நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் வெளி­யேற்றம் : பேரி­ன­வாதம் அதிக விலை கொடுக்கும்

Published By: Vishnu

01 Oct, 2023 | 07:15 PM
image

கார்­வண்ணன்

முல்­லைத்­தீவு நீதி­மன்ற நீதி­ப­தி­யாக இருந்த ரி.சர­வ­ண­ராஜா, தனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளதால் பத­வி­களில் இருந்து விலகிக் கொள்­வ­தாக அறி­வித்து விட்டு கன­டாவில் தஞ்­ச­ம­டைந்­தி­ருப்­பது, அர­சாங்­கத்தைப் பாரிய நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது.

இவ­ரது இந்த முடிவு, நீதித்­துறை சுயா­தீ­னத்­தன்­மையை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருப்­ப­துடன், தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான திட்­ட­மிட்டு கட்­ட­மைக்­கப்­பட்ட இன­வாதச் செயற்­பாடு அர­சாங்­கத்­தினால் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தையும் சர்­வ­தேச அரங்கில் வெளிக்­காட்­டி­யி­ருக்­கி­றது. தண்­ட­னையில் இருந்து தப்­பித்தல், மற்றும் நீதித்­துறை சுதந்­திரம் மீதான அர­சியல் தலை­யீ­டுகள் குறித்து அதிர்ச்­சி­யுடன் இலங்­கையை பார்க்கும் நிலையை சனல் 4 ஆவ­ணப்­படம் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அது தொடர்­பான சர்ச்­சைகள் ஓய்­வ­தற்கு முன்­னரே, நீதித்­துறை சுதந்­தி­ரத்துக்கு, குறிப்­பாக தமிழ் நீதி­ப­தி­களின் சுயா­தீ­ன­மான செயற்­பா­டு­க­ளுக்கு, ஏற்­பட்­டி­ருக்­கின்ற அச்­சு­றுத்­தலை வெளிப் ­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. முல்­லைத்­தீவு நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் பதவி விலகல்.

அவர் இந்த முடிவை எடுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தற்கு முழுப் பொறுப்­பையும் ஏற்க வேண்­டி­யது, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சிந்­தனை கொண்ட  பாரா­ளு­மன்­றமும், அதே சிந்­தனை வழி வந்த அரச நீதித்­துறைக் கட்­ட­மைப்பும் தான்.

ஏற்கெனவே, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் கொலை வழக்கில், விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த பிள்­ளையான் எனும், இரா­ஜாங்க அமைச்சர் சந்­தி­ர­காந்தன், அர­சியல் தலை­யீ­டு­க­ளினால் விடு­தலை செய்­யப்­பட்டார் என அசாத் மெளலானா தெரிவித்திருந்தார்.

இந்த விடு­தலை விவ­கா­ரத்தில் நீதித்­துறை மீதான அர­சியல் தலை­யீ­டுகள் குறித்து பல்­வேறு தக­வல்கள் வெளி­யாகி ஏற்­ப­டுத்­திய அதிர்ச்சி இன்னும் ஓய்­வ­தற்கு முன்­னரே, முல்­லைத்­தீவு நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் பதவி விலகல் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

முல்­லைத்­தீவு நீதி­மன்ற நீதி­ப­தி­யான அவர், தொல்­பொருள் சட்­டங்­க­ளுக்கு அமை­வாக, குருந்­தூர்­ம­லையில் எந்­த­வொரு கட்­டு­மா­னங்­க­ளையும் மேற்­கொள்­வ­தற்கு தடை­வி­தித்­தி­ருந்தார்.

அவ­ரது அந்த உத்­த­ரவை மீறி பௌத்த பிக்­கு­களும், இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸாரின் உத­வி­யுடன், விகாரைக் கட்­டு­மா­னங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

அந்தக் கட்­டு­மானப் பணிகள் பெரும்­பாலும் முடிவுக் கட்­டத்தை நெருங்கி விட்ட நிலையில் தான், அது குறித்து நீதி­மன்­றத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதன் பின்னர், நீதி­பதி சர­வ­ண­ராஜா அங்கு ஆய்வு செய்யச் சென்ற போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர அங்கு சென்று, விசா­ர­ணை­களில் தலை­யிட முயன்றார். ஆனால் நீதி­பதி சர­வ­ண­ராஜா அதனை அனு­ம­திக்­க­வில்லை. இது நீதி­மன்ற மற்றும் நீதித்­துறை அதி­கா­ரி­களின் ஆய்வு மட்­டுமே என்று கூறி அவரை அங்­கி­ருந்து வெளி­யேற உத்­த­ர­விட்டார்.

