அங்கீகரிக்க மறுத்தலை அடையாளமாக்குவோம்....!

02 Oct, 2023 | 03:24 PM
image

ழை­யன கழி­தலும் புதி­யன புகு­தலும் இன்­றைய நவீன உலகில் மகு­டமாய் இருக்க, நாட்­டா­ரி­ய­லுக்கு என்­றுமே ஒரு இடம் உண்டு. அதிலும் குறிப்­பாக மலை­யகத் தமி­ழர்கள் தமது பாரம்­ப­ரி­யத்தை பறை­சாற்றும் வகையில் பல கலை கலா­சார விட­யங்­களை தம்­மோடு கைகோர்த்­த­படி இன்று வரை நாட்­டா­ரி­யலை பாது­காக்­கின்­றனர்.

அந்த கலை வரி­சையில் பொன்னர் சங்கர், காமன் கூத்து, அர்ச்­சுனன் தபசு போன்ற நிகழ்த்­து­க­லைகள் மேலோங்கி நிற்­கின்­றன. குறிப்­பாக பொன்னர் – சங்கர் என்ற நிகழ்த்து கலை பற்றி பிரத்­தி­யே­க­மாக நோக்­கு­வோ­மாயின் சோழர் காலத்தில் எழுந்த மெய் சம்­ப­வத்­தினை அடி­யொட்டி எழுந்த அண்­ணன்­மார்கள் கதை­யா­னது கோலத்தான் கவுண்டர் பரம்­ப­ரை­யான நெல்­லி­யங்­கோ­டனின் புதல்­வர்­க­ளா­கிய பொன்னர், சங்கர் என்­ப­வர்­களின் வாழ்க்கை வர­லாற்று சாக­சங்­களை கூறு­வ­தாக அமைந்­துள்­ளது.

புலவர் பிச்­சையின் ஓலைச்­சு­வ­டியை அடி­யொட்டி கவிஞர் சக்­தியால் தொகுக்கப்பட்டது. அதன்­பி­றகு அ.பழ­னிச்­சாமி என்­பவர் பொன்னர் அழகர் கள்­ள­ழகர் அம்­மா­னை­யாக தொகுத்து காலப்­போக்கில் வர­குண்ணாப் பெருங்­குடி கூட்டம் பொன்னர் சங்கர் வர­லாற்று நூல் என நாமம் சூட்­டப்­பட்­டது.

1965ஆம் ஆண்டு ஈ.சி. இரா­ம­சாமி என்ற நாட்­டுப்­பு­ற­வி­ய­லாளர் முதன் முத­லாக இதனை ஒளிப்­ப­திவு செய்ய அதனை இங்­கி­லாந்தைச் சேர்ந்த பிரேண்டயி  எப்.பேக் உத­வி­யுடன் எல்டர் பிரதர்ஸ் ஸ்டோரி எபிக் ஒப் தமிழ் (helder brother story epic of Tamil ) எனும் பெயரில் தமிழில் வெளி­வந்­தது. இப்­படி பெரு­மிதம் கொண்ட இதனை இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் இலங்கை வரும்­போது தம்­மோடு ஈர்த்து வந்து சாஞ்­சி­மலை, பெரிய லட்­சுமி தோட்டம், அல்பின், டெரிக்­கி­ளயர், அக்­க­ரப்­பத்­தனை போன்ற இன்னும் பல மலை­யகப் பகு­தி­களில் இந்த கூத்தை இன்று வரை கோலா­க­ல­மாக அரங்­கேற்றி வரு­கின்­றனர். பல இடங்­களில் இந்த கூத்து மருவி வரு­கின்­றது. இதற்­கான அங்­கீ­காரம் பெறப்­படல் வேண்டும் என்­பதே மலை­யக சமூ­கத்தின் நோக்­க­மாக இருக்­கி­றது.

இப்­படி விளிம்பு நிலையில் இருக்கும் இக்­கூத்­தினை யாரும் அங்­கீ­க­ரிக்­கா­விட்­டாலும் பர­வா­யில்லை இதுவே எமது அடை­யாளம் என தல­வாக்­கலை மட்­டுக்­க­லையைச் சேர்ந்த முன்னாள் கூத்துக் கலைஞர் பிச்­சை­முத்து முத்­தையா அண்­ணா­வியார் கூறு­கின்றார். இந்த ஊரில் கிட்­டத்­தட்ட 80 வருட கால­மாக இதுவே இவர்­களின் அடை­யா­ள­மாக இருந்து வரு­கி­றது. பரம்­ப­ரையின் வழி­தொட்டு கடந்த பல தசாப்­தங்­க­ளாக இவ்­வூரில் இந்த கூத்துக் கலையை பாரிய சவால்­க­ளுக்கு மத்­தியில் இவர் அரங்­கேற்றி வரு­கின்றார்.

