வடக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டிய 'கோடிலியா'

02 Oct, 2023 | 03:24 PM
image

கோடீஸ்வரன் றுஷாங்கன்

இந்து சமுத்­தி­ரத்தின் நித்­திலம் என வர்­ணிக்­கப்படும் இலங்கை தீவு, அதன் கடற்­க­ரை­களால் மாத்­தி­ர­மன்றி, காடுகள், மலைகள், ஆறுகள், வயல்­வெ­ளிகள் என்று எல்­லா­வி­த­மான சுற்­றுலா ஈர்ப்­புக்­க­ளையும் தன்­ன­கத்தே கொண்ட ஒரு அற்­புத தீவாக விளங்­கு­கி­றது.

எல்லாக் காலமும் கிட்­டத்­தட்ட ஒரே வித­மாக இருக்கும் அதன் கால­நிலை இதற்கு மேலும் அழகு சேர்த்து வருடம் முழு­வதும் சுற்­றுலாப் பய­ணி­களைக் கவர்ந்­தி­ழுக்கும் தன்­மையை அதற்குக் கொடுக்­கி­றது.

வரங்­களைச் சாப­மாக்கும் அதன் ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும், அதற்குச் சவால் விட்­ட­வர்­க­ளி­னதும் இடை­ய­றாத மோதல்­களால் இந்த அழ­கிய தீவு உருக்­கு­லைந்து அதன் சுற்­றுலா ஈர்ப்பை படிப்­ப­டி­யாக இழந்து, ஈஸ்டர் தாக்­குதல், கொவிட் தொற்று, அரக­ல­ய­வுடன் முற்­றாக அது முடங்கிக் கிடந்­தது.

ஆனால், நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புதிய தலை­மைத்­து­வத்தின் தூர­நோக்­கு­ட­னான நகர்­வு­களால் படிப்­ப­டி­யாக அது மீண்டும் உயர்­பெற்று சுற்­றுலாப் பய­ணி­களை மறு­ப­டியும் ஈர்க்கத் தொடங்­கி­விட்­டது.

ஆனாலும், தொடர் மோதல்­களால் பல தசாப்­தங்­க­ளாக சிதை­யுண்­டு­போ­யி­ருக்கும் வட மாகா­ணத்தின் சுற்­று­லாத்­துறை இன்­ன­மும் முற்­றாகச் சீர்­பெற்­று­வி­ட­வில்லை. இன்­னமும் முழு­வ­து­மாக மீள்­கட்­டு­மானம் செய்­யப்­ப­டாத நக­ரங்­களும், அழி­வுற்ற பல கட்டு­­மா­னங்­களும் வடக்கின் சுற்­று­லாத்­துறை வளர்ச்­­சிக்குப் பெரும் சவா­லா­கவே இருக்­கின்­ ன்றன.

மோதல்கள் முடி­வுக்கு வந்த சிறிது காலத்­தி­லேயே வடக்­குக்­கான தரை­வழிப் பாதை கார்ப்பற் வீதி­க­ளாக உயிர்­பெற்­றதால் அதன் சுற்­று­லாத்­துறை சிறி­த­ளவு உயிர்­பெறத் தொடங்­கி­யது. முற்­றாக அழி­வ­டைந்து கிடந்த ரயில் பாதைகள் சீரான பின்னர் அது மேலும் சிலிர்த்­துக்­கொண்­டது. பலாலி விமான நிலையம் சர்­வ­தேச விமா­ன­நி­லை­ய­மாக தர­மு­யர்த்­தப்­பட்டு சென்­னைக்­கான விமான சேவைகள் ஆரம்­பித்த பின்னர் சுற்­று­லாத்­துறை சிற­க­டித்துப் பறக்கத் தொடங்­கி­யது.

இவ்­வாண்டு ஜூன் 16ஆம் திகதி காங்கேசன்துறை துறை­முகம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக செயற்­படத் தொடங்­கி­ய­போது சென்­னை­யி­லி­ருந்து வருகை தந்த ‘கோடி­லியா’  என்­கின்ற உல்­லாசப் பயணக் கப்பல் சேவை இந்த வளர்ச்­சிக்கு மகுடம் சூட்டி புத்­து­யி­ரூட்டி­­­யுள்­ளது.

அன்­றை­ய­தினம் துறை­மு­கங்கள் மற்றும் விமா­ன­சே­வைகள் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்­வா­வுடன் இணைந்து, கடற்­றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா துறை­மு­கத்தைத் திறந்து வைத்­தி­ருந்தார். கார்ப்பட் வீதி­களை அமைத்து, ரயில் சேவை­களை ஆரம்­பித்துக் காட்­டி­ய­து­போல, நீண்­ட ­கா­ல­மா­கவே ‘காங்­கேசன்துறை துறை­முகம் திறக்கப்படும், சென்­னைக்கும் காங்­கேசன்துறைக்கும் இடையில் கப்பல் போக்­கு­வ­ரத்து ஆரம்­பிக்கப்படும்’ என்றுதான் சொல்லி வந்­ததை  நிரூ­பித்துக் காட்­டினார்.