இதனை அடுத்து பாரா­ளு­மன்­றத்தில் இன­வா­தத்தைக் கக்கி , அச்­சு­றுத்தல் விடுத்தார் சரத் வீர­சே­கர.

சிங்­கள பௌத்­த­னான தன்னை ஒரு தமிழ் நீதி­பதி எப்­படி வெளி­யேற்­றலாம், தடுத்து நிறுத்­தலாம் என்­றெல்லாம் அவர் பேரி­ன­வாத திமிரை வெளிப்­ப­டுத்தும் வகையில் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

தமிழ் நீதி­ப­திகள் பக்­க­சார்­புடன் செயற்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் விமர்­சித்­தி­ருந்தார். அவ­ருக்குப் பக்கப் பாட்டுப் பாடி, தமிழ் நீதி­ப­தி­களை ஏனைய இனத்­து­வேசம் கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் கருத்து வெளி­யிட்டு எச்­ச­ரித்­தி­ருந்­தனர்.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சக்­தி­களின் இந்த எச்­ச­ரிக்­கையைத் தொடர்ந்து- நீதி­பதி நாட்டை விட்டு வெளி­யே­ற­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் பகி­ரங்­க­மாக அச்­சு­றுத்­தப்­பட்டு இரண்­டரை மாதங்­க­ளுக்குப் பின்­னரே அவர் நாட்டை விட்டு வெளி­யேறி கன­டாவில் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கிறார்.

பாரா­ளு­மன்­றத்தில் விடுக்­கப்­பட்ட பகி­ரங்க அச்­சு­றுத்­தல்­களால் பயந்து போயி­ருந்த நீதி­பதி சர­வ­ண­ராஜா கடந்த 21ஆம் திகதி உயர்­மட்­டத்­தி­னரால் அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

அதன்­போது, நீதி­பதி சர­வ­ண­ராஜா குருந்­தூர்­மலை விகாரை கட்­டு­மா­னத்­துக்கு தடை­வி­தித்து பிறப்­பித்த கட்­டளை உள்­ளிட்ட பல உத்­த­ர­வு­களை மாற்­று­மாறு அழுத்தம் கொடுக்­கப்­பட்டது என அவர் தெரிவித்தாரென செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 23ஆம் திகதி நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு பதவி விலகல் கடி­தத்தை அனுப்பி விட்டு கன­டா­வுக்குத் தப்பிச் சென்­றி­ருக்­கிறார்.

இலங்­கையில் இருந்து உயி­ருக்கு அச்­சு­றுத்தல் என்று கூறி ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் வெளி­யேறி வெளி­நா­டு­களில் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள்.

பொது­மக்கள், போரா­ளிகள், மாத்­தி­ர­மன்றி, படை­யி­னரும், பொலி­ஸாரும் கூட அவ்­வாறு வெளி­யேறிச் சென்­றி­ருக்­கி­றார்கள்.

இப்­போது தான், நீதி­பதி ஒருவர் உயி­ருக்கு அச்­சு­றுத்தல், அர­சியல் அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டு­வ­தாக கூறி, வெளி­நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்­தி­ருக்­கிறார். இந்த விவ­காரம் உள்­நாட்­டிலும் சரி, சர்­வ­தேச அரங்­கிலும் சரி. சாதா­ர­ண­மான ஒன்­றாக எடுத்துக் கொள்­ளப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பில்லை. ஏனென்றால், இந்த அச்­சு­றுத்­தலும் அழுத்­தங்­களும் பார­தூ­ர­மா­னது. பார­தூ­ர­மான விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்தக் கூடி­யது.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், நீதி­பதி ஒரு­வரே தனக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­ட­தாக, கன­டாவில் அடைக்­கலம் தேடிக் கொண்­டி­ருக்­கிறார்.

இதன் மூலம், நீதி­ப­தி­க­ளுக்குக் கூட பாது­காப்­பில்­லாத நாடு என்ற பிரச்­சினை மேல் எழுந்­தி­ருக்­கி­றது.

தமிழ் நீதி­பதி ஒருவர் இவ்­வா­றான நிலையை எதிர்­கொண்­டி­ருக்­கிறார் என்­பது, இலங்­கையில் இன­வாதம், பேரி­ன­வாதம் எந்­த­ள­வுக்கு அச்­சு­றுத்­த­லுக்கு உரி­ய­தாக உள்­ளது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இவை­யெல்லாம் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில், மாத்­தி­ர­மன்றி, அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் முடி­வு­க­ளிலும் தாக்கம் செலுத்தப் போகின்ற விட­ய­மாக இருக்கப் போகி­றது.

