பூப்போன்ற சிறுவர்களை துரத்திக் கொண்டிருக்கும் சவால்கள்

03 Oct, 2023 | 02:40 PM
image

துரைசாமி நடராஜா

சர்வதேச சிறுவர் தின­ம் நேற்று (01) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இலங்கை சிறு­வர்­களின் சம­கால நிலை­மைகள் குறித்து நோக்­கு­மி­டத்து அதி­ருப்­தி­யான வெளிப்­பா­டு­களே மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றன. அதிலும் மலை­யக சிறு­வர்கள் குறித்து நோக்­கு­மி­டத்து அவர்கள் பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­வ­தனை அவ­தா­னிக்கக்கூடி­ய­தாக உள்­ளது.

இச்­ச­வால்­களில் இருந்தும் இவர்­களை மீட்­டெ­டுத்து ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்தை உரு­வாக்கிக்கொடுக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­மையும் பொறுப்­பு­மாகும் என்­ப­தனை மறுப்­ப­தற்­கில்லை

இன்­றைய சிறு­வர்கள் நாட்டின் நாளைய தலை­வர்­க­ளாவர். நாளைய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் மிகப்­பெரும் பொறுப்பு அவர்­களின் முன்னே வைக்­கப்­பட்டுள்ளது. சிறந்த சமூக உரு­வாக்கம் தொடர்பில் கவனம் செலுத்­து­கின்­ற­போது சிறு­வர்­களின் அபி­வி­ருத்தி மற்றும் நலன்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. பூப்­­போன்ற உள்­ளத்தைக் கொண்­ட­வர்­க­ளாக சித்­த­ரிக்­கப்­படும் சிறு­வர்கள் இன்று பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகங்கொடுத்து வரு­கின்­றமை யாவரும் அறிந்த விட­ய­மாகும். 

சிறு­வர்­களைக் கடத்­துதல், யாசகம் பெறச் செய்தல், தொழி­லுக்கு அமர்த்­துதல், கல்­வியை இடை­நி­றுத்­துதல், கொடு­மைப்­ப­டுத்தல், பார­தூ­ர­மான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தல், பாலியல் சுரண்­ட­லுக்கு உட்­ப­டுத்தல், பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தல், சட்­ட­பூர்­வ­மான பாது­கா­வ­ல­ரி­ட­மி­ருந்து சிறு­வர்­களைக் கடத்­துதல், சிறு­வர்­களைக் கவ­னிக்­காமை போன்ற பல கசப்­பான நிகழ்­வு­க­ளுக்கும் சிறு­வர்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர். 

அத்­தோடு உலக நாடு­களில் இடம்­பெறும் போர் நட­வ­டிக்­கை­களில் சிறு­வர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்டு அவர்­களின் உரி­மைகள் மழுங்­க­டிக்­கப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் மேலெ­ழுந்து வரு­கின்­றன.

இன்னும் போர் நட­வ­டிக்­கை­களில் அப்­­பாவி சிறு­வர்கள் சிக்­குண்டு உயி­ரி­ழக்கும் அபா­யமும் அதி­க­ரித்து வரு­கின்­றமை கொடு­மை­யிலும் கொடு­மை­யாகும்.

இலங்­கையில் கொரோ­னா­வுக்கு பிந்­திய கால­கட்­ட­மா­னது சிறு­வர்கள் எதிர்கொள் ளும் நெருக்­கீ­டு­களை மேலும் அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் கடந்த வரு­டத்தின் முதல் அரை­யாண்டில் 2.9 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட  சிறு­வர்கள் அத்­தி­யா­­வ­சிய மனி­­தா­பி­­மான உத­விகள் தேவைப்­படும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லை­யில் யுனிசெப் அமைப்பு சிறு­வர்­களின் நலன்­க­ருதி காத்­தி­ர­மான உத­விகள் பல­வற்­றையும் வழங்கியிருந்­தது. இவற்றுள் அடிப்­படை சுகா­தார வச­திகள், பாது­காப்­பான குடிநீர் வச­திகள், பின்­தங்­கிய மாண­வர்­களின் கற்றல் அபி­வி­ருத்­திக்­கான உத­விகள் எனப்­ப­லவும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஐக்­கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்­புக்­களால் கடந்த காலத்தில் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள  சில குடும்­பங்கள் மத்­தியில் நேர­டி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் அடிப்­ப­டையில் 3.9 மில்­லியன் மக்கள் ஓர­ளவு உணவுப் பாது­காப்­பின்மை நிலைக்கும், சுமார் ஒரு இலட்சம் மக்கள் தீவிர உணவுப் பாது­காப்­பின்­மைக்கும் முகங்­கொ­டுத்­தி­ருப்­ப­தாக தெரி­ய­வந்­தது. இந்­நி­லையில் சிறு­வர்­களும் இந்­நெ­ருக்­க­டியில் அதி­க­மாக உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வலி­யு­றுத்­தின.