காங்­கேசன்துறை துறை­முகம் செயற்­பட ஆரம்­பித்­த­துமே முதல் வர­வாக வந்த ‘கோடிலியா’ உல்­லாசப் பயணக் கப்பல், தொடர்ந்து ஜூன் 23, 30ஆம் திகதிகளில் இங்கு வருகை தந்து, அதன் பின்­னர் ஆகஸ்ட் 11, 18, 25ஆம் திகதிகளிலும், செப்­டெம்பர் 1, 8, 15ஆம் திகதிகளிலும் என 9 தட­வை­க­ளாக 8 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட இந்திய சுற்­று­லா­ பயணிகளை காங்­கே­சன்துறைக்கு அழைத்­து­ வந்து அவர்­களில் 6ஆயிரம் பேர் வரை­யி­லா­னோரை யாழ்ப்­பா­ணத்தைச் சுற்­றிப்­ பார்க்கச் செய்­தது.

சென்­னையை மைய­மாகக் கொண்ட ‘கோடி­லியா’ என்­கின்ற இந்த உல்­லாசப் பய­ணக் கப்­பலின் இலங்­கைக்­கான சேவையை, இலங்­கையின் ஹெய்லிஸ் நிறு­வ­னத்தின் ஓர் அங்­க­மான கிளா­ரியன் ஷிப்பிங் நிறு­வ­னத்­தினர் ­ஏற்பாடுசெய்திருந்­தனர். சுற்­று­லா பயணி­களை உள்ளூர் பிர­தே­சங்­க­ளுக்கு அழைத்­துச் ­சென்று சுற்­றிக்­காட்டும் பணியை ஜோன் கீல்ஸ் நிறு­வ­னத்தின் வோக்கர்ஸ் டுவர்ஸ் நிறு­வ­னத்­தினர் பொறுப்­பேற்று நடத்­தி­யி­ருந்­தனர்.

11 அடுக்­கு­களில், விசேட தங்­கு­ம் அ­றை­கள், உண­வ­கங்கள், திரை­ய­ரங்­குகள், விளை­யாட்டுக் கூடங்கள், நீச்சல் தடா­கங்­களைக் கொண்ட ‘கோடி­லியா’ உல்­லாசப் பயணக் கப்பல், திங்கட்கிழ­மை­களில் சென்­னை­யி­லி­ருந்து புறப்­பட்டு செவ்வாய்க்கிழமை கடலில் பொழுதைக் கழித்­து­விட்டு, புத­னன்று அம்­பாந்­தோட்டை, வியாழன் திரு­கோ­ண­மலை என தரித்து, பிரதி வெள்­ளிக்­­ கி­ழ­மை­க­ளிலும் காங்­கேசன்துறை துறை­மு­கத்­துக்கு இந்­திய சுற்­று­லா­ப்பயணி­களை காவி வந்­தது. 

தொடர்ச்­சி­யான 9 பய­ணங்களிலும் மொத்தமாக 8,113 சுற்­று­லா­ப்பயணிகளை அது காங்கேசன்துறைக்கு அழைத்து வந்தது. இந்த ஆண்டின் இறுதிப் பயணமாக அமைந்த செப்டெம்பர் 15ஆம் திகதியன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு நிலையினால் சுற்­று­லா ­பயணிகள் கப்பலை விட்டு இறங்க அனு­மதிக்­கப்படாதபோதிலும், முதல் 8 தடவைகளிலும் 5,648 இந்திய சுற்­று­லா­பயணிகள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்க ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல் வாய்ப்பளித்தது.

