையில் காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என்பதே எனது நிலைப்பாடு.

என்றாலும்  குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேசங்களில் காணி அபகரிப்பு இடம்பெறுவது தொடர்பில் உங்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேடிப்பார்த்து, அதன் உண்மைத்தன்மை தொடர்பாக அமைச்சின் செயலாளர் ஊடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு அறியத்தருகிறேன்.

அத்துடன் அந்த பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால், அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

அத்துடன் சுற்றுலாத் துறை அபிவிருத்திக்காக அந்த பிரதேசங்களில் நாங்கள் காணிகளை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு மாற்று காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15