சிறு­வர்­களின் நலன்­களை உறு­திப்­ப­டுத்­தும் வகையில் 1924 இல் ஜெனி­வாவில் சிறு­வர்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச பிர­க­டனம் மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் அது சட்­ட ­ரீ­தி­யான அங்­கீ­காரம் பெறாமை கார­ண­மாக நடை­மு­றைப்­ப­டுத்தப்பட­வில்லை.

1948இல் ஐக்­கிய நாடுகள் பொதுச்­சபையினால் அனைத்­து­லக மனித உரி­மைகள் பிர­க­டனம் உரு­வாக்­கப்­பட்­டது. இப்­பி­ர­க­ட­னத்தில் சிறு­வர்­களின் உரி­மை­களைப் பாது­காக்கும் பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

1959ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை­யினால் சிறு­வர்­களின் நலன்­களைப் பாது­காக்கும் பத்து அம்­சங்­களை உள்­ள­டக்­கிய சிறுவர் உரிமைப் பிர­க­டனம் உரு­வாக்­கப்­பட்­டது. இப்­பி­ர­க­ட­னமும் சட்­ட­வ­லு­வற்­ற­தா­கி­விட்­டது. இந்­நிலையில், 1989இல் ஐக்­கிய நாடுகள் பொதுச்­சபை சிறுவர் உரிமை பிர­க­ட­னத்தை உரு­வாக்­கி­யது. 

இப்­பி­ர­க­டனம் 1990இல் சட்­ட ­ரீ­தி­யான அங்­கீ­காரம் பெறப்­பட்டு அமு­லுக்கு வந்­தது. இந்த சம­வா­ய­மா­னது, சிறு­வர்கள் மதிப்­புக்­கு­ரி­ய­வர்கள் என்­பதை வலி­யு­றுத்­து­வ­துடன் சிறு­வர்­களை முழு­மை­யாக பாது­காத்து அவர்­களை சிறந்த பிர­ஜை­க­ளாக உரு­வாக்­கு­வ­தற்­கான சகல அம்­சங்­க­ளையும் கொண்­ட­தாக விளங்­கு­கின்­றது.

அந்த வகையில் இலங்கை சிறுவர் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது. எனினும் சிறு­வர்கள் எதிர்­கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ண­மா­கவே காணப்­ப­டு­கின்­றன. இச்­ச­வால்கள் குறித்து நாம் பட்­டியல்படுத்­து­கின்­ற­போது மலை­யக சிறு­வர்கள் எதிர்­கொள்ளும் சவால்கள் சற்று அதி­க­மா­க­வுள்­ள­தோடு பல்­­துறை சார்ந்­த­ன­வா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றி­லி­ருந்தும் சிறு­வர்­களை மீட்­டெ­டுக்க வேண்­டிய தேவைப்­பாடு அதி­க­மா­கவே காணப்­­ப­டு­கின்­றது.

