ஊட்­டச்­சத்து குறை­பாட்டில் உயர் மட்­டத்தில் நுவ­ரெ­லியா மாவட்டம்!

02 Oct, 2023 | 05:18 PM
image

எம்.மனோ­சித்ரா

கடந்த ஆண்டு முதல் தற்­போது வரை இலங்கை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்கும் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் சமூ­கத்தில் உயர் வரு­மானம் பெறும் தரப்­பி­னரை தவிர்த்து, ஏனைய சகல தரப்­பி­ன­ரையும் கடு­மை­யாகப் பாதித்­துள்­ளது. குறிப்­பாக நடுத்­தர மற்றும் குறைந்த வரு­மானம் பெரும் குடும்­பங்­களும், வரு­மானம் அற்ற குடும்­பங்­களும் மிகவும் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ராக அடை­யா­ளம் ­கா­ணப்­பட்­டுள்­ளனர். 

ஆட்­ப­திவு திணைக்­க­ளத்தின் தர­வு­க­ளுக்­க­மைய இலங்­கையின் சனத்­தொகை அண்ண­ள­வாக இரண்டு கோடியே 19 இலட்­சத்­துக்கும் அதி­க­மாகும். மொத்த சனத்­தொ­கையில் பிறப்பு வீதம் 13.8 % ஆகவும், இறப்பு வீதம் 6 % ஆகவும் காணப்­ப­டு­கி­றது. மொத்த சனத்­தொ­கையில் 5 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்கள் 8.6 சத­வீ­த­மாகும். (2012 சனத்­தொகை மதிப்­பீட்­டுக்­க­மைய)

நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளா­னது சமூ­கத்தில் மொத்த சனத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் மிகக் குறை­வாகக் காணப்­படும் சிறு­வர்­களில் மத்­தியில் மந்த போஷ­ணையை உக்­கி­ர­ம­டையச் செய்­துள்­ளது. அண்­மையில் கொழும்பில் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களை சந்­தித்­தி­ருந்த ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான வதி­வி­டப்­பி­ர­தி­நிதி மார்க் அன்ரூஸ் பிரெஞ் 'நிலை­பே­றான அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடைந்­து­கொள்­வதில் இலங்கை பின்­ன­டை­வ­டைந்­துள்­ள­தா­கவும், அண்­மை­யக காலங்­களில் சிறு­வர்கள் மத்­தியில் அதி­க­ரித்­து­வரும் மந்த போஷணை நாட்டின் எதிர்­கா­லத்தில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்' என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இந்­நி­லையில் சுகா­தார அமைச்சின், குடும்ப சுகா­தார பிரி­வினால் இவ்­வாண்டின் முதல் அரை­யாண்­டுக்­கான 'தேசிய ஊட்­டச்­சத்து நிலைமை அறிக்கை' செப்­டெம்பர் 14ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.

2022உடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வாண்டின் ஜன­வரி - ஜூன் வரை­யான காலப்­ப­கு­தியில் 5 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்கள் மத்­தியில் கடு­மை­யான ஊட்­டச்­சத்து குறை­பாடு மற்றும் அதிக உடற்­ப­ருமன் ஆகி­ய­வற்றில் கணி­ச­மா­ன­ளவு வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­மையும், ஆனால் வவு­னியா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்­டங்­க­ளிலும் உயரம் மற்றும் வய­துக்கு ஏற்ற நிறை குறை­வாகக் காணப்­படும் வீதம் உயர்­வ­டைந்­துள்­ள­மையும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

இந்த அறிக்­கைக்­கான ஆய்­வுக்­காக குடும்ப நல சுகா­தார சேவை அதி­கா­ரி­களால் 5 வய­துக்­குட்­பட்ட 14,06,213 சிறு­வர்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 13,57,675 சிறு­வர்­க­ள்  இந்த ஆய்வில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர். 

இவ்­வாறு ஆய்­வுக்குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சிறு­வர்­களில் வய­துக்கு ஏற்ற எடை குறைவு  தொடர்­பான பிரச்­சினைகள் 17.1 சத­வீ­த­மாகக் காணப்­ப­டு­வ­தா­கவும் , இதன் மொத்த எண்­ணிக்­கையில் 26.4 சத­வீதம் எடை குறைவு  தொடர்­பான பிரச்­சினைகள் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­வ­தா­கவும் அவ்­அ­றிக்கை சுட்­டிக்­காட்­டு­கின்­றது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஐந்து வய­துக்­குட்­பட்ட சிறு­வர்­களில் நிறை­கு­றை­வா­னவர்கள் 23 சத­வீ­த­மாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

