ஆளும் அரசியல் கூட்டணியில் சு.க.வுக்கு இடம் வழங்கத் திட்டம் – வரவு செலவுத் திட்ட ஆதரவுக்கு அமைச்சரவையில் மாற்றம்

Published By: Vishnu

01 Oct, 2023 | 07:19 PM
image

நமது அர­சியல் நிருபர்

2024ஆம் ஆண்டு தேர்­த­லுக்­கான வருடம் என்­பதை உணர்ந்து தேசிய அர­சி­யலில் அனைத்து மட்­டத்­தி­னரும் மிகவும் தீவி­ர­மாக செயல்­பட தொடங்­கி­யுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது.

எதிர்­வரும் நவம்பர் மாதம் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள அடுத்த ஆண்­டுக்­கான வரவு - செலவுத் திட்­டத்­திற்கு முன்னர் அமைச்­ச­ர­வையில் மாற்­றத்தை கோரும் ஆளும் கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன, கோரிக்கை நிறை­வேறாவிடின் வரவு - செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ரவு கிடை­யாது என்ற தக­வ­லையும் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்­ளது.

மறு­புறம் புதிய அர­சியல் கூட்­ட­ணியை நோக்கி  நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள் பல ஆர்வம் செலுத்­தி­யுள்­ளன. இவ்­வா­ரத்தில் முக்­கிய அறி­விப்­புகள் புதிய அர­சியல் கூட்­ட­ணி­யி­லி­ருந்து வெளி­யாக உள்­ளன. இவ்­வா­றா­ன­தொரு அர­சியல் சூழலில் முக்­கிய நாடுகள் பல கொழும்பின் நகர்­வு­களை மிகவும் கூர்­மை­யாக அவ­தா­னித்து வரு­கின்­ற­மை­யையும் கவ­னிக்­க முடிகிறது.

அதி­கா­ரி­களை அழைத்த ஜனா­தி­பதி

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்­சபை கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை நாடு திரும்­பினார். பொது­வாக ஜனா­தி­பதி ஒருவர் வெளி­நாடு  சென்று நாடு திரும்­பு­கையில் அவரை வர­வேற்­ப­தற்­காக அமைச்­சர்கள் விமான நிலையம் செல்­வது இலங்­கையில் வழக்­க­மா­கி­யுள்­ளது. ஆனால் ஜனா­தி­பதி ரணிலை வர­வேற்க அவ்­வாறு எவரும் விமான நிலை­யத்­திற்கு சென்­றி­ருக்­க­வில்லை.

நாடு திரும்­பிய ஜனா­தி­பதி, அன்­றைய தினம் சிறிது நேர ஓய்­வுக்கு பின்னர் முற்­பகல் 11 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­திற்கு சென்று சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின் நிலை­மைகள் குறித்த முன்­னேற்­றங்­களை கேட்­ட­றியும் நோக்கில் மத்­திய வங்கி, நிதி அமைச்சு அதி­கா­ரிகள் மற்றும் அமைச்­சர்­களை அழைத்­தி­ருந்தார்.

சர்­வ­தேச நாணய நிதிய பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடையில் முக்­கிய பேச்­சு­வார்த்­தைகள் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­மை­யினால் இரு­வார கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களின் முன்­னேற்­றங்­களை அறி­வது முக்­கியம் என்­பதை உணர்ந்தும், இறுதி பேச்­சு­வார்த்­தைக்கு செல்­வ­தற்கு முன்னர் தன்னை தயார்ப்­ப­டுத்தும் வகை­யிலும் ஜனா­தி­பதி அனைத்து அதி­கா­ரி­க­ளையும் ஞாயிற்­றுக்­கி­ழமை தனது அலு­வ­ல­கத்­திற்கு அழைத்­தி­ருந்தார்.