வடக்கு மாகாணத்துக்கு எதிர்­பா­ராத வித­மாக திடீ­ரென வந்த ‘கோடிலியா’ உல்­லாசப் பய­ணக் கப்பல் சுற்­று­லா பயணி­களை வர­வேற்று உப­ச­ரிக்க ஆரம்­பத்தில் போதிய ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருக்­கா­த­போதும், பின்னர் இது­பற்றி யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள இந்­தியத் துணைத் தூது­வ­ரா­லயம் மூலம் அறிந்­து­ கொண்டு துரி­த­மாக செயற்­பட்ட வட  மாகாண ஆளு­நரின் நட­வ­டிக்­கையால், சுற்­று­லா­ பயணிகளை வர­வேற்று உப­ச­ரித்து பயண வழி­காட்டி சேவை வழங்கும் ஏற்­பாடுகள் சிறப்­பான முறையில் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்   துறைசார் அதி­கா­ரிகள் அனை­வ­ரையும் அழைத்து நடத்­திய விசேட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் விடுத்த பணிப்­பு­ரையின் பிர­காரம், வடக்கு மாகாண சுற்­றுலாப் பணி­யகம் ‘கோடிலியா’ சுற்­று­லா­ பயணி­களை வர­வேற்று உப­ச­ரிக்கும் ஏற்­பா­டு­களை துரி­த­மாக மேற்­கொண்­டது. மாவட்டச் செய­லகம், தெல்­லிப்­பழை பிர­தேச செய­லகம், வலி­காமம் வடக்கு பிர­தேச சபை என்­பன இணைந்து, வலி­காமம் வடக்கு முன்னாள் பிர­தே­ச சபை வளா­கத்தில் உரு­வாக்­கிய சுற்­று­லா ­பயணி­களை வர­வேற்­ப­தற்­கான விசேட வர­வேற்பு மையம், சுற்­று­லா­ பயணி­க­ளுக்கு வேண்­டிய பல்­வேறு வச­தி­க­ளையும் அங்கு வழங்­கி­யது.

வலி வடக்கு பிர­தே­ச ­ச­பையின் ஏற்­பாட்டில் நட­மாடும் மல­சல கழி­வு ­கூட வச­தி­க­ளுடன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இந்த விசேட மையத்தில், சுற்­று­லா­ பயணி­க­ளுக்கு உள்ளூர் உணவு மற்றும் உற்­பத்திப் பொருள்கள், கைப்­பணிப் பொருள்­களை விற்­பனை செயற்­வ­தற்­கான காட்சிக் கூடங்கள், முச்­சக்­க­ர­வண்டி, சிறி­ய­ ரக சொகுசு கார்கள், வான்கள் பெரிய வான்கள் என முழு­மை­யான போக்­கு­வ­ரத்து வழி­காட்டி சேவை­களும் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.  

ஒவ்­வொரு முறையும் ‘கோடிலியா’ உல்­லாசப் பயணக் கப்பல் மூலம் வந்த சுற்­று­லா­பயணிகள், யாழ்ப்­பா­ணத்தின் வர­லாற்றுச் சிறப்பு மிக்க இந்து ஆல­யங்­க­ளான மாவிட்­ட­புரம் கந்­த­சு­வாமி கோவில், கீரி­மலை, நகு­லேஸ்­வரம், நல்லூர் கந்­த­சு­வாமி கோவில், மரு­த­னார்­மடம், ஆஞ்­ச­நேயர் ஆலயம் என்­ப­வற்­றுக்கும், யாழ்ப்­பாணக் கோட்டை, சங்­கி­லியன் மந்­தி­ரி­மனை, மணிக்­கூட்­டுக் ­கோபுரம், காரை­நகர் கசூ­ரினா கடற்­கரை, யாழ் .பிர­தான சந்தை என பல பகு­தி­க­ளுக்கும் சுற்­றுலா சென்று இடங்­களைப் பார்­வை­யிட்டு பொருள் கொள்­வ­ன­விலும் ஈடு­பட்­டனர்.

இந்த ஆண்டின் இறுதிச் சேவை­யாக அமைந்த செப்­டம்பர் 15ஆம் திக­தி இடம்­பெற்ற சேவை­யின்­போது யாழ்ப்­பா­ணத்­துக்கு அது­வ­ரையில் வரு­கை­தந்த 6 ஆயிரம் வரை­யி­லான சுற்­று­லா பயணி­களை நன்­றி­யோடு வர­வேற்றுக் கொண்­டாடும் விசேட நிகழ்வு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. எதிர்­பா­ராத வித­மாக அன்­றை­ய­தினம் காணப்­பட்ட கடல் கொந்­த­ளிப்பு நிலை கார­ண­மாக சுற்­று­லா­ பயணிகள் கப்­ப­லை­விட்டு இறங்க அன்று அனு­ம­திக்­கப்­ப­டா­த­போ­திலும், திட்­ட­­மிட்­ட­படி யாழ்ப்­பா­ணத்­துக்­கான இந்­தி­யத் துணைத் தூது­வரின் பங்­கேற்­புடன் ‘கோடி­லியா’ சுற்­றுலா பய­ணி­களின் யாழ். வரவை கொண்­டாடும் நிகழ்வு நடை­பெற்­றது.

