பேரா­யரும் மைத்­தி­ரியும்

Published By: Vishnu

01 Oct, 2023 | 07:15 PM
image

சத்­ரியன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை தேவை என்று வலி­யு­றுத்­திய பேராயர் மல்கம் கர்­தினால் ரஞ்சித், இப்­போது, வெளிப்­ப­டை­யான விசா­ரணை நடத்­தப்­பட்டால் சர்­வ­தேச விசா­ரணை தேவை­யில்லை என்று தடம் மாறத் தொடங்­கி­யி­ருக்­கிறார்.

எம்­பி­லிப்­பிட்­டிய சென்.மைக்கல்ஸ் தேவா­ல­யத்தின் பொன்­விழாக் கொண்­டாட்­டத்தில் உரை­யாற்­றிய போதே, அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

சனல் 4 ஆவ­ணப்­படம் வெளி­யி­டப்­பட்ட பின்னர், பேராயர் மல்கம் ரஞ்சித் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

உள்­நாட்டில் முறை­யான பக்­க­சார்­பற்ற விசா­ரணை சாத்­தி­ய­மில்லை என்­பதால் தான், சர்­வ­தேச விசா­ரணை தேவை என்று, அவர் அப்­போது கூறி­யி­ருந்தார்.

சர்­வ­தேச விசா­ரை­ணையை கோரு­வதை விட வேறு வழி­யில்லை என்று கூறி­யி­ருந்த பேராயர் மல்கம் கர்­தினால்  ரஞ்சித், இப்­போது ஏன், வெளிப்­ப­டை­யான விசா­ரணை நடத்­தப்­பட்டால் சர்­வ­தேச விசா­ரணை தேவை­யில்லை என்று கூற முற்­ப­டு­கிறார்? இது ஆரா­யப்­பட வேண்­டிய விடயம்.

பேராயர் இந்தக் கருத்தை வெளி­யிட முன்­னரே,  அருட்­தந்தை சிறில் காமினி பெர்­னான்டோ, நம்­ப­க­மான உள்­நாட்டு விசா­ரணை நடந்தால், சர்­வ­தேச விசா­ரணை அவ­சி­ய­மா­ன­தல்ல என்ற தொனியில் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

சனல் 4 ஆவ­ணப்­படம் வெளி­யான போது இருந்த உணர்வு மற்றும் நிலைப்­பாட்டில் இருந்து பேராயர் தரப்பு அல்­லது கத்­தோ­லிக்கத் திருச்­சபை இப்­போது விலகிச் செல்லத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

அதற்­கான காரணம் என்ன?

சனல் 4 ஆவ­ணப்­படம் வெளி­யா­கி­யதும், சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று முக்­கி­ய­மாக வலி­யு­றுத்­தி­யவர் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

அவர் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­ய­தற்கு முக்­கி­ய­மான ஒரு காரணம் இருந்­தது.

அவர் ஆட்­சியில் இருந்­த­போது தான், ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

அவர் சிங்­கப்­பூரில் தங்­கி­யி­ருந்த போது, நாட்டில் தாக்­குதல் இடம்­பெற உள்­ளதை அறிந்­தி­ருந்தார் என்றும், தாக்­கு­தல்கள் நடந்த பின்­னரும் உட­ன­டி­யாக நாடு திரும்ப தவ­றினார் என்றும்,  இரு­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்த குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலை தடுக்க தவ­றி­ய­தற்­காக,  மைத்­தி­ரி­பால சிறி­சேன, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கவும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில், சனல் 4 ஆவ­ணப்­படம், இந்த தாக்­கு­தலை ராஜபக் ஷவி­ன­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­களின் அர­சியல் சதி என்று வெளிப்­ப­டுத்­தி­யது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சாத­க­மா­னது.

அது அவரை குற்­றச்­சாட்­டு­களில் இருந்து காப்­பாற்றக் கூடி­யது. அதனால் தான் அவர், உட­ன­டி­யா­கவே சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்த வேண்டும் என்று கூறி­யி­ருந்தார்.