தோட்­டப்­பு­றங்கள், நகர மற்றும் கிராமப் புறங்­களில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் நிறைக்கு ஏற்ற வளர்ச்­சி­யற்ற சிறு­வர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்துச் செல்லும் போக்­கி­னையே காண்­பிப்­பிக்­கின்­றது. வளர்ச்சி குன்­றிய சிறு­வர்­களின் எண்­ணிக்கை நகர் புறங்­களில் சரா­ச­ரி­யாக 8 சத­வீ­த­மா­கவும், கிராம புறங்­களில் 10 சத­வீ­த­மா­கவும், தோட்­டப்­பு­றங்­களில் 25 சத­வீ­த­மா­கவும் காணப்­ப­டு­கி­றது. கடந்த 3 ஆண்­டு­க­ளிலும் இதே நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. இவற்றில் பாரி­ய­ளவில் எவ்­வித மாற்­றங்­களும் ஏற்­ப­ட­வில்லை.

நுவ­ரெ­லியா பெருந்­தோட்­டங்கள் நிறைந்த மாவட்­ட­மாகும். இம்­மா­வட்­டத்தில் 5 வய­துக்­குட்­பட்ட 50,796 சிறு­வர்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். இவர்­களில் 50, 439 சிறு­வர்கள் அதா­வது 99.30 சத­வீ­த­மா­ன­வர்கள் ஊட்­ட­சத்து தொடர்­பான ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.  இவர்­களில் வய­துக்­கேற்ற எடையற்ற மற்றும் வய­துக்­கேற்ற வளர்ச்­சி­யற்ற சிறு­வர்­களின் வீதம் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றமை இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் சனத்­தொகை கூடிய மாவட்­ட­மாகக் காணப்­படும் கொழும்பில் 5 வய­துக்­குட்­பட்ட 89, 784 சிறு­வர்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 11.2 சத­வீ­த­மான சிறு­வர்கள் மாத்­தி­ரமே வய­துக்­கேற்ற எடையற்­ற­வர்­க­ளா­கவும், 5.8 சத­வீ­த­மான சிறு­வர்கள் மாத்­தி­ரமே வய­துக்­கேற்ற வளர்ச்­சி­யற்ற சிறு­வர்­க­ளா­கவும் உள்­ளனர்.

மேற்­கு­றிப்­பிட்ட தர­வு­களை அவ­தா­னிக்கும் போது, ஒப்­பீட்­ட­ளவில் குறைந்த எண்­ணிக்­கையைக் கொண்­டுள்ள நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இவ்­வாறு சிறு­வர்கள் மத்­தியில் காணப்­படும் சுகா­தார நலன் குறித்த விட­யங்­களில் ஏன் இன்னும் எந்­த­வொரு முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை என்ற கேள்வி ஏற்­ப­டு­கி­றது. 

நுவ­ரெ­லியா மாவட்டம் தேயி­லையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வாழ்­வா­தா­ர­மு­டைய பிர­தே­ச­மாகும். கொழுந்து பறித்தல் உட்­பட பெருந்­தோட்­ட ம் சார்ந்த பணிகளை தமது வாழ்­வா­தா­ர­மாகக் கொண்­டுள்ள மக்­களின் பொரு­ளா­தாரம் இன்றும் கீழ் மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றமை இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­கு­கின்­றது. 

தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரொ­ரு­வரும், 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். மக்கள் பிர­தி­நி­தி­க­ளான இவர்கள் முயற்­சித்தால் இந்த நிலை­மை­யி­லி­ருந்து நுவ­ரெ­லியா மாவட்­டத்தை படிப்­ப­டி­யா­க­வேனும் மீட்க முடியும்.

எவ்­வா­றி­ருப்­பினும் அர­சி­ய­லுக்கு அப்பால் இது சுகா­தார நலன் சார்ந்த விடயம் என்­பதால் சுகா­தார அமைச்சு உட்­பட முழு அர­சாங்­கமும் இதற்­கான பொறுப்­பினை ஏற்க வேண்டும். வெறுமனே ஆய்­வு­களை மேற்­கொண்டு அறிக்­கை­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருப்­பதால் மாத்­திரம் சிறு­வர்கள் எதிர்­கொண்­டுள்ள இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யாது. இவ்­வாண்டில் மாத்­தி­ர­மின்றி கடந்த ஆண்­டு­க­ளிலும் சிறு­வர்­களின் சுகா­தார நலன் சார்ந்த விட­யங்­களில் நுவ­ரெ­லியா மாவட்டம் உயர் மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கி­றது.  

இந்த பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து நுவ­ரெ­லியா மாவட்ட சிறு­வர்­களை மீட்­ப­தற்கு சுகா­தார அமைச்சின் குடும்­பல சுகா­தார பிரிவு எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பது தொடர்பில் அதன் பணிப்­பாளர் விசேட வைத்­திய நிபுணர் சித்­ர­மாலி டி சில்­வா­விடம் வின­விய போது அவர் இவ்­வாறு விளக்­க­ம­ளிக்­கின்றார்.

'நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 5 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்­களின் எடை மற்றும் வளர்ச்சி தொடர்பில் தொடர்ச்­சி­யாக இவ்­வா­றான நிலை­மை­யையே நாம் அவ­தா­னித்து வரு­கின்றோம். பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் சமூக பொரு­ளா­தார நிலை­யா­னது மிகக் குறைந்த மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கி­றது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 50 சத­வீ­த­மானோர் பெருந்­தோட்­டத்­து­றையை சார்ந்­த­வர்­க­ளாவர். அத்­தோடு அவர்­க­ளது கல்வி நிலையும் சிறந்த மட்­டத்தில் இல்லை. இங்கு போதி­ய­ளவு சுகா­தார ஊழி­யர்கள் காணப்­ப­டு­கின்ற போதிலும், உரை­யா­ட­லுக்­கான மொழித் தேர்ச்சி தொடர்­பான சிக்­கலும் காணப்­ப­டு­கி­றது. எனவே சுகா­தார நலன் தொடர்பில் சரி­யான தக­வல்­களை வழங்­கு­வ­திலும் சிக்கல் காணப்­ப­டு­கி­றது.

இங்­குள்ள மற்­றொரு பிர­தான பிரச்­சினை தாய் பிள்­ளை­க­ளுடன் வீட்டில் இல்­லா­மை­யாகும். இதனால் சிறு­வர்­க­ளுக்கு முறை­யான பரா­ம­ரிப்­புக்கள் கிடைப்­ப­தில்லை. அவர்கள் சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கின்­றனர். அவற்றில் அதி­க­ள­வான சிறு­வர்­களை சிறப்­பான முறையில் பரி­மா­ரிப்­ப­தற்­கான வச­திகள் போதி­ய­ளவு இல்லை. குறிப்­பாக பிறந்த குழந்­தை­க­ளுக்கு மிக அவ­சி­ய­மான தாய்ப்­பா­லூட்டல் வீதமும் குறை­வா­கவே காணப்­ப­டு­கி­றது. தாய்மார் தொழில் நிமித்தம் பல மணித்­தி­யா­லங்கள் தமது பிள்­ளை­களை பிரிந்­தி­ருப்­பதால் போதி­ய­ளவு தாய்ப்­பா­லூட்ட முடி­யாத நிலைக்கு நிர்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வாறு பல்­து­றை­சார்ந்த பிரச்­சி­னை­களை இங்­குள்ள பெற்­றோரும், பிள்­ளை­களும் எதிர்­நோக்­கு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலை­மை­யி­லி­ருந்து நுவ­ரெ­லியா மாவட்­டத்தை மீட்­ப­தற்­கான பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக உணவு வழங்கல் திட்­டங்கள், உணவு உட்­கொள்­வ­தற்­கான ஆலோ­சனை வழங்கல் திட்­டங்கள் என்­பன நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றி­ருப்­பினும் இவற்றின் மூலம் பாரி­ய­தொரு முன்­னேற்றம் ஏற்­ப­ட­வில்லை. மிகச் சிறி­ய­ள­வான முன்­னேற்­றமே இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. 

எனவே சுகா­தா­ரத்­து­றை­யி­னரால் கூறப்­படும் விட­யங்­களைப் பின்­பற்றி செயற்­ப­டு­மாறு பெற்­றோ­ரிடம் கேட்டுக் கொள்­கின்றோம். இங்கு பெற்­றோரின் பங்­க­ளிப்­புக்கு அப்பால் அர­சாங்கம் இவ்­வா­றான மாவட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளித்து பல்­துறை அணு­கு­மு­றைக்குச் செல்ல வேண்டும்.'

இலங்கை கடும் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்­கொண்ட நிலையில் கடந்த மார்ச்சில் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்

தன்மை ஏற்பட்டுள்ளது. ஆனால் நெருக்கடிகள் ஆரம்பித்த போது அவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்றும் உணவு பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து சவால்கள், வாழ்வாதாரத்தை இழத்தல் போன்றவற்றிலிருந்து மீளவில்லை. இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் மிதமான உணவு பாதுகாப்

பின்றியும், இலட்சத்து க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்றியும் இருப்பதாக அண்மையில் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக 2.9 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, நீர் என்பவற்றை பெற்றுக் கொள்வதில் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், எனவே அவர்களுக்கு சமூக பாதுகாப்பு சேவை வழங்கப்பட வேண்டும் என்றும் யுனிசெப் சுட்டிக்காட்டியிருந்தது.

அந்த வகையில் இங்கு குறிப்பிடப்படும் பாதிப்புக்களில் நுவரெலியா மாவட்டத்தி லுள்ள சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் அரசாங்கம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர் அவதானம் செலுத்துவதோடு , அவற்றுக்கான நிரந்தர தீர்வினையும் வழங்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54