உழைப்­புக்­கேற்ற ஊதியம் இன்­றிய துன்­பத்தின் பிடியில் இருந்த ஆதி­கால மலை­யகத் தமி­ழர்­க­ளுக்கு,   மாலை மயங்கி இருள் சூழும் மாசி மாதம் முழு­வதும் இவ்­வா­றான இக்­கூத்­துக்­க­லை­களே குதூ­க­லமாய் அமைந்­தன. ஆனால் இன்று அதே துன்ப நிலை இருக்­கின்ற போதும் கூத்தின் குதூ­கலம் மாத்­திரம் குறைந்­து­விட்­டது. காரணம் பொரு­ளா­தாரம் எனும் தடை­யாகும். இதன்படி “ஒரு கூத்து செய்ய 30,000 ரூபா­வுக்கு மேல் செல­வா­கின்­றது. சாதா­ரண ஏழை மக்­க­ளுக்கு இது பெருந்­தொகை” என்கிறார் அண்­ணா­வியார்.  இதே­போல கூத்தின் கதா­பாத்­தி­ரங்­களை ஏற்கும் ஆர். ஞான­சே­கரன் தெரி­விக்­கையில் “இந்த கூத்­துக்கு ஆடைகள் தயா­ரிக்க ஒரு கிழ­மைக்கு மேல் செல்லும். கூலி­யோடு மொத்­த­மாக 10,000 ரூபாய்க்கு மேல் தேவைப்­ப­டு­கின்­றது என்­கிறார். இக்­க­லைக்கு மக்­களின் காணிக்கை வழி­யாக மாத்­தி­ரமே பண வரவு இருக்­கின்­றது.

சாதா­ரண தினக் கூலி தொழி­லா­ளர்­க­ளாக இருக்கும் இவர்­க­ளுக்கு அத்­தொ­கை­யா­னது பாரிய நிதி ஆகும். ஜெ.மோக­ன­நாதன் என்ற கலைஞர் கூறு­கையில் “நா பல தடவ கடன் பட்­டு­தாங்க இத செய்றேன்…. எங்­க­ளோட பாரம்­ப­ரிய கலைய எப்­ப­டிங்க விட்­டுர்­றது? அது இரத்­தத்­தோட ஊறு­னது இல்­லியா " என்கிறார்.

இவ்­வாறு இக்­கூத்­துக்­காக பல நாட்கள் தத்­த­மது வேலை­களை விடுத்தே இதனை செய்­கின்­றனர். இவர்­க­ளுக்கு இதனால் எவ்­வித வரு­வாயும் இல்லை, ஆனால் தமி­ழர்­க­ளின் அடை­யாளம் தோய்ந்து போக­லா­காது என்ற ஒரே நோக்­கத்­துக்­காக இதை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதனால் இவர்­க­ளுக்குக் கிடைப்­பது வெறு­மனே கைதட்டும் பாராட்டும் மாத்­தி­ர­மாக இருந்­தாலும் அதில் மன திருப்தி கொள்­கின்­றனர். அதே வேளை ஒவ்­வொரு வரு­டமும் குறித்த நேரத்தில் இக்­க­லையை நடத்தி வரு­கின்­றனர். எவ்­வித பொரு­ளா­தார தடைகள் வந்­தாலும் நிறுத்­தி­யதே இல்லை. அதிலும் கடு­மை­யான கொரோனா காலப்­ப­கு­தி­யிலும் நெறி­மு­றை­க­ளோடு இதனை செய்து உயி­ரோட்டம் பேணி வைத்­தி­ருக்­கின்­றனர் என்­பது முக்­கிய விடயம்.

இதே வேளை கூத்­துக்­க­லை­களை மலை­யகப் பகு­தி­களில் மதிக்­காத தன்­மையும் அதி­க­மாக இருக்­கின்­றது. வெறும் கூத்­தர்கள் தானே இவர்கள் என கலை­ஞர்­களை அவ­ம­திக்கும் தன்­மையே பல­ரி­டமுள்ளது. ஆனால் மட்­டுக்­கலை தோட்­டத்தில் அவ்­வாறு இல்லை. இந்த கலை தம்­மோடு அழிந்து விடாது அடுத்த பரம்­ப­ரை­யி­னரும் இதை முன்­னெ­டுக்க வேண்டும் என முழு­மூச்சாய் செயற்­ப­டு­கின்­றனர். அண்­ணா­வியார் முத்­தையா இதற்­கா­கவே சீடர்­களை உரு­வாக்கி பயிற்சி வழங்­கு­வ­தோடு கூத்து பயிற்­சியின் போது அவ் ஊரை சேர்ந்த எல்லா நபர்­க­ளுக்கும் இதை பயிற்­று­விக்­கின்றார்.