ஆனால், இப்­போது அவரும் தடு­மாறத் தொடங்கி விட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் குறித்த சனல் 4 குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் நடந்த விவா­தத்தில் உரை­யாற்­றிய, மைத்­தி­ரி­பால சிறி­சேன, சர்­வ­தேச தொழில்­நுட்ப உத­வி­யுடன் நம்­ப­க­மான உள்­நாட்டு விசா­ர­ணையை நடத்த வேண்டும் என்று ஐ.நா அதி­கா­ரி­யிடம் கூறி­யி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதற்­காக அவர் முன்­வைத்த காரணம், சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­தினால், புலம்­பெயர் தமி­ழர்கள், அதனை கார­ண­மாக வைத்து போர்க்­கால சம்­ப­வங்கள் குறித்து சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­து­வார்கள் என்­பது தான்.

அதா­வது, போர்க்­கால சம்­ப­வங்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை வந்து விடக் கூடாது என்­பதில், மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யாக இருக்­கிறார்.

போரின் இறுதி நாட்­களில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் இருக்­க­வில்லை. அந்தக் கட்­டத்தில் அவர் நாட்டில் இருப்­பது பாது­காப்­பில்லை என்­பதால் தான் அவர் வெளி­நாடு சென்­ற­தாக அப்­போது பர­வ­லாக ஒரு கதை நில­வி­யது.

மஹிந்த ராஜபக் ஷ வெளி­நாட்டில் தங்­கி­யி­ருந்த  நிலையில், இறுதிப் போர் தீவி­ர­மாக நடந்து கொண்­டி­ருந்த போது, மைத்­தி­ரி­பால சிறி­சேன தான், பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக பதவி வகித்­தி­ருந்தார்.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் எழுந்­த­போது, தாம் பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த போதும், தம்­மிடம் எது­பற்­றியும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை என்றும், எல்லா முடி­வு­க­ளையும் கோட்­டா­பய ராஜபக் ஷவே எடுத்தார் என்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன அப்­போது நழு­வினார்.

இது உண்­மையா பொய்யா என்­பது வேறு விடயம்.

போர்க்­கால சம்­ப­வங்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டால், அப்­போது பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட, பதி­ல­ளிக்க வேண்­டிய நிலை வரலாம்.

அதற்­காக அவர் சர்­வ­தேச விசா­ர­ணையை எதிர்க்­கி­றாரா அல்­லது, போர்க்­குற்­றச்­சாட்­டு­களில் இருந்து, இரா­ணு­வத்­தி­னரைப் பாது­காக்க வேண்டும் என்­ப­தற்­காக எதிர்க்­கி­றாரா என்று தெரி­ய­வில்லை.

எது எவ்­வா­றா­யினும் அவர் சர்­வ­தேச விசா­ர­ணையை தற்­போது விரும்­ப­வில்லை என்­பது தான் உண்மை.

பேராயர் மல்கம் ரஞ்­சித்தும், போர்க்­கால மீறல்கள் குறித்த சர்­வ­தேச விசா­ர­ணையை எதிர்த்­தவர். பின்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் குறித்து சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தினார். இப்­போது அவரும் நம்­ப­க­மான விசா­ரணை நடந்தால், சர்­வ­தேச விசா­ரணை தேவை­யில்லை என்­கிறார்.

இரண்டு பேருமே, போர்க்­கா­லத்தில் குற்­ற­மி­ழைத்­த­வர்கள் விசா­ரிக்­கப்­ப­டு­வதை, தண்­டிக்­கப்­ ப­டு­வதை விரும்­ப­வில்லை. அவ்­வா­றான சர்­வ­தேச விசா­ர­ணைகள் நடப்­பதை விரும்­ப­வில்லை.

சர்­வ­தேச விசா­ர­ணை­களால் நாட்டைப் பாது­காத்த படை­யினர் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்று அச்­சு­கி­றார்கள்.

அவ்­வா­றாயின், உள்­ளக விசா­ரணை நம்­ப­க­மான முறையில், நீதி­யான முறையில், வெளிப்­ப­டை­யான முறையில் இடம்­பெற வேண்டும்.

போர்க்­கால சம்­ப­வங்கள் குறித்து, நம்­ப­க­மான, வெளிப்­ப­டை­யான விசா­ர­ணை­க­ளு­க்கு உள்­நாட்டில் வாய்ப்பே இல்லை என்­பது, இந்த 14 ஆண்­டு­களில் நிரூ­ப­ண­மாகி விட்­டது.