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் அதி­கா­ரிகள் முன்­வைத்த யோச­னைகள் குறித்து ஜனா­தி­ப­திக்கு இதன் போது அதி­கா­ரிகள் விளக்­க­ம­ளித்­தனர். 'குறிப்­பாக அர­சாங்­கத்தின் வரு­மானம் போது­மா­ன­தாக இல்லை. எனவே மேலும் வரி விதிப்­புக்­கான யோச­னை­க­ளையே சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் அதி­கா­ரிகள் வலி­யு­றுத்­து­கின்­றனர்' என்­பதை அதி­கா­ரிகள் ஜனா­தி­ப­திக்கு சுட்­டிக்­காட்­ட­டினர்.

'மேலும் மக்கள் மீது சுமை­களை சுமத்த இய­லாது. ஏற்­க­னவே பெரும் பொரு­ளா­தார சுமை­களை மக்கள் சுமக்­கின்­றனர். அரசின் வரு­மா­ னம் குறை­வ­தற்கு பல்­வேறு கார­ணங்கள் உள்­ளன. அவை குறித்து நாணய நிதி­யத்­திற்கு விளக்­க­ம­ளிக்க உள்ளேன். எது­வாக இருந்­தாலும் இனியும் வரி­களை அதி­க­ரிக்க ஒரு போதும் அனு­ம­திக்க மாட்டேன்' என்று ஜனா­தி­பதி இதன் போது குறிப்­பிட்டார்.

இவ்­வாறு சில மணி நேரம் நீண்ட கலந்­து­ரை­யா­டலை நிறைவு செய்த ஜனா­தி­பதி மறுநாள் சர்­வ­தேச நாணய நிதியத்தின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு தயா­ரானார்.

அமைச்­ச­ரவை கூட்டம்

கடந்த வார அமைச்­ச­ரவை கூட்­டத்தில் 2024ஆம் ஆண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்டமூலம்  சமர்­ப்பிக்­கப்­பட்­டது. அடுத்த ஆண்­டுக்­கான அர­சாங்­கத்தின் உத்­தேச செல­வினங்கள் குறித்து முழு­மை­யான உள்­ள­டக்கம் நிதி ஒதுக்­கீட்டு மசோ­தாவில் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்த நிலையில், பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள திகதி குறித்தும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

அதே­போன்று திங்­கட்­கி­ழமை சர்­வ­தேச நாணய நிதிய பிர­தி­நி­தி­க­ளுடன் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் முன்­னேற்­றங்கள் குறித்து ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வைக்கு தெளி­வு­ப­டுத்­தினார். நாட்டை அபி­வி­ருத்தி இலக்கை நோக்கி கொண்டு செல்­வ­தற்கு தேவை­யான ஒத்­து­ழைப்­புக்­களும் அனைத்து தரப்­பு­க­ளி­ட­மி­ருந்தும் கிடைக்க வேண்டும் என்­பதை இதன் போது சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி, மக்கள் வாழ்வில் செழிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் இனி­வரும் நாட்­களில் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து அமைச்­ச­ரவை தீர்­மா­னங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டிய பின்னர் ஜனா­தி­பதி தனது அலு­வ­ல­கத்­திற்கு சென்றார்.

அமைச்­சர்­க­ளுக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி

அமைச்­ச­ரவை கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர் அங்­கி­ருந்து ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­திற்கு சென்ற அமைச்­சர்கள், ஐ.நா. பொதுச் சபை கூட்டம் மற்றும் ஜி77 மாநாடு குறித்த தக­வல்­களை கேட்­ட­றிய ஆர்வம் செலுத்­தினர்.

'சமுத்­திர நாடு­களின் மாநாடு மற்றும் கியூ­பாவில் சீனா குறித்து ஜனா­தி­ப­தியின் தெளி­வு­ப­டுத்­தலை பன்­னாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களும் வர­வேற்­றி­ருந்­தனர். குறிப்­பாக அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடுகள் வர­வேற்­றி­ருந்­த­தாக வெளி­வி­வ­கார செய­லாளர் குறிப்­பிட்­ட­தாக' ஜனா­தி­ப­தியின் கால­நிலை மாற்றம் தொடர்­பான ஆலோ­சகர் ருவான் விஜே­வர்­தன அங்­கி­ருந்த அனை­வ­ரையும் நோக்கி குறிப்­பிட்டார்.