இலங்கை கட்­டாய கல்விச் சட்டம் போன்­ற­வற்றை அமுல்­ப­டுத்தி மாண­வர்­களின் கல்வி அபி­வி­ருத்­திக்கு வலுச்­சேர்த்­துள்­ளது. எனினும் மாண­வர்கள் கல்­வி­யினைத் தொடர்­வதில் தடைகள் பலவும் காணப்­ப­டு­கின்­றன. சிறு­வர்­களை தொழி­லுக்­க­மர்த்தும் நிலை மலை­ய­கத்தில் அதி­க­ரித்து காணப்­படுவதாக குற்­றச்­சாட்­டுக்கள் பலவும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. நகர்ப்­புற எஜ­மா­னர்­களின் வீடு­க­ளிலும், வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் சிறு­வர்கள் உழைப்பில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

இத­ன­டிப்­ப­டையில் 6 தொடக்கம் 14 வய­துக்குட்­பட்ட சிறு­வர்­களின் தொழில்­நிலை குறித்து அண்­மைக்­கால தக­வ­லொன்று பின்­வ­ரு­மாறு வலி­யு­றுத்­து­கின்­றது. 

இதற்­க­மைய பெருந்­தோட்­டத்­து­றையில் 85.2 வீத­மான ஆண்­களும், 82.3 வீத­மான பெண்­க­ளு­மாக மொத்தம் 83.8 வீத­மான சிறு­வர்கள் பாட­சா­லைக்கு செல்­கின்­றனர்.

இதே­வேளை 10.3 வீத­மான ஆண்­களும், 14.6 வீத­மான பெண்­க­ளு­மாக மொத்தம் 12.4 வீத­மான சிறு­வர்கள் ஏதே­னு­மொரு தொழில் புரி­ப­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். அத்­தோடு பாட­சா­லைக்கும் செல்­லாது, ஏதே­னு­மொரு தொழி­லிலும் ஈடு­ப­டாது 3.8 வீத­மான சிறு­வர்கள் வெறு­மனே தோட்­டப்­­ப­கு­தி­களில் சுற்றித் திரி­வ­தாக அதிர்ச்சி தரும் தக­வ­லொன்று வலி­யு­றுத்­து­கின்­றது. இவ்­வெண்­ணிக்­கையில் 4.5 வீத­மான ஆண்­களும், 3.1 வீத­மான பெண்­களும் உள்­ள­டங்கு­­கின்­றனர்.

தொழில் புரியும் சிறு­வர்­களின் தொழில் வகைகள் பின்­வ­ரு­மாறு அமைந்­துள்­ளன. இதற்­கேற்ப வீட்டுப் பணி­யா­ளர்­க­ளாக 15.5 வீத­மான ஆண்­களும், 85.5 வீத­மான பெண்­க­ளு­மாக மொத்தம் 50.5 வீத­மான சிறு­வர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். வர்த்­தக நிலை­யங்­களில் 47.3 வீத­மான ஆண்­களும், 2.2 வீத­மான பெண்­க­ளு­மாக மொத்தம் 24.8 வீத­மான சிறு­வர்கள் பணி­யாற்­று­கின்­றனர். நாட்­கூ­லி­க­ளாக 25.2 வீத­மான ஆண்­களும், 8.4 வீத­மான பெண்­க­ளு­மாக மொத்தம் 16.8 வீத­மான சிறு­வர்கள் பணி­யாற்­று­கின்­றனர். 3.2 வீத­மான ஆண்­களும், 1.2 வீத­மான பெண்­க­ளு­மாக மொத்த தொழில் புரியும் சிறு­வர்­களில்  2.2 வீத­மானோர் கால்­நடை வளர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

மேற்­கண்ட தொழில்­க­ளை­ விட 5.7 வீத­மான சிறு­வர்கள் வேறு பல தொழில்­களில் ஈடு­­படுவ­தாக தக­வல்கள் வலி­யு­றுத்­து­கின்­றன. சிறு­வர்­களை தொழி­லுக்கு அமர்த்தும் ஊட­கங்கள் என்ற வகையில் 60 வீத­மான சிறு­வர்கள் தர­கர்­களின் மூல­மாக தொழி­லுக்கு அமர்த்­தப்­ப­டு­கின்­றனர்.

