நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

Published By: Vishnu

25 Sep, 2023 | 12:30 PM
image

ஏ.எல்.நிப்றாஸ்

அரைக் கால்சட்டைப் போட்ட பரா­ய­ம­டையாப் பிள்­ளைகள் சண்டை பிடித்து, அச்­சண்டை பெரிய விப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்­திய பிறகு, கடை­சி­யாக அவர்­க­ளது பெற்றோர் கூப்­பிட்டு விசா­ரித்தால் அவன், 'இவனை' குறை சொல்வான், இவன், 'அவனை' குறை சொல்வான். கடை­சி­யாக இரண்­டு­பேரும் அழு­வார்கள். விசா­ரிக்க வந்­த­வர்கள் குழப்­பிப்­போவார்கள்  அத்­தோடு விசா­ரணை முடிந்­து­விடும்.

இலங்­கையில் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, மனி­த­குல ரீதி­யான பெரும் அழி­வு­க­ளையும், பின்­ன­டை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­திய பல சம்­ப­வங்கள் தொடர்­பான பொறுப்­புக்­கூறல் என்­பது காலங்­கா­ல­மாக இப்­ப­டித்தான் உள்ளது.

யுத்­தத்­துக்கு முன்­னரும், யுத்­த­ கா­லத்­திலும் அதற்குப் பின்­னரும் பல தரப்­பாலும் நாட்­டி­லுள்ள அனைத்து இனங்கள் மீதும் மேற்­கொள்­ளப்­பட்ட உரிமை மீறல்கள், அட்­டூ­ழி­யங்கள், இந்த நாட்டை சீர­ழித்த ஆட்­சி­யா­ளர்­களின் மோச­டிகள், மத்­திய வங்கி ஊழல் என நீண்டு செல்­கின்ற ஒவ்­வொரு விவ­கா­ரத்­திலும் இலங்­கை­யரின் அனு­பவம் இது­வன்றி வேறொன்­று­மில்லை.  

இலங்கைச் சூழலில் சூடு­பி­டிக்­கின்ற, பேசப்­ப­டு­கின்ற மிக முக்­கி­யத்­து­வ­மான விவ­கா­ரங்­களும் அந்­தத்த காலத்தில் மட்­டுமே விவா­திக்­கப்­பட்டு பிறகு, கண்­டு­கொள்­ளாமல் விடப்­பட்டு விடு­கின்­றன. பேசு­பொ­ரு­ளாக, வாய்க்கு அவ­லாக வேறு ஒரு விவ­காரம் கிடைத்­ததும் மக்­களும் இதனை மறந்து, கடந்து போய்­வி­டு­கின்­றனர்.

ஆக­வேதான் எந்தப் பிரச்­சி­னைக்கும் முழு­மை­யான தீர்வு காணப்­ப­ட­வில்லை. இது­கா­ல­வரை நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் நடுநிலையானதா என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அவ்­வா­றான அறிக்­கை­களில் கண்­ட­றி­யப்­பட்ட விட­யங்­களின் அடிப்­ப­டையில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட வர­லாறும் இல்லை என்றே கூற வேண்டும்.

பொறுப்­பு­வாய்ந்­த­வர்கள் பொறுப்­பின்றி செயற்­ப­டு­கின்­றார்கள். பிறகு பொறுப்­புக்­கூ­றலை தட்டிக் கழிக்­கின்­றனர். இதில் ஆட்­சி­யா­ளர்கள், அர­சியல் தலை­வர்கள் மற்றும் அதி­கா­ரிகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றார்கள்.

இந்தப் பட்­டி­யலில் கடை­சி­யாக இணைந்­துள்ள விவ­கா­ரம்தான் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லாகும். மிக முக்­கி­ய­மான இந்த விவ­காரம் பற்­றிய உண்­மையைக் கண்­ட­றி­யாமல் வெறு­மனே வாயால் வடை சுடு­கின்ற வேலை மட்டும் நான்கு வரு­டங்­க­ளுக்கு மேலாக நடந்து கொண்­டி­ருப்­ப­தா­கவே கருத வேண்­டி­யள்­ளது.