'சீனா என்­பது உலகின் பல­மிக்­க­தொரு நாடு. இலங்­கைக்கு கடன் வழங்­கிய நாடு­களில் பிர­தா­ன­மான நாடும் சீனா தான். எனவே சீனாவை விட்டு விலகி எம்மால் செல்ல இய­லாது' என்று இதன் போது அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க கூறினார்.

'ஆம். அது உண்மை தான். மூன்று பிர­தான கூட்­டங்­களில் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடுகள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளையும் சவால்­க­ளையும் ஜனா­தி­பதி எடுத்­து­ரைத்­தி­ருந்தார். மறு­புறம் இலங்­கைக்கு மாத்­தி­ரமே நான் சார்­பு­டை­யவன், வேறு எந்­த­வொரு நாட்­டிற்கும் இல்லை என்று ஜனா­தி­பதி கூறி­யமை மக்கள் மத்­தியில் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது' என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிரே­ம்நாத் சீ தொல­வத்த கூறு­கையில் அனை­வரும் தலை­ய­சைத்து அதனை அமோ­தித்­தனர்.

'ஏன், இலங்கை இவ்வளவு விரை­வாக கடனை திருப்பி தந்­து­விடும் என்று தாம் எதிர்­பார்க்­க­வில்லை என்ற விட­யத்தை பங்­க­ளாதேஷ் பிர­தமர் தெரி­வித்­தி­ருந்தார். பொரு­ளா­தாரம் உட்­பட அனைத்து வகை­யிலும் வீழ்ச்­சி­கண்டு தோல்­வி­ய­டைந்­தி­ருந்த இலங்கை இவ்வளவு விரைவில் எழுச்சி பெறும் என்று உலகில் எந்­த­வொரு நாடும் நம்­பி­யி­ருக்­க­வில்லை. ஆனால் நாம் வெற்றி பெற்­றுள்ளோம்' என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வஜிர அபே­வர்­தன இங்கு குறிப்­பிட்டார்.

'உமா ஓயா திட்­டத்தை திறந்து வைக்க ஈரான் ஜனா­தி­பதி இலங்­கைக்கு வரு­வது உண்­மையா?' என்று இதன்­போது ஜனா­தி­ப­தியை நோக்கி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மதுர வினா­வினார்.

'ஆம்...ஈரான் ஜனா­தி­பதி இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். கூடிய விரைவில் நாட்டை அபி­வி­ருத்­தியை நோக்கி கொண்டு செல்­வதே எனது நோக்­க­மா­கவுள்­ளது. பல உலக நாடு­களின் தலை­வர்கள் அந்த நாடு­க­ளுக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கின்­றனர். குறிப்­பிட்ட சில­வற்­றுக்கு நான் செல்­வ­தற்கும்  ஏனை­ய­வற்­றுக்கு பிர­தி­நி­தி­களை அனுப்­பவும் திட்­ட­மிட்­டுள்­ள­தாக' ஜனா­தி­பதி இதன் போது குறிப்­பிட்டார்.

புதிய அர­சியல் கூட்­டணி

ஆளும் கட்­சிக்குள் உரு­வெ­டுத்­துள்ள மாற்று அர­சியல் புதிய கூட்­டணி மீது நம்­பிக்கை கொண்­டுள்ள பல அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­வி­களின் அமைப்­புக்கள் மற்றும் தொழிற்­சங்கள் என பல தரப்­புகள் ராஜ­கி­ரிய அலு­வ­ல­கத்­துடன் கலந்­து­ரை­யா­டு­வதை கடந்த வாரத்­திலும் அவ­தா­னிக்க முடிந்­தது.