ஆர். ஞான­சே­கரன் தன் மக­னான ஜீ.லிதுர்ஷன் என்­ப­வரை சிறு­வ­யதில் இருந்தே இக் கூத்­திற்­காக தயார்ப்­ப­டுத்­தியுள்ளார். அத்­துடன் ஜெ.மோகன நாதன் என்­பவர் தன் புதல்வர்களான எம்.ரொபட்சன், எம்.அஜாந் என்ற இரு­வ­ரையும் இதில் ஈடு­ப­டுத்தி இன்று அவர்கள் பிர­தான பாத்­தி­ர­மாக திகழ்­கின்­றனர். இப்­படி பரப்­பு­வ­தோடு நிறுத்தி விடாது இக்­கூத்து பெருமை பற்றி தெருக்­கூத்து வழி­யாக சென்று இதன் மகி­மை­யையும் அறி­யப்­ப­டுத்­து­கின்­றனர். அத்­தோடு பெறு­நர்கள் மத்­தி­யிலும் அதிக வர­வேற்பு உள்­ளது. 

எம். ராஜேஸ்­வரி என்­பவர் கருத்துத் தெரி­விக்­கையில் “இந்த கூத்­துல உள்ள கதா­பாத்தி­ரங்­கள பாத்தா,  உண்­மை­யான தெய்­வத்த பாக்­குற மாதி­ரியே இருக்கு அதனால இதில் நாங்க ஒன்­றித்து போகிறோம் " என்­கிறார். ஜனார்த்­தனன் என்ற இளைஞர் கூறு­கையில் “ஏனைய ஊர் இளை­ஞர்­களை போலல்­லாது எங்கள் ஊரில் எமது குழாத்­தினர் இக்­க­லையை பாது­காப்­பதில் அதிக ஆர்வம் கொண்­டுள்­ளனர்" என தெரி­வித்தார்.

 இந்த பொன்னர் – சங்கர் கூத்துக் கலையை இவர்கள் தெய்­வாம்­ச­முள்ள கலை­யாக மதிக்­கின்­றனர். ‘இத­னா­லேயே எங்கள் ஊரில் எவ்­வித அசம்­பா­வி­தங்­களும் நடப்­ப­தில்லை. ஊர் செல்வ செழிப்­பாக இருக்­கி­றது என்­கின்­றனர். ஆனால் இந்த கூத்­துக்­காக தம்மை அர்ப்­ப­ணித்து வரும் இவர்­க­ளுக்கு கைக்­கொ­டுத்து அங்­க­கீ­க­ரிக்­கவோ, விசேட விரு­து­க­ளையோ நினை­வுச்­சின்­னங்­க­ளையோ வழங்­கு­வ­தற்கு கூட எந்த ஒரு தனி நபரோ அல்­லது அமைப்­பு­களோ முன்­வ­ரு­வ­தில்லை.

இப்பிர­தே­சத்தை சேர்ந்த கவி­ஞரும் அதி­ப­ரு­மான வே.தின­கரன் கூறு­கையில், 

“இன்­றைய நாட்­டுப்­புற கலை­க­ளா­னது விளிம்பு நிலை­யி­லேயே இருக்­கி­றது. கூத்துக் கலை­ஞர்கள் உண்­மை­யி­லேயே பாவ­மா­ன­வர்கள். எத்­த­னையோ பொரு­ளா­தார சிக்­கல்­க­ளுக்கு மத்­தியில் கூத்­துக்­களை முன்­னெ­டுத்­தாலும் இவர்­க­ளுக்கு சரி­யான அங்­கீ­காரம் கிடைப்­ப­தில்லை. இவர்­க­ளுக்கு எவ்­வித பாராட்­டுக்­களும் இல்லை. காரணம் இதனை பாது­காப்­ப­தற்­கான நிறு­வ­னப்­ப­டுத்­தப்­பட்ட எவ்­வித சங்­கமோ அமைப்போ இன்று மலை­யக பகு­தி­களில் இல்லை. தற்கால இளைஞர்கள் எது அடையாளம் என்பதை மறந்து மாயைக்கு பின்னால் செல்கின்றனர். 

இவ்வாறான கலைஞர்கள் அழியாது இருக்கின்ற போதிலும் இவர்களை பெருமைப்படுத்தி கை கொடுக்க யாருமில்லை. இதற்கு அரசியல்வாதிகள் முன்வந்து கலாசார மண்டபங்களை அமைத்துக் கொடுப்பதோடு இவர்களுக்கு நிதி திட்டங்களையும் கொண்டு வரும் பட்சத்தில் ஏனைய பிரதேசங்களை போல எமது மலையக கூத்து கலைகளும் பாதுகாக்கப்படலாம்” என தெரிவித்தார். 

உழைக்கும் வர்க்கத்தினரின் 200 வருட நிறைவை கொண்டாடும் இக்காலகட்டத்திலேயே தமிழர்களின் அடையாளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே பாரம்பரிய  அழியாத பொக்கிஷங்களாக விளங்கும் கூத்து கலைகளை பாதுகாக்க வேண்டியது எமது வாழ்வியல் கடமையாகும்.

செல்வகுமார் ரினோஷன்

ஊடக கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54