கதைத்து கதைத்தே காலத்தை கடத்­து­வதில் இலங்கை ஆட்­சி­யா­ளர்­களும் அர­சி­யல்­வா­தி­களும்  கைதேர்ந்­த­வர்கள். அதுதான் இப்­போதும் தொடர்­கின்­றது. இன்னும் சில வாரங்­களில் வேறு ஒரு புதினம், பர­ப­ரப்­பான செய்தி வந்தால் மக்கள் அதற்குப் பின்னால் போய்­வி­டு­வார்கள், உயிர்த்த ஞாயிறு விவ­காரம் பேசு­பொருள் என்ற நிலையில்  இருக்­காது என்­பதே யதார்த்­த­மாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் உற­வு­களை இழந்த கிறிஸ்­தவ மக்­களும், நெருக்­கு­வா­ரப்­ப­டுத்­தப்­பட்ட முஸ்லிம் சமூ­கமும் மட்­டு­மன்றி, சிங்­கள, தமிழ் மக்­களும் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டு­மென 4 வரு­டங்­க­ளுக்கு மேலாக அவாவி நிற்­கின்­றனர்.

ஆனால், தெருவில் நண்­பனைத் தாக்­கிய சிறுவன் கூறு­கின்ற வியாக்­கி­யானம் போல சில அர­சி­யல்­வா­தி­களின் கதைகள் உள்­ளன. இரவில் படுக்­கையில் சிறுநீர் கழித்த குழந்தை காலையில் அச­டு­வ­ழிய கதை ­வி­டு­வது போல சில பொறுப்பு வாய்ந்­த­வர்கள் விளக்­க­ம­ளிப்­ப­தையும் காண முடி­கின்­றது.

பெரும் அழி­வையும் உல­கெங்கும் கடு­மை­யான அதிர்­வ­லை­க­ளையும் ஏற்­ப­டுத்­திய உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்த வேண்­டிய நிர்ப்­பந்தம் சனல் 4 ஆவ­ணப்­ப­டத்­திற்கு பிறகு இலங்கை அர­சுக்கு மீள ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இருந்­தாலும், அது எந்­த­ள­வுக்கு விரை­வாக,  வெளிப்­ப­டை­யாக, முழு­மை­யாக, திருப்­திப்­படும் விதத்தில் நடந்­தேறும் என்­பதில் ஐயப்­பா­டுகள் உள்­ளன.  

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக அரச தரப்பில் இருந்து இரு வேறு­பட்ட நிலைப்­பா­டுகள் வெளிப்­பட்­டுள்­ளன. சனல் 4 காணொளி வெளி­யான பிற்­பாடு, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இது தொடர்­பாக இரு விசா­ரணைக் குழுக்­களை அமைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். ஆனால், பாது­காப்பு அமைச்சு இக் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றது.

சனல் 4 தொலைக்­காட்சி என்­பது சமூ­க ­ந­லனை நோக்­காகக் கொண்டு இதனை ஒளி­ப­ரப்­பி­யது என்று உறு­தி­யாகச் சொல்ல முடி­யாது. மிக முக்­கி­ய­மாக, இதில் சாட்­சி­ய­ம­ளித்துள்ள அசாத் மௌலானா எனும் மொஹமட் ஹன்சிர் ஒரு சமூக சிந்­த­னை­யா­ளரோ, மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளரோ அல்ல. இன நல்­லி­ணக்­கத்­திற்­காக போரா­டி­ய­வரும் அல்லர். அவர் கூறு­வ­தெல்லாம் உண்­மை­யாக மட்­டுமே இருக்க வேண்டும் என்­பதும் இல்லை.

மரு­த­மு­னையைச் சேர்ந்த இவ­ரது தந்தை மிஹ்லார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்­ம­நாபா அணியைச் சேர்ந்­தவர். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க உறுப்­பி­னர்கள் சில­ரோடு சேர்ந்து இந்­தி­யாவில் வைத்து மிஹ்லார் சுட்டுக் கொல்­லப்­பட்டார். அதன் பிறகு, சில தமிழ் இயக்கச் செயற்­பாட்­டா­ளர்கள், அர­சி­யல்­வா­தி­க­ளோடு இவருக்கு தொடர்­புகள் ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.  

பிள்ளையான் எனப்­படும் சிவ­நே­சத்­துரை சந்­தி­ர­காந்­த­னுடன் நெருக்­க­மாக செயற்­பட்டார் என்­பது மறுக்க, மறைக்க முடி­யாத நிதர்­ச­ம­ன­மாகும். இப்­படி அவ­ருக்குப் பின்­னாலும் ஒரு பின்­புலக் கதை உள்­ளது.

