சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ; ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார

Published By: Digital Desk 3

02 Oct, 2023 | 05:18 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே இந்த சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்  சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். இதனை தவறாக பயன்படுத்துவதன் காரணமாக இளைஞர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

குடும்ப பிணைப்புகளிலிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் ஊடாக மதங்களுக்கும் சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

எனவே, சமூக ஊடகங்கள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தினால், பிரச்சினைகளை உருவாக்கினால், அல்லது ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை தோற்றுவித்தால் அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். 

அரசாங்கத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கலாம். சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக இடம் ஒன்று இருக்க வேண்டும். அதுவே இந்த  சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி...

2026-08-15 08:23:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59