கனடா மீதான குற்றச்சாட்டும் ; இலங்கையின் யதார்த்த  நிலையும்

Published By: Vishnu

01 Oct, 2023 | 11:52 AM
image

கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோவை குற்­றம்­சாட்­டி­யுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, இலங்­கையில் இனப்­ப­டு­கொலை என்ற ஒன்று இடம்­பெ­ற­வில்லை என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

காலிஸ்தான் பிராந்­திய சுதந்­தி­ரத்­துக்­காக  செயற்­பட்டு வந்த ஹர்தீப் சிங் படு­கொலை தொடர்பில்  கன­டா­வுக்கும்  இந்­தி­யா­வுக்­கு­மி­டையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலைமை தொடர்பில் இந்­திய ஊட­க­மான  ஏ.என்.ஐ. செய்தி சேவைக்கு   கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி இவ்­வாறு  கூறி­யி­ருக்­கின்றார்.

தீவி­ர­வா­தி­க­ளுக்­கான பாது­காப்பு நிறைந்த சொர்க்­க­ பூமியாக  கனடா  மாறி­யி­ருக்­கின்­றது.  இந்­தியா தொடர்பில்  கனே­டிய பிர­தமர்  ஜஸ்டின் ட்ரூடோ  வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்து   எனக்கு ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­க­வில்லை.  அவர் எவ்­வித  ஆதா­ரங்­க­ளு­மற்ற சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை   வெளி­யிடும் வழக்­கத்தை கொண்­டி­ருக்­கின்றார்.  இலங்­கையில் இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­றது என்ற   மிக மோச­மான  பொய்­யைக்­கூ­றி­யதன் மூலம்  இத­னை­யொத்த   விட­யத்­தையே  கனே­டியப் பிர­தமர்  இலங்­கைக்கும் செய்­தி­ருந்தார். எமது  நாட்டில் இன­ப்ப­டு­கொலை இடம்­பெ­ற­வில்லை என்­பது அனை­வ­ருக்கும்  தெரிந்த விட­ய­மாகும் என்றும்  வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி   இதன்­போது  சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

கன­டா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் ஏற்­பட்­டுள்ள  முறு­கல் ­நி­லைக்குள்  தலை­யிட்டு  கனே­டியப் பிர­த­மரின் செயற்­பாட்டை கண்­டிக்கும் வகையில்   வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி  கருத்து தெரி­வித்­தது மட்­டு­மல்­லாமல் இலங்கை விட­யத்­திலும்   கனே­டிய பிர­தமர்   பொய்­யு­ரைத்­துள்­ள­தா­கவும்  அவர்  விசனம்  வெளி­யிட்­டுள்ளார்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இறுதி யுத்­தத்­தின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.இவ்­வா­றான  செயற்­பாடு இனப்­ப­டு­கொலை என்றே  வர்­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது.  இனப்­ப­டு­கொ­லைக்­கான  தீர்­மானம்  கனே­டிய பாரா­ளு­மன்­றத்தில்  நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.  இந்த வருடம்  மே மாதம் 18ஆம் திகதி  முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் தினம்   அனுஷ்­டிக்­கப்­பட்ட போது  அதனை நினை­வு­கூர்ந்து  கனே­டிய பிர­தமர்  ஜஸ்டின் ட்ரூடோ விசேட  அறிக்­கை­யொன்­றினை  விடுத்­தி­ருந்தார்.  அந்த அறிக்­கையில்  இலங்­கையில் இடம்­பெற்­றது  இனப்­ப­டு­கொலை தான் என்று  அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இலங்­கையில் 14 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முடி­வுக்கு கொண்­டு ­வ­ரப்­பட்ட  ஆயு­தப்­போ­ராட்­டத்தில்  உயி­ரி­ழந்­த­வர்­களை  நாம் இன்று நினை­வு­கூ­ரு­கின்றோம்.  முள்­ளி­வாய்க்­காலில் இடம்­பெற்ற   இனப்­ப­டு­கொலை உள்­ள­டங்­க­ளாக   யுத்­தத்தில்  பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள்   உயி­ரி­ழந்­துள்­ள­துடன்  பலர்  காணா­மல்­போ­யி­ருந்­தனர் . மேலும் பலர் அங்­க­வீ­ன­முற்­றுள்­ள­துடன்  இடம்பெயரவேண்­டிய   நிலைக்கு தள்­ளப்­பட்­டனர்.  இதன் விளை­வாக   பாதிக்­கப்­பட்ட, தப்­பிப்­பி­ழைத்தோர், அவர்­களின் அன்­புக்­கு­ரியோர், மற்றும்  இந்த வன்­மு­றை­களின் விளை­வாக ஏற்­பட்ட வலி­யுடன் வாழ்­வோ­ருக்­கான  எமது ஒரு­மைப்­பாட்டை  வெளிப்­ப­டுத்­து­கிறோம் என்று   இந்த அறிக்­கையில்    கனே­டியப் பிர­தமர்  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 கன­டாவில் பல­ வ­ரு­டங்­க­ளாக  நான் சந்­தித்த நபர்கள் உள்­ள­டங்­க­ளாக     போரினால்   பாதிக்­கப்­பட்ட கனே­டிய தமி­ழர்­களின் கதைகள்  மனித உரி­மைகள், சமா­தானம்,  மற்றும் ஜன­நா­யகம்  ஆகி­ய­வற்றை  விட்­டுக்­கொ­டுத்­து­விட முடி­யாது என்­ப­தற்­கான   நினை­வூட்­டல்­க­ளாக   திகழ்­கின்­றன.  ஆகை­யினால்  மே  18ஆம்  திக­தியை  தமி­ழி­னப்­ப­டு­கொலை  நினை­வு ­நா­ளாக  பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்­கான தீர்­மானம்   கடந்த வருடம்  கனே­டிய பாரா­ளு­மன்­றத்தில்   ஏக­ம­ன­தாக   நிறை­வேற்­றப்­பட்­டது.எனவே  யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டோர்  மற்றும்  தொடர்ந்து  பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்கும் இலங்­கை­யர்­களின்   உரி­மை­களை  உறு­திப்­ப­டுத்­து­வதில்   முன்­னி­றுத்­திய செயற்­பா­டு­களை  கனடா ஒரு­போதும் நிறுத்­தாது என்றும்  பிர­தமர்  ஜஸ்டின் ட்ரூடோ தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 இந்த அறிக்கை  தொடர்பில்   உட­ன­டி­யா­கவே   வெளி­வி­வ­கார அமைச்சு  கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தது.  ஆதா­ரங்­க­ளற்ற   இனப்­ப­டு­கொலை குற்­றச்­சாட்டு  இலங்­கை­யர்­களை   துரு­வ­ம­யப்­ப­டுத்தும் என்று       வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி அன்று  விசனம் தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் இலங்­கைக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் எரிக்­வோல்ஸை    வெளி­வி­வ­கார   அமைச்­சுக்கு  அழைத்து   கனே­டிய பிர­த­மரின் அறிக்­கைக்கு  கண்­ட­னமும்   தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த பின்­ன­ணி­யில்தான்  தற்­போது  கன­டா­வுக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டை­யி­லான முறுகல் நிலையை பயன்­ப­டுத்தி மீண்டும்  வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி  கனே­டியப் பிர­தமர் இலங்கை விவ­கா­ரத்­திலும்   பொய்­யு­ரைத்­த­தா­கவும்   இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­ற­தாக    குற்றம் சுமத்­தி­ய­தா­கவும்   சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற  மனித உரிமை மீறல்கள், மற்றும்  யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில்   உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு  பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று   தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­க­மா­னது  அக்­கறை செலுத்த வேண்டும் என்று  தொடர்ச்­சி­யாக  கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

 ஐ.நா. மனித உரிமை பேர­வையில்  2012ஆம் ஆண்டு முதல்  இலங்­கைக்கு எதி­ரான  பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்டு  பொறுப்­புக்­கூறல் விடயம்   வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.  ஆனாலும் மாறி மாறி  ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­க­ளினால் இது­வரை   பொறுப்­புக்­கூறல் விட­யத்தில்  ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள்   முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இத­னால்தான் தற்­போது   இந்த விட­யத்தில்  சர்­வ­தேச  விசா­ரணை  கோரப்­பட்டு வரு­கின்­றது. சர்­வ­தேச குற்­ற­வியல்   நீதி­மன்­றத்தில்  இலங்­கையை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் தரப்­பி­னரால்    வலி­யு­றுத்­தப்­பட்டு  வரு­கின்­றது.

இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உள்­ளக ரீதியில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்று  உறுதி அளிக்­கப்­பட்டு வந்­தது.  ஆனால் இது­வரை  உள்­ளக  ரீதி­யி­லான  பொறி­மு­றையின் கீழ்  உரிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.  நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில்  காணா­மல்­போ­னோ­ருக்­கான  அலு­வ­லகம், இழப்­பீட்­டுக்­கான அலு­வ­ல­கங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.  ஆனாலும் அதன் மூலம் பாதிக்­கப்­பட்ட  தமி­ழர்­களை திருப்­திப்­ப­டுத்த  முடி­ய­வில்லை.