20.5 வீத­மான சிறு­வர்கள் பெற்றோர் மூல­மா­கவும், 6.5 வீத­மான சிறு­வர்கள் ஏனைய உற­வி­னர்கள் மூல­மா­கவும், 8.3 வீத­மான சிறு­வர்கள் தொழில் வழங்­கு­நர்கள் மூல­மா­கவும் தொழி­லுக்கு அமர்த்­தப்­ப­டு­வ­தாக கடந்­த­கால தக­வல்கள் வலி­யு­றுத்­து­கின்­ற­மையும் நோக்­கத்­தக்­க­தாகும்.

பல ­ச­மூக பொரு­ளா­தார சமத்­து­வ­மின்­மை­யாலும் போதி­ய­ளவு கல்வி வச­தியின்­மையாலும் உரு­வாக்­கப்­பட்ட வறுமை நிலையே சிறு­வர்­களை தொழிலில் அமர்த்­து­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக இருப்­ப­தாக சர்­வ­தேச தொழி­லாளர் ஸ்தாப­னத்தின் அறிக்கை குறிப்­பி­டு­கின்­றது.

இழக்­கப்­படும் சந்­தர்ப்பம்

பெருந்­தோட்­டத்­து­றையை பொறுத்தவரையில் தொழிலில் ஈடு­பட்­டுள்ள சிறு­வர்கள் குறை­வான கல்வித் தரத்­தினைக் கொண்­ட­மை­யினால் அவர்­க­ளது வாழ்க்­கையில் பல சிறந்த சந்­தர்ப்­பங்­களை இழக்க நேரிட்­டுள்­ள­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழக பொருளியற்­றுறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் திரு­மதி ஷோப­னா­தேவி குறிப்­பிடு­கிறார். அத்­தோடு சிறு­வர்கள் பின்­வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யேற்­ப­டு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­விக்­கின்றார்.

இளம் பரு­வத்தில் தொழில் வாய்ப்பு குறை­வாக காணப்­படும். அவர்­க­ளது குறைந்த முத­லீட்டால் தொழிற்­சந்­தையில் குறைந்த வரு­மா­னத்­தையே உழைக்கக் கூடி­ய­தாக இருக்கும். குறைந்த கல்­வித்­த­ர­மா­னது அவர்­களின் தொழிற்சார் திறனை வளர்க்கும் இய­ல­ள­விலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்களுக்­கான வாய்ப்­பினை அதி­க­ரிக்­கின்­றது. அவர்­க­ளது தலை­மைத்­து­வ­மா­னது குறைந்த தரத்­தி­லேயே காணப்­படும். பாதிக்­கப்­பட்ட மனோ­நிலை உள்­ள­வர்­க­ளா­கவும் சமூ­கத்தின் மீது வெறுப்­பு­ணர்வு உள்­ள­வர்­க­ளா­கவும் சிறு­வர்கள் வளர்­கின்­றார்கள். பல சிறுவர் தொழி­லா­ளர்கள் சமூக விரோ­தி­க­ளா­கவும், குற்­ற­வா­ளி­க­ளா­கவும் ஆகி­வி­டு­கின்­றனர் போன்ற பல்­வேறு விட­யங்­க­ளையும் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் ஷோப­னா­தேவி இதன்­போது சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