இந்தக் கால­கட்­டத்தில் பல்­வேறு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. பல்­வேறு அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனாலும் நம்­ப­க­மான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­கிய எவரும் முறைப்­படி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டவோ, தண்­டிக்­கப்­ப­டவோ இல்லை.

நம்­ப­க­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் கூட, இது­வரை ஆட்­சியில் இருந்த எவரும், அக்­கறை செலுத்­த­வில்லை. அதனால், இனி உள்­ளக விசா­ர­ணையில் நம்­பிக்கை வைக்க முடி­யாத நிலை உரு­வாகி விட்­டது.

இலங்­கையின் நீதித்­துறைக் கட்­ட­மைப்­பு­களின் மீது காணப்­படும் அர­சியல் செல்­வாக்கும், நம்­ப­க­மான விசா­ர­ணைகள் சாத்­தி­ய­மில்லை என்­பதை உணர்த்­தி­யி­ருக்­கி­றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக, சனல் 4 ஆவ­ணப்­ப­டத்தில், குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருக்கும் பிள்­ளையான் எனப்­படும், இரா­ஜாங்க அமைச்சர் சந்­தி­ர­காந்தன், விளக்­க­ம­றி­யலில் இருந்து விடு­விக்­கப்­பட்­ட­தற்குப் பின்னால் நிகழ்ந்த பல விட­யங்­களை அசாத் மௌலானா வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அதுவும் நீதித்­து­றையின் மீதான நம்­பிக்­கையை பெரிதும் பாதிக்கச் செய்­தி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில், வெளிப்­ப­டை­யான விசா­ர­ணைகள் இடம்­பெற்றால், சர்­வ­தேச விசா­ரணை தேவை­யில்லை என்று பேரா­யரும், சர்­வ­தேச தொழில்­நுட்ப உதவி இருந்தால் போதும் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருப்பது வேடிக்கை தான்.

அவ்வாறான சூழலுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது தான் சந்தேகம்.

அதேவேளை, எம்பிலிப்பிட்டிய தேவாலயத்தில் பேராயர் உரையாற்றிய அதே நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஓமல்பே சோபித தேரர், குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறைமை நாட்டில் இல்லாவிட்டால் சர்வதேச விசாரணை அவசியம் என்று கூறியிருக்கிறார்.

குற்றவாளிகள் தப்பிக்கும் முறைதான் இலங்கையில் இருக்கிறது. குற்றவாளிகளை தண்டனையில் இருந்து தப்பிக்கும் நடைமுறை தான் இங்கு உள்ளது.

இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை தவிர்க்க முடியாதது என்பதே உண்மை. சர்வதேச விசாரணை அவசியம் என்பதையே ஓமல்பே சோபித தேரர் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

ஆனால் பேராயரும், மைத்திரியும், யாரைக் காப்பாற்றுவதற்காக தங்களின் நிலைப்பாட்டை மாற்ற முனைகின்றனர்.?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடியின் விஜயத்தைத் தொடர்ந்து அநுராதபுரத்துக்கு கிடைக்கவுள்ள...

2025-04-17 18:34:46
news-image

எல்லையின் பேய்கள்: பிள்ளையானின் வன்முறை மரபையும்...

2025-04-17 12:21:24
news-image

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு...

2025-04-17 04:01:32
news-image

தேசிய மற்றும் மனித பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான...

2025-04-16 21:55:19
news-image

டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக...

2025-04-16 17:26:09
news-image

மூச்சுவிட வாய்ப்பளித்த ட்ரம்ப்; முடிவுக்கு வரும்...

2025-04-16 02:02:55
news-image

பொருளாதார வளர்ச்சிக்காக ஜ.எஸ்.பி . பிளஸ்...

2025-04-15 22:07:17
news-image

நக்சிவான்: நிலத் தொடர்பற்ற சுயாட்சிக் குடியரசு

2025-04-12 16:57:40
news-image

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...

2025-04-12 16:58:30
news-image

இந்தியாவின் காலடியில் விழுந்துள்ளதா இலங்கை?

2025-04-12 17:05:16
news-image

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

2025-04-12 16:54:29
news-image

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

2025-04-12 16:59:30