இத­ன­டிப்­ப­டையில் கடந்த வாரத்தில் மாத்­திரம் 20 அமைப்­புகள்  புதிய கூட்­ட­ணியில் இணை­வது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் லான்­சாவை சந்­தித்து கலந்­துரை­யா­டி­யுள்­ளன. இவற்றுள் 10 அமைப்­புகள் ஏற்­க­னவே ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்­த­வை­யாகும்.

இவற்றுள் பல்­க­லைக்­க­ழக கல்­வி­சாரா சங்கம், விவ­சாய ஆய்வு உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் சங்கம்,  தொழில் பயிற்சி அதி­காரச் சபை ஊழியர் சங்கம், தபால் ஊழியர் சங்கம், மகா­வலி ஊழியர் சங்கம், அரச அச்­சக ஊழியர் சங்கம் மற்றும் கலா­சார கலைகள் சங்கம் உட்­பட பல சங்­கங்­களும் அமைப்­பு­களும் புதிய கூட்­ட­ணிக்­கான ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஊடக சந்­திப்­புக்கு தயா­ராகும் முக்­கி­யஸ்­தர்கள்

மேலும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முக்­கிய தொழிற்­சங்க இணைப்­பா­ளர்கள் இருவர் புதிய கூட்­ட­ணியில் விரைவில் இணைய உள்­ள­தாக ராஜ­கி­ரிய அலு­வ­லக தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன. இந்த இரு முக்­கிய இணைப்­பா­ளர்­களும் கடந்­த­வா­ரத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் லான்சா, சிறி­பால அம­ர­சிங்க, சுகீஷ்­வர பண்­டார ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

எவ்­வா­றா­யினும் இரு­வா­ரத்­திற்குள் குறித்த ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முக்­கிய தொழிற்­சங்க  இணைப்­பா­ளர்கள் இரு­வரும் ஊடக சந்­திப்­பொன்றை நடத்தி தமது ஆத­ரவை புதிய கூட்­ட­ணிக்கு வழங்­கு­வதை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்க திட்­ட­மிட்­டுள்­ளனர்.

சு.க முக்­கி­யஸ்­தரின் கொழும்பு இல்­லத்தில் சந்­திப்பு

மறு­புறம் புதிய அர­சியல் கூட்­ட­ணி­யினர் சில பிர­தான அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அவ்­வா­றா­ன­தொரு சந்­திப்பு கொழும்பு 7இல் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒரு­வரின் இல்­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சந்­திப்­பில் அந்த கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் முக்­கிய உறுப்­பி­னர்கள் 30 பேர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். மிகவும் இர­க­சி­ய­மாக இடம்­பெற்ற இந்த சந்­திப்பின் போது எதிர்­வரும் தேர்­தல்­களில் புதிய கூட்­ட­ணி­யுடன் இணைந்து செயல்­ப­டு­வது குறித்து பேசப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முக்­கிய இரு இளைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்தக் கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­பற்­றி­யுள்­ளனர். இங்கு பேசப்­பட்ட விட­யங்கள் மற்றும் பங்­குப்­பற்­றி­ய­வர்கள் குறித்த தக­வல்கள் முழு அளவில் இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வருகிறது.

ஆளும் கூட்­ட­ணியில் சு.க.வுக்கும் இடம்

தேசிய அர­சியல் பரப்பில், தவ­றான காய் நகர்த்­தல்­க­ளினால், இன்று திக்கு  தெரி­யாமல், நிற்கும் நிலைக்கு தயா­சிறி ஜய­சே­கர விழுந்­துள்­ள­தாக தெரி­கி­றது.   ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அவரை வெளி­யேற்­றி­யதும், சஜித்­திடம் அடைக்­கலம் புக முடி­யு­மென நினைத்­தாலும், அவ­ருக்கு அங்கேயும் வர­வேற்பு கிடைக்கவில்லை.