தாய் அல்­லது தந்தை  தொழில் நிமித்தம் வெளி­நாடு செல்­வதன் கார­ண­மா­கவும் உரிய பாது­காப்­பின்றி காணப்­படும் பிள்­ளை­களும் சவால்கள் பல­வற்­றையும் சந்­தித்து வரு­கின்­றமை தெரிந்­த­தே­யாகும். வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் தர­வு­களின் பிர­காரம் 2020 ஜன­வரி முதலாம் திகதி முதல் 2023.08.29 திகதிவரை ஒரு இலட்­சத்து 77,706 பேர் வெளி­நா­டு­களில் வீட்டுப் பணிப்­பெண்க­ளாக பணி­யாற்றி வருகின்றனர். இவர்­களில் அநே­க­மான மலை­யக பெருந்­தோட்டப் பெண்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இப்­பெண்கள் உழைத்­த­னுப்பும் பணத்தை சில ஊதாரிக் கண­வன்மார் பிழை­யான வழி­களில் செலவு செய்து வரு­வதும் தெரிந்­த­தாகும். இதே­வேளை பாது­காப்­பற்ற நிலையில் காணப்­படும் சிறு­வர்கள் பாது­காப்பு வழங்க வேண்­டி­ய­வர்­க­ளா­லேயே துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு வரு­வதும் அறிந்­த­தே­யாகும். இது 'வேலியே பயிரை மேய்ந்த' ஒரு நிலைக்கு ஒப்­பா­ன­தாகும். இத்­த­கைய நிலை­மைகள் பிள்­ளை­களின் கல்வி உள்­ளிட்ட பல விட­யங்­க­ளி­லும் தாக்கம் செலுத்­து­கின்­றன. இதனால் பிள்­ளை­­களின் நிகழ்­கா­லமும் எதிர்­கா­லமும் சூனி­ய­மாகிக்கொண்­டி­ருக்­கின்­றது. வறுமை, போஷாக்­கின்மை, நோய்கள் போன்ற பலவும் சிறு­வர்­களின் இயல்பு வாழ்க்­கையில் பாதிப்­பினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

இதே­வேளை விசேட தேவை கொண்ட சிறு­வர்­களின் எண்­ணிக்கை இலங்­கையில் வேக­மாக அதி­க­ரித்து வரும் நிலையில் இவர்­களின் உரி­மை­களை உரி­ய­வாறு உறு­திப்­படுத்­து­வ­திலும் சிக்­கல்­நிலை மேலோங்­கி­யுள்­ளது.

மலை­யக பெருந்­தோட்டப் பகு­தி­களில் விசேட தேவை கொண்ட சிறு­வர்கள் அநேக­முள்­ளனர். எனினும் இவர்கள் உரி­ய­வாறு இனங்­கா­ணப்­ப­டாத நிலையில் புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இருந்து வரு­வதும் புதிய விட­ய­மல்ல.

மலை­ய­கத்தின் பல கல்வி வல­யங்­களில் விசேட கல்­விக்கான ஆசிரிய ஆலோச­கர்கள், உதவிக் கல்விப் பணிப்­பாளர்கள், பணிப்­பாளர்கள் இல்லாத நிலையே காணப்­படு­கின்­றது. இதனால் இத்தகைய மாணவர்­களுக்கான கல்வி உள்ளிட்ட பிற நட­­வடிக்­கைகளை முன்­னெடுப்பதில் பாட­சாலை­கள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மலையக கல்வி வல­யங்களில் மேற்கண்ட உத்தியோகத்தர்கள் நிய மிக்­கப்பட்டு விசேட தேவை கொண்ட சிறுவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைதல் வேண்டும். அத்தோடு விசேட தேவையாளர்களுக்கு தேவையான வளங்களும் உரியவாறு கிடைக்காத ஒரு நிலையே மலையகத்தில் காணப்படுகின்றது.

இதனால் விசேட தேவையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன. விசேட தேவை­யாளர்களும் எமது சகோதரர்களே எனக்­கருதி அவர்களுக்கான பல்வகைசார் உரி­மைகளையும் உறுதிப்படுத்த ஒவ்வொரு­வரும் முன்வருதல் வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறுவர் பராயம் என்பது மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது. இந்நிலையில் அப்பரா­யத்தில் சுதந்திரமாக பிள்ளைகள் செய­லாற்று­வதற்கு இடமளிக்க வேண்டும். அத்து­மீறிய தலையீடுகளாலும் அதிகரித்த எதிர்­பார்ப்புகளினாலும் சிறுவர்களின் இயல்பு நிலையை பாழ்படுத்த எவரும் முற்படுதலா­காது. தமது சிந்தனைகளை பிள்ளைகளில் திணித்து அவர்களின் ஆளுமைக்கு இடை­­யூறு ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிதைப்பது மிகப்பெரும் குற்றமாகும். இதை­விடுத்து அவர்களை பக்குவமாக செதுக்கி நாளைய உலகுக்கு தயார்படுத்த வேண்டி­யது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54