சமிந்த வாஸ் தலைமையில் யாழில் துடுப்பாட்ட பயிற்சி முகாம்

03 Oct, 2023 | 05:30 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குநர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) மற்றும் சனிக்கிழமை (17) நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (8) வவுனியாவில் நடைபெறவுள்ளது. 

இந்த பயிற்சி முகாமில் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளது. அவர்களால் சிறந்த வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள். 

13 வயதில் இருந்து 25 வயது வரையிலான வீர, வீராங்கனைகள் இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும். 

பங்கேற்க விரும்புவோர்  0778013310 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும். அல்லது https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd8xmnpdRBxIyMrlepxiKBLq4uHVDP7x9YYXyy1Smfn9bb8-g/viewform?usp=pp_url என்ற இணைப்பின் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும். 

அதேவேளை நாம் துடுப்பாட்ட அகடமி ஒன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவி வருகின்றோம். அது தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது. அதில் துடுப்பாட்டம் தொடர்பில் விசேட பயிற்சிகளை வழங்கி திறமையான வீரர்களை உருவாக்கவுள்ளோம். அதற்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்வே இந்த பயிற்சி முகாம் ஆகும். 

இதில் பாடசாலை மாணவர்கள், கழகங்கள், மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்கள் என பங்கேற்க முடியும். இதில் 100 தொடக்கம் 150 பேர் வரையில் தெரிவு செய்யவுள்ளோம். 

தெரிவுசெய்யப்படும் வீர, வீராங்கனைகள் எம்மால் நிர்மாணிக்கப்படும் துடுப்பாட்ட அகடமியில் மேலும் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதன் ஊடாக அவர்கள் தமது திறமையை வளர்த்துக்கொள்வதன் ஊடாக வடக்கில் சிறந்த துடுப்பாட்ட வீர, வீராங்கனைகள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. 

எம்மால் உருவாக்கப்படும் வீர, வீராங்கனைகளை வெளிநாட்டுக் கழகங்கள், சுற்றுப்போட்டிகள் என்பவற்றில் பங்கேற்க முடிந்தவரையில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்போம் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் "ஆடுகளும் ஓநாய்களும்" கவிதை நூல்...

2023-12-11 18:46:11
news-image

வத்தளையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு...

2023-12-09 18:23:52
news-image

யாழ். தெல்லிப்பழையில் பண்பாட்டு பெருவிழா

2023-12-09 12:58:11
news-image

நாளை கொழும்பில் 'அமரா' நாட்டிய நாடகம் 

2023-12-08 17:35:13
news-image

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய...

2023-12-08 17:07:04
news-image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இலங்கை, இந்தியா,...

2023-12-08 16:00:25
news-image

சமாதானத்துக்கான செய்தியை தலதா மாளிகையில் இருந்து...

2023-12-07 22:37:14
news-image

யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு 

2023-12-07 18:53:42
news-image

முதல் முறையாக இந்து ஆலயங்கள் தொடர்பான...

2023-12-07 11:52:31
news-image

பின்தங்கிய நிலையிலும் சிறந்த பெறுபேறுகளால் சாதித்த...

2023-12-06 18:39:38
news-image

சமாதானத்துக்கான கோரிக்கைகளை சர்வமத தலைவர்களிடம் முன்வைக்கும் ...

2023-12-06 13:50:27
news-image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா,...

2023-12-06 12:54:13