சஜித் விரும்­பி­னாலும் அவ­ரது குரு­நாகல் பகுதி உறுப்பினர்கள்  விரும்­பு­வ­தாக தெரி­ய­வில்லை. ஜே.வி.பி.யும் இடம் கொடுக்­காது. ரணில் பக்கம் இவர் செல்ல, அங்கே ஏற்­க­னவே சென்­றுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி உறுப்பினர்களான நிமல் ஸ்ரீபால, அம­ர­வீர, துமிந்த திசா­நா­யக்க ஆகியோர் பழைய பகை கார­ண­மாக தடை போடு­கி­றார்கள். மேலும்  அகி­ல­விராஜ் காரி­ய­வா­சமும், தயா­சிறி   வரு­வதை விரும்­ப­வில்லை. ரணில் அமைக்­கப்­போகும் மகா கூட்­ட­ணியில்   பெயர் சொல்லும் கட்­சி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இடம் பெறப்போ­வது இப்­போது ஏறக்­கு­றைய உறுதி.

மைத்­தி­ரி­பா­ல­வுக்கும் வேறு வழி இல்லை. ரணி­லுக்கு, மைத்­தி­ரி­பா­லவை பிடிக்­கா­விட்­டா­லும்­கூட ஒரு கட்சி கூட்­டணி என்­ப­தற்­காக அவரை தற்­ச­மயம் சகித்­துக்­கொள்ள தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் தெரி­கி­றது. தயா­சி­றிக்கு கடை­சியில் சஜித் காலில் விழு­வதைத் தவிர வேறு வழி இல்லை.

தவ­றான காய் நகர்த்­தல்­க­ளினால், திக்கு தெரி­யாத   நிலைக்கு   தள்­ளப்­படும் இன்னும் இரு­வர்தான், சம்­பிக்க, பொன்­சேகா ஆகியோர். அவர்­க­ளது நெருங்­கிய ஆத­ர­வா­ளர்கள் அதை உணர்ந்­துள்­ள­தாக தெரி­கி­றது.

தேசிய பரப்பில், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரின் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­க­ளில்தான் இவர்கள் இணைய முடியும். இவர்கள் நினைத்த மாதிரி இவர்­களால் இன்­னொரு அணியை அமைத்து ஒன்றும் சாதிக்க முடி­யாது என இவர்கள் இப்­போது உணர்ந்து வரு­கின்­றனர்.

அமைச்­ச­ரவை மாற்றம்

நிலைமை இவ்­வா­றி­ருக்க புதிய கூட்­ட­ணியின் செயல்­பா­டு­களை முழு அளவில் நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம்  பசில் ராஜபக் ஷ

பல­முறை கோரிக்கை விடுத்­தி­ருந்தார். ஆனால், இன்­ற­ளவில் ஜனா­தி­பதி புதிய கூட்­டணி விட­யத்தில் தலை­யி­ட­வில்லை. எனவே தான் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஆத­ரவை ஜனா­தி­ப­திக்கு அடுத்து வரும் தேர்­தல்­களில் வழங்­கா­ம­லி­ருக்க பஷில்  தரப்பு தீர்­மா­னித்­தது.

எனினும் இந்த தீர்­மானம் இறு­திப்­ப­டுத்­தப்­படவில்லை. இலங்கை அர­சி­யலை பொறுத்­த­வ­ரையில் இறுதி நேரத்தில் எது­வென்­றாலும் நடக்­கலாம். இன்று பகை பேசு­ப­வர்கள் தேர்தல் வரு­கையில் கூட்­ட­ணி­ய­மைத்து ஒன்­றாக போட்­டி­யி­டலாம். எவ்­வா­றா­யினும் தற்­போது அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு குறித்து பசில்   தரப்பு ஜனா­தி­ப­திக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் அடுத்த மாதம் இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­ப­தியின் சீன விஜ­யத்தின் பின்னர் அமைச்­ச­ர­வையில் மாற்றம் ஏற்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஆனால் 2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்­டத்­திற்கு முன்னர் அமைச்­ச­ர­வையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன உறுப்­பி­னர்­க­ளுக்கு அமைச்சு பத­வி­களை வழங்க வேண்டும் என்­பது பசில் ராஜ­ப­க் ஷவின் கோரிக்­கை­யாக உள்­ளது.