மிக முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், இப்­படி ஒரு பாரிய தாக்­குதல் நடக்கப் போகின்­றது என்றும், அந்தப் பழி முஸ்லிம் சமூ­கத்தின் மீது விழும் என்­பதும் முன்­னமே தெரிந்­தி­ருந்தும் அதை தடுக்க இவர் முனை­ய­வில்லை. ஆகவே, இவர் கூறு­வது உண்­மை­யென்றால், இந்த தாக்­கு­தலில் சம்­பந்­தப்­பட்ட மற்ற எல்லோ­ரு­டனும் சேர்த்து இவரும் குற்­ற­வா­ளியே என்­பதை மறுக்க முடி­யாது.

இப்­போது அசாத் மௌலா­னா­வுக்கு ஒரு தேவை அல்­லது காரணம் வந்த போது வாயைத் திறந்­தி­ருக்­கின்றார் என்­பதே உண்­மை­யாகும். எனவே, புக­லிடம் கோரி­யுள்ள அவர் கூறு­கின்ற தகவல் நூறு வீதம் உண்­மை­யாக இருக்க வேண்டும் என்­ப­தில்லை. ஆனால், அவ­ரது வாக்­கு­மூலம் தட்­டிக்­க­ழிக்­கப்­பட முடி­யா­தது. அதில் ஒரு வீத­மேனும் உண்மை இருக்­கின்­றதா? என்­பதை கண்­ட­றிய வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது.  எனவே உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து முன்னர் வெளி­யான தக­வல்கள் மற்றும் சனல் 4 இன் புதிய காணொளி மட்­டு­மன்றி, மேலும் பல புதிய ஆதா­ரங்­களைப் பெற்று உண்­மையை வெளிக் கொணர வேண்டும். கூட்டுக் கள­வா­ணி­களை அம்­ப­லப்­ப­டுத்த வேண்டும்.

இதற்கு திட்டம் தீட்­டி­ய­வர்கள், அதற்கு ஆசீர்­வாதம் வழங்­கி­ய­வர்கள், தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள் மட்­டு­மன்றி சந்­தே­கத்­திற்­கி­ட­மான அர­சியல் தரப்­பி­னரும் கூறு­வது எல்லாம் உண்மை என்றோ பொய் என்றோ எடுத்த எடுப்பில் முடி­வெ­டுக்க முடி­யாது.   நீதியான­  விசா­ர­ணை மூலம் உண்­மையை கண்­ட­றிய வேண்டும். மன்­னிப்பு வழங்­கு­வதை பற்றி பிறகு பார்க்­கலாம்.

நடந்­தது நடந்­து­போ­யிற்று என்று இதனை இப்­ப­டியே கண்டும் காணா­த­து­போல கடந்து செல்ல முடி­யாது என்­பதை  ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க நன்கு அறிவார். என­வேதான் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் புதிய ஆதா­ரங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­காக உயர்­மட்டக் குழுக்­களை நிய­மித்­துள்ளார்.

இவ்­வி­சா­ரணைக் குழுக்கள் உண்­மையை கண்­ட­றிந்து, உரி­ய­வர்­களை தண்­டிக்­குமா அல்­லது முன்­னைய குழுக்கள் போல 'அறிக்கை சமர்ப்­பிப்­ப­தோடு' முடங்கிப் போகுமா என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும். ஆனாலும், ஜனா­தி­ப­தியின் இந்­ந­ட­வ­டிக்கை வர­வேற்­கத்­தக்­கது.

இருப்­பினும் மறு­பு­றத்தில், சனல் 4 குற்­றச்­சாட்­டுக்கள் அடிப்­ப­டை­யற்­றவை என்று பாது­காப்பு அமைச்சு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. அதற்­கான விளக்­கங்­களும் அளிக்­கப்­பட்­டுள்­ளன. பெரும்­பாலும் பாது­காப்பு அமைச்­சுடன் தொடர்­பு­டை­ய­தான குற்­றச்­சாட்­டுக்­களை மறுப்­ப­தற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறலாம்.

அதா­வது, விசா­ரணைக் குழுக்கள் நிய­மிக்­கப்­ப­டு­வது பற்றி ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­தி­ருக்­கின்ற நிலையில், ஜனா­தி