நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது ஐந்து நிமிடங்களில் முழுமண்டபமும் எரிந்துவிட்டது - ஈராக்கின் திருமணநிகழ்வு தீவிபத்தில் உயிர்தப்பியவர்கள் தெரிவிப்பு

Published By: Rajeeban

29 Sep, 2023 | 11:37 AM
image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல அந்த நிமிடம் காணப்பட்டது என ஈராக்கில் திருமணநிகழ்வில் ஏற்பட்ட பாரிய தீ விபத்திலிருந்து உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்குஈராக்கில் கராகோஸ் நகரில் திருமண நிகழ்வில் இடம்பெற்ற தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்

தீபரவியவேளை காணப்பட்ட நிலையை உயிர் தப்பியவர்கள் பிபிசிக்கு வர்ணித்துள்ளனர்.

செவ்வாய்கிழமை தீ விபத்து இடம்பெற்றவேளை 19 வயது காலி ஹாசிம் ஹைதம் விருந்து மண்டபத்திலிருந்து சில மீற்றர் தொலைவிலேயே நின்றிருந்தார்.

அவர் உள்ளே சிக்குண்டிருந்த தனது ஐந்து நண்பர்களை காப்பாற்ற ஒடினார்.

ஒரு அறை மூடப்பட்டிருந்த நாங்கள் அதனை உடைத்து திறந்தோம் மண்டபத்திலிருந்து பெரும் தீச்சுவாலைகள் வந்தன அது நரகத்தின் கதவுகள் திறந்தது போல காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்பம் தாங்கமுடியாததாக காணப்பட்டது – அதனை என்னால் வர்ணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மணமக்கள் நடனமாட ஆரம்பித்தவேளை பரவியதீ காரணமாக 94 பேர் உயிரிழந்துள்ளனர்-100 பேர் காயமடைந்துள்ளனர்.

மணமக்கள் உயிரிழந்துள்ளனர் என ஆரம்ப கட்டதகவல்கள் தெரிவித்த போதிலும் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர் என சிவில் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு தான் பார்த்த காட்சிகளை பெரும்துன்பகரமானவை என நசிம் தெரிவித்துள்ளார்.

என்னால் எதையும் செய்ய முடியவில்லை நான் அங்கிருந்து தப்பியோடினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் வந்ததும் நான் எனது நண்பர்களை பார்ப்பதற்காக உள்ளே ஓடினேன் கழிவறையில் 26 உடல்களை பார்த்தேன் 12 வயது சிறுமி முற்றாக எரியுண்ட நிலையில் மூலையில் காணப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த நகரில் அந்த மண்டபத்திற்குள் பட்டாசுகள் கொழுத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது என சிவில் பாதுகாப்பு படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தப்பிச்செல்வதற்கான வழிகள் இன்மையும் உயிரிழப்பிற்கு காரணம் என நசீம் தெரிவித்துள்ளார்.

ஒரு சில நிமிடங்களில் அழிந்தது

தனது நண்பர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என நசீம் தெரிவித்துள்ளார்.

அவரின் நண்பர்களில் ஒருவரான 17 டொமி தீ பரவ ஆரம்பித்தவேளை வெளியேறும் பகுதிக்கு அருகில் காணப்பட்டார் இதனால் அவர் உயிர்தப்பினார்.

கூரையிலிருந்து பாரிய கரும்புகையை கண்டேன் இதனால் நான் உடனடியாக வெளியே ஒடினேன் என அவர் குறி;ப்பிட்டார்.

ஐந்து நிமிடங்களில் கட்டிடம் முழுமையாக எறிந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

பல உடல்களை கடந்த இரண்டுநாட்களில் அடக்கம் செய்துவிட்டனர்- எனினும் இன்னமும் பலர் தங்கள் உறவுகளின் உடல்களை தேடிவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யேமன் கரையோரத்திலிருந்து பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி...

2023-12-10 13:20:15
news-image

நான் எப்போது உயிரிழப்பேன் என என்னை...

2023-12-10 12:14:16
news-image

"ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த...

2023-12-10 13:07:08
news-image

அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து...

2023-12-09 15:40:50
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய திட்டம்...

2023-12-09 12:57:03
news-image

இந்தியாவில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து...

2023-12-09 09:53:48
news-image

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும்...

2023-12-09 08:30:59
news-image

கடும் வெப்பத்தின் பிடியில் அவுஸ்திரேலியா

2023-12-08 16:02:47
news-image

பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர்...

2023-12-08 14:45:27
news-image

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை...

2023-12-08 13:09:30
news-image

அமெரிக்கரை கொல்ல சதி என்ற குற்றச்சாட்டு:...

2023-12-08 12:34:48
news-image

இது பேரிடர்.. அரசை பிறகு விமர்சித்துக்...

2023-12-08 12:29:01