யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த லக்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை பட்டா ரக வாகனத்தில் வந்த வன்முறை கும்பல் ஒன்று வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலில் இருந்து தப்பிக்க , இளைஞன் முச்சக்கர வண்டியை கைவிட்டு வீதியில் ஓடிய போதிலும், துரத்தி துரத்தி வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
வீதியில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM