வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

29 Sep, 2023 | 01:49 PM
image

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 215 பேரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை விசாரித்து. 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றச்சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமிருந்த 215 பேருக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டநிலையில், மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதுடன் அவர்களுக்கு அரசு வேலை அல்லது சுய வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் புகார் அளித்த போது உரிய நடவடிக்கை எடுக்காத அப்போதைய மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யேமன் கரையோரத்திலிருந்து பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி...

2023-12-10 13:20:15
news-image

நான் எப்போது உயிரிழப்பேன் என என்னை...

2023-12-10 12:14:16
news-image

"ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த...

2023-12-10 13:07:08
news-image

அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து...

2023-12-09 15:40:50
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய திட்டம்...

2023-12-09 12:57:03
news-image

இந்தியாவில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து...

2023-12-09 09:53:48
news-image

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும்...

2023-12-09 08:30:59
news-image

கடும் வெப்பத்தின் பிடியில் அவுஸ்திரேலியா

2023-12-08 16:02:47
news-image

பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர்...

2023-12-08 14:45:27
news-image

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை...

2023-12-08 13:09:30
news-image

அமெரிக்கரை கொல்ல சதி என்ற குற்றச்சாட்டு:...

2023-12-08 12:34:48
news-image

இது பேரிடர்.. அரசை பிறகு விமர்சித்துக்...

2023-12-08 12:29:01