கடந்த சில நாட்­க­ளாக ஊட­கங்­களில் பர­ப­ரப்­பாக பேசப்­பட்டு வந்த ஒரு விடயம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­க­ர­வுக்கு அமெ­ரிக்கா வீசா வழங்க மறுத்­தி­ருப்­பது பற்­றி­ய­தாகும்.

பாராளு­மன்ற மேற்­பார்வைக் குழுக்­களின் தலை­வர்கள் செய­ல­மர்வு ஒன்­றுக்கு அமெ­ரிக்­கா­வுக்கு அழைக்­கப்­பட்ட நிலையில், பாது­காப்பு தொடர்­பான மேற்­பார்வைக் குழுவின் தலை­வ­ரான சரத் வீர­சே­க­ர­வுக்கு மட்டும் வீசா மறுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதற்­கான கார­ணத்தை அவர் கேட்டும் பதில் கிடைக்­காத நிலையில்,அமெ­ரிக்க தூத­ர­கத்­திடம் விளக்கம் கேட்­கு­மாறு சபா­நா­ய­க­ரிடம் முறை­யிட்­டி­ருக்­கிறார்.

ஆனாலும் இது­கு­றித்து அவர்­க­ளிடம் விசா­ரிக்­க­லாமே தவிர அவர்­களின் முடிவில் தங்­களால் தாக்கம் செலுத்த முடி­யாது, அவர்­களின் முடி­வுக்கு இணங்க வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார் பிரதி சபா­நா­யகர் அஜித் ராஜ­பக்ச.

ஏற்­க­னவே கடற்­ப­டையில் இருந்த போது, தாம் அமெ­ரிக்­கா­வுக்கு செல்ல விசா வழங்­கப்­பட்ட நிலையில் தற்­போது ஏன் அது மறுக்­கப்­பட்­டது என்ற கேள்­வியை அவர் எழுப்­பி­யி­ருந்தார்.

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவை பாரா­ளு­மன்­றத்தில் பகி­ரங்­க­மாக அச்­சு­றுத்­தி­யது சரத் வீர­சே­கர தான்.

அவர், பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி, தமிழ் நீதி­ப­தி­களை மாத்­தி­ர­மன்றி, சக தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கூட கேவ­ல­மாக விமர்­சித்­தி­ருக்­கிறார், இனக்­கு­ரோத உணர்­வுடன் அச்­சு­றுத்­தல்­களை விடுத்­தி­ருக்­கிறார்.

பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வு­கின்ற அமெ­ரிக்கா போன்ற நாடுகள், இவை­யெல்­லா­வற்­றையும் கவ­னத்தில் எடுக்­காமல் இருக்கும் என்று சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள் நம்பிக் கொண்­டி­ருந்தால் அது தான் முட்­டாள்­தனம்.

அமெ­ரிக்­காவை, மோச­மாக விமர்­சித்த சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள், ஏன் அமெ­ரிக்க விசா­வுக்­காக கெஞ்சிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் தெரி­ய­வில்லை.

எவ்­வா­றா­யினும் சரத் வீர­சே­க­ர­வுக்கு அமெ­ரிக்க வீசா மறுக்­கப்­பட்­ட­தற்கும், நீதி­பதி சர­வ­ண­ராஜா அச்­சு­றுத்­தப்­பட்டு அவர் நாட்டை விட்டு தப்­பி­யோடும் நிலை ஏற்­பட்­ட­தற்கும் தொடர்­புகள் இருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

அது­மாத்­தி­ர­மன்றி சட்­டமா அதிபர் திணைக்­க­ளமே நீதி­ப­தி­களின் தீர்ப்­பு­களில் தலை­யீடு செய்­கின்ற நிலை நீதித்துறை சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் நீதித்துறை சுயாதீனம் என்பது எந்தக் காலகட்டத்திலும் இருந்ததே இல்லை. அதனால் தான், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைக்கவில்லை.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நம்பிக்கையீனத்தினால் தான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

ஆக, இலங்கையின் பெயரை சர்வதேச அளவில் கெட்டுக் குட்டிச் சுவராக்கியதும், நீதித்துறையின நம்பகத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தியதும், சிங்கள பௌத்த பேரினவாதமும் அதன் ஆட்சி அமைப்புகளும் தான்.

இந்த நிலைமையை ரணில் விக்கிரமசிங்க போன்ற ஆட்சியாளர்களால் கூட மாற்றியமைக்க முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம், இலங்கைக்கு பல பாடங்களைக் கற்பிக்கப் போகிறது.

சிங்கள பௌத்த பேரினவாதம் இதற்காக அதிக விலைகளை கொடுக்கும் நிலை ஏற்பட்டாலும் அது ஆச்சரியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54