அதா­வது  பசில் ராஜ­ப­க் ஷ ஜனா­தி­ப­திக்கு அனுப்­பிய பெயர் பட்­டி­யலில் உள்ள ஜொன்ஸ்டன் பெர்­னாண்டோ, எஸ்.எம்.சந்­தி­ர­சேன, சீ.பி. ரத்­நா­யக்க, எஸ்.பி. திசா­நா­யக்க மற்றும் ரோஹித அபே­கு­ண­வர்­தன ஆகி­யோ­ருக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சு பத­விகள் வழங்­கப்­ப­டலாம் என்று எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.

2024 வரவு – செலவு திட்­டத்­திற்கு ஆத­ரவு

இவ்­வாறு அமைச்சு பத­விகள் வழங்­கினால் மாத்­தி­ரமே 2024 ஆம் ஆண்­டுக்­கான வரவு –- செலவுத் திட்ட வாக்­கெ­டுப்பில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முழு­மை­யான ஆத­ரவு கிடைக்கும் என்ற தகவல் ஜனா­தி­பதி ரணிலின் காதில் போடப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் யோச­னைகள் உத்­தேச வரவு – செலவுத்  திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்ற விட­யமும் இங்கு காணப்­ப­டு­கின்­றது. எனவே அடுத்த வருடம் தேர்­த­லுக்­கான வருடம் என்­பது அனைத்து அர­சியல் மட்­டங்­க­ளிலும் பேசப்­படும் பொரு­ளா­கி­யுள்­ளது. அதனை தமக்கு சாத­க­மாக்­கிக்­கொள்ள பசில் ராஜ­ப­க் ஷ தரப்பு மும்­மு­ர­மாக செயல்­ப­டு­கின்­றது.

சீன கப்பல்

தேசிய அர­சியல் பிரச்­சி­னைகள் நாளுக்கு நாள் சூடுப்­பி­டிக்­கின்ற நிலையில், சீனாவின் அதி நவீன ஷியான் 6 என்ற ஆய்வுக் கப்பல் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டதை தொடர்ந்து இலங்கை பல்­வேறு இரா­ஜ­தந்­திர நெருக்­க­டி­க­ளுக்­களை எதிர்­கொண்­டது. சீனாவின் தேசிய தினம் இன்று  இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால், அதனை முன்­னி­றுத்தி ஷியான் 6 ஆய்வுக் கப்பல் கொழும்பில் நங்­கூ­ர­மி­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் இந்­தியா, அமெ­ரிக்கா மற்றும் ஜப்பான் உள்­ளிட்ட பல நாடுகள் சீன கப்­பலின் இலங்கை விஜ­யத்தை எதிர்த்து இரா­ஜ­தந்­திர ரீதியில் இலங்­கைக்கு அழுத்­தங்­களை கொடுத்­தன. இத­ன­டிப்­ப­டையில் கப்­பலின் வரு­கையை எதிர்­வரும் நவம்பர் மாதம் வரை தாம­தப்­ப­டுத்­து­மாறு சீனா­வி­டம கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஜன­வ­ரியில் மற்­று­மொரு கப்பல்

ஷியான் 6 கப்பல் வருகை தொடர்­பி­லான சர்ச்­சைகள் இன்னும் ஓயாத நிலையில் மற்­று­மொரு ஷியாங் ஹோங் 6 என்ற ஆய்வு கப்­பலை சீனா எதிர்­வரும் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதனால் மேலும் இரா­ஜ­தந்­திர நெருக்­க­டி­க­ளுக்குள் இலங்கை சிக்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சந்­தி­ரி­கா– மைத்­தி­ரி இடையே உரு­வாகும் புதிய உறவு

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவின் 64ஆவது நினைவு தினம் ஹொர­கொல்­லவில் உள்ள அவ­ரது சமா­தியில் கடந்த 26ஆம் திகதி முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இந்த நிகழ்­வுகள், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் தலை­மையில் நடை­பெற்­ற­தோடு, அவ­ரது சகோ­த­ரி­யான சுனேத்­திரா பண்­டா­ர­நா­யக்­கவும் பங்­கேற்­றி­ருந்தார்.