தற்­போது உண்மை மற்றும் நல்­லி­ணக்கம் ஆணைக்­குழு  அமைக்­கப்­படும் என்று அர­சாங்கம்   தெரி­வித்­துள்­ளது.  தேசிய ஒற்­று­மைக்கும்   நல்­லி­ணத்­துக்­கு­மான அலு­வலம் தொடர்­பான  சட்­ட­மூ­லமும்    வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.  உண்மை,மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு விவ­கா­ரமும்  பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை   திருப்­தி­ப­டுத்­துமா என்ற சந்­தேகம்  மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு 14வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில்  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இன்­னமும்   உள்­நாட்டில் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை.  இத­னால்தான்  இந்த விட­யத்தில்  சர்­வ­தேச சமூ­கத்தின் தலை­யீ­டுகள்   காணப்­பட்டு வரு­கின்­றன. இதன்  ஓர் அங்­க­மா­கவே கன­டாவின் செயற்­பா­டு­களும்   அமைந்­துள்­ளன.

இறுதி யுத்­தத்­தின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.    ஐ.நா. மனித  உரிமை பேர­வையின் அறிக்­கையில்  40 ஆயிரம் பேர் வரையில்  இறு­தி­யுத்­தத்தில் கொல்­லப்­பட்­ட­தாக தகவல் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  இத­னை­விட  இழப்­புக்கள் அதிகம் என்று   கரு­தப்­பட்டு வரு­கின்­றது.  இந்த யுத்­தத்தில்  ஆயி­ரக்­க­ணக்­கானோர் காண­ம­லாக்­கப்­பட்­டனர்.  ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் படு­கா­யங்­க­ளுக்கு  உள்­ளா­னார்கள்.  9ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் அநா­த­ர­வாக்­கப்­பட்­டனர்.  90 ஆயிரம்  பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர்.  இவ்­வாறு பேரி­ழப்­புக்­களை  சந்­தித்த தமிழ்­மக்கள்   நீதியை கோரி நிற்­கின்ற போது  அதற்­கான  நட­வ­டிக்­கை­களை எடுக்­காது வெறும் விதண்­டா­வா­தங்­களை தெரி­விக்கும் வகை­யி­லேயே   வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியின் செயற்­பா­டுகள்   அமைந்­தி­ருக்­கின்­றன.

பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கான  நீதி உரிய காலத்தில் வழங்­கப்­பட்­டி­ருந்தால்  சர்­வ­தேச  நாடுகள்   இந்த விட­யத்தில் கவனம் செலுத்தும்  நிலைமை ஏற்­பட்­டி­ருக்­காது.  கனே­டிய  அர­சாங்­க­மா­னது  இந்த விடயம் தொடர்பில்  தலை­யீடு செய்­ய­வேண்­டி­ய­ சூழல்  உரு­வா­கி­யி­ருக்­க­மாட்­டாது. இலங்­கையில் இடம்­பெற்­றது  இனப்படுகொலை தான் என்ற தீர்மானத்தை   நிறைவேற்றவேண்டிய நிலைமை கனடாவுக்கு  ஏற்பட்டிருக்கமாட்டாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி  கிடைக்காமையினால்தான்  கனடாவிலுள்ள  தமிழ் மக்களின் அழுத்தங்கள்  காரணமாக கனேடிய பாராளுமன்றத்தில்  இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக் ஷ, கோட்டாபய ராஜபக் ஷ ஆகியோருக்கு  கனடா பயணத்தடை விதிக்கும் நிலை  ஏற்பட்டது.  தற்போதும் தமிழ் மக்களுக்கு  நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில்  கனடா  உட்பட  சர்வதேச நாடுகள்   அக்கறை செலுத்திவருகின்ற நிலையில்   அதற்கு எதிராக  வெளிவிவகா அமைச்சர் அலி சப்ரிஉட்பட்டோர்  கருத்துக்களை தெரிவிப்பது  ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.

பொறுப்புக்கூறும் விடயத்தில்  அரசாங்கமானது உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை வழங்க முன்வந்தால்  இத்தகைய   சர்வதேச அழுத்தங்கள்  இல்லாது போகும் என்பதை  வெளிவிவகார அமைச்சர் உட்பட்டோர்  உணர்ந்துகொள்ளவேண்டும். அதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் வகிபாகத்தை பெறுவதற்கான வழி என்ன?

2025-01-19 15:02:55
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசியம்

2025-01-12 14:32:54
news-image

பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் இழுத்தடிப்பு வேண்டாம்

2025-01-05 15:33:27
news-image

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற...

2024-12-29 08:58:38
news-image

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

2024-12-15 22:38:25
news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47
news-image

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு...

2024-01-21 21:05:37
news-image

நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

2024-01-14 11:49:14
news-image

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானம்...

2024-01-07 12:15:27
news-image

பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசியல் தீர்வும் அவசியம்

2023-12-31 17:06:11