வடக்கு மாகாண சுற்­றுலாப் பணி­யக தலைவர் பத்­தி­நாதன் தலை­மையில் நடை­பெற்ற இந்த நிகழ்வில், இந்­தியத் துணைத்­தூ­துவர்  ராகேஷ் நட­ராஜா கலந்து சிறப்­பித்து, இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்த சுற்­று­லா­ பயணி­களை வர­வேற்று உப­ச­ரிக்கும் ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருந்த வடக்கு மாகாண ஆளுநர், சுற்­றுலாப் பணி­யகம், தெல்­லிப்­பழை பிர­தேச செய­லகம் மற்றும் வலி­காமம் வடக்கு பிர­தேச சபை ஆகி­ய­வற்றின் செய­லா­ளர்கள் மற்றும் உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்கள், போக்­கு­வ­ரத்து சேவையை வழங்­கிய முச்­சக்­க­ர­வண்டி, கார் மற்றும் வான் சார­திகள், சுற்­று­லா­ பயணி­க­ளுக்கு உள்ளூர் உற்­பத்திப் பொருள்­களை விற்­பனை செய்த உற்­பத்­தி­யா­ளர்கள் என அனை­வ­ருக்கும் நன்றி கூறி­யி­ருந்தார்.

மேலும், மழை காலத்தின் பின்னர், அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் மீண்டும் ‘கோடிலியா’ உல்­லாசப் பயணக் கப்பல் காங்­கேசன்துறை துறை­மு­கத்­துக்கு வரும் என்று இங்கு தெரி­வித்த அவர், அது­மட்­டு­மன்றி, விரைவில் நாக­பட்­டினம் –- காங்­கேசன்துறை  விசேட கப்பல் போக்­கு­வ­ரத்து சேவையும் ஆரம்­பிக்­கப்­படும் என்ற செய்­தி­யையும் அங்கு அறி­வித்­தி­­ருந்தார். இறு­தி­யாக அரங்­கே­றிய வலி­காமம் வடக்கு கட்­டுவன் பகு­தியில் பயி­லப்­பட்­டு­வரும் பாரம்­ப­ரிய ஆடல் கலை­யான ஒயி­லாட்டம் இந்த நிகழ்வை மேலும் அழ­கு­ப­டுத்­தி­யது.

இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் சர்­வ­தேச விமான நிலை­ய­மாக தலை­நி­மிர்ந்து வரும் பலாலி விமான நிலையம், அதே அர­சாங்­கத்­தின் உத­வி­யுடன் புன­ர­மைப்புச் செய்­யப்­பட்­டு­­வரும் காங்­கேசன்துறை துறை­முகம், சென்னை ‘கோடிலியா’ உல்­லாசப் பயணக் கப்பல் மூலம் யாழ். வந்து சென்ற சுற்­று­லா­பயணிகள், விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் பய­ணிகள் கப்பல் சேவை என்று, இந்­திய அர­சாங்­கத்தின் முன்­மு­யற்­சியால் ஆரம்­பிக்­கப்­பட்­டு­வரும் பல்­வேறு முயற்­சி­களும், வடக்கின் சுற்­று­லாத்­து­றைக்கு புத்­து­யி­ரூட்டும் வகையில் அமைந்­துள்­ளமை மகிழ்ச்­சி­யான விட­யமே.

வடக்கு மாகாணம் சற்றும் எதிர்­பாராத வித­மாக இந்­தி­யா­வி­லி­ருந்து வந்து சென்­­றி­­ருக்கும் சுற்­று­லா­பயணிகள், வடக்கின் சுற்று­­லாத்துறையை மிக அவசரமாக மேம்­படுத்தவேண்டியதன் அவசியத்தை அலாரம் அடித்து விழிப்பூட்டிவிட்டுச் சென்றிருக்கி­றார்கள் என்றே சொல்லவேண்டும்.

மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ‘கோடிலியா’ காங்கேசன்துறை துறை­முகத்துக்கு வருகைதரத் தொடங்குவதுடன், இன்னு­மின்னும் வடக்கை நோக்கிப் படை­யெடுக்க­விருக்கும் உலகின் பல்வேறு நாடு­களையும் சேர்ந்த சுற்றுலாபயணிகளை வர­­­வேற்று, உப­சரித்து, அவர்கள் மூலம் வடக்­கின் பொருளா­தாரத்தை மேம்படுத்த துரித ஏற்­பாடு­களை மேற்கொள்வது வடக்கின் சுற்று­­லாத்­துறை சார்ந்த அனைவரதும் பொறுப்­பாகும்.

சுற்றுலா                    யாழ்

பயணிகள்                 வந்தவர்கள்

ஜூன் 16                     519 421

ஜூன் 23                     420 360

ஜூன் 30                     938 805

ஆகஸ்ட் 11                901 744

ஆகஸ்ட் 18                1,214 1,007

ஆகஸ்ட் 25                584 523

செப்டெம்பர் 1             1241 997

செப்டெம்பர் 8             903 791

செப்டெம்பர் 15           1393 

மொத்தம்                   8,113 5,648

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54