இவர்­க­ளுடன், பிர­தமர் தினேஷ் குண­வர்த்­தன, அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான குமா­ர­வெல்­கம, ஏ.எச்.எம்.பௌசி உள்­ளிட்­ட­வர்கள் பங்­கேற்­றி­ருந்­தார்கள்.

இந்­நி­கழ்வில் முக்­கி­ய­மாக, முன்னாள் ஜனா­தி­ப­தியும், சுதந்­தி­ரக்­கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த விடயம் தான் பேசு பொரு­ளா­கி­யுள்­ளது.

இவர், நினை­வு­தின நிகழ்­விற்கு திடீ­ரென வருகை தந்­தமை அனை­வ­ருக்கும் ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கவும், அவர் சந்­தி­ரிகா அம்­மை­யா­ருக்கு வணக்கம் தெரி­வித்து, தேரர்­களை வணங்­கி­விட்டு, சந்­தி­ரிகா அமர்ந்­தி­ருந்த ஆச­னத்­துக்கு அருகில் பிர­த­ம­ருக்­கான ஆசனம் இருக்­கவும் அதற்கு அரு­கி­லி­ருந்த ஆச­னத்தில் அமர்ந்து கொண்டார்.

பிர­தமர் வரு­கை தர சற்று தாம­த­மா­கவும், மைத்­தி­ரி­பால சந்­தி­ரி­கா­வுடன் உரை­யாட ஆரம்­பித்தார். முதலில் வானிலை சாத­க­மாக அமை­யுமா என்று சந்­தி­ரி­காவைப் பார்த்து மைத்­திரி கேட்டார். அப்­போது, ஒரு­போதும் எமது தந்­தையின் நினைவு நிகழ்­வின்­போது மழை பெய்­யாது என்று பதி­ல­ளித்த சந்­தி­ரிகா, இன்றும் மழை பெய்­யாது என்றார். அப்­போது மைத்­திரி சிறு அளவில் மழை பெய்­யுமோ தெரி­யாது என்றார். அதற்கு மழை பெய்­யாது என்று சந்­தி­ரிகா உரத்த குரலில் பதி­ல­ளிக்­கவும் மைத்­திரி புன்­ன­கை­யுடன் நிறுத்­திக்­கொண்டார்.

உண்­மையில், சந்­தி­ரிகா தரப்பில் மீண்டும் சுதந்­திரக் கட்­சியை தம்­வ­சப்­ப­டுத்­து­வ­தற்­கான முனைப்­புக்கள் சில முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதில் நேர­டி­யாக தலை­மையை பெற முடி­யாது விட்­டாலும், தயா­சி­றியை தலைமைப் பத­விக்கு கொண்டு வந்து அதன் பின்னர் குமார வெல்­க­மவின் நவ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் கூட்டை ஏற்­ப­டுத்தி கூட்டின் தலை­மையைப் பெறு­வதன் ஊடாக ஆதிக்கம் செலுத்­து­வதன் ஊடாக மீண்டும் அர­சி­யலில் அடுத்த இன்­னிங்ஸை ஆரம்­பிப்­பது தான் சந்­தி­ரிக்­காவின் திட்­டமாம்.

இதனை, அடிப்­ப­டை­யாக வைத்து தான் சுதந்­திரக் கட்­சியின் 72ஆவது ஆண்டு நிகழ்வில் சந்­தி­ரி­காவை அழைப்பதற்கும் அதனை குருநாகலில் பாரிய அளவில் முன்னெடுப்ப தற்கும் திட்டமிட்டிருந்தார் தயாசிறி.

இதனை எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட மைத்திரி, அதிரடியாக தயாசிறியை நீக்கிவிட்டு, இப்போது சந்திரிகாவுடன் கைகோர்ப்பதற்கு தீர்மானித்துள்ளாராம். இதன் ஆரம்பமாகவே தற்போது பண்டாரநாயக்க வின் நினை வேந்தலில் பங்கேற்று சந்திரிகா வுடன் சுமூகமான நிலைமையை ஏற்படுத்த முனைந்திருக்கின்றாராம்.

2015இல் மைத்திரியை ஜனாதிபதி ஆக்கிய தில் சந்திரிகாவின் வகிபாகம் அளப்பரியது. பின்னர் ராஜ­ப­க் ஷக்களுக்கு மைத்திரி அதிகா ரங்களை வழங்கியதால் மைத்திரியின் மீது கடுமையான கோபமடைந்திருந்தார் சந்திரிகா.

ஆனால், இவையெல்லாவற்றையும் அவர் தற்போது ஒதுக்கி வைத்துவிட்டு மைத்திரியை அரவணைக்க தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மைத்திரியும் தன்னுடைய தலை(மை)யை தக்க வைத்துக் கொள்வதற்கு சந்திரிகாவுடன் கைகோர்க்கும் தீர்மானத்தினை எடுத்திருக்கிறாராம்.

சபாநாயகரை நாடப்போகும் ரெலோ, புளொட்

சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவும் தற்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கோரிக்கையொன்றை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. குறிப்பாக, தமிழரசுக் கட்சியினால் தொடர்ச்சியாக புளொட், ரெலோ தரப்பினருக்கு உரையாற்றுவதற்கு உரிய நேர ஒதுக்கீடு வழங்கப்படாத நிலைமை கள் நீடிப்பதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் தான், தற்போது நேர ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விடயங்களை கவனித்து வருகின்றார். எனினும், ரெலோ, புளொட்டிடம் நான்கு உறுப்பினர்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்களுக்கான நேர ஒதுக்கீடுகள் போதாமையாக உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தாம் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாகி விட்டதாகவும் தமக்கான நேர ஒதுக்கீட்டை பிறிதாக ஒதுக்கீடு செய்து தருமாறும் கோரிக்கை விடுப்பதற்கு இப்போது ரெலோ, புளொட் முனைகின்றன.

Photo caption:

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவின் 64ஆவது நினைவு தினம் ஹொர­கொல்­லவில் உள்ள அவ­ரது சமா­தியில் கடந்த 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன உட்பட்டோர் கலந்து கொண்டிருந்த போது....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை,...

2025-01-15 18:48:30
news-image

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவளித்து ஒற்றுமையை வெளிப்படுத்திய...

2025-01-15 16:35:02
news-image

அடர்ந்த காட்டுக்குள் இப்படி ஒரு அவலமா? ...

2025-01-15 21:24:26
news-image

மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் போராட்டமும் பட்டிப்...

2025-01-15 15:58:47
news-image

'கேணல்' கிட்டுவின் செயலினால் விஜய குமாரதுங்க...

2025-01-15 12:43:42
news-image

புதிய அரசாங்கத்தின் நெறிமுறைகளுடன் அரச பொறிமுறைகள்...

2025-01-15 10:08:35
news-image

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் -...

2025-01-12 17:38:39
news-image

உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில்...

2025-01-12 16:35:46
news-image

தாய்வானை சீன மாகாணம் என்பதால் அமெரிக்கா...

2025-01-12 16:26:02
news-image

ஐ.தே.க.வுடன் இணைவதற்கு மனம் இன்றி சம்மதித்த...

2025-01-12 16:19:41
news-image

திணறடிக்கும் பொருளாதாரம்

2025-01-12 15:41:46
news-image

அதிகாரத்தின் வீழ்ச்சி - 2024 இல்...

2025-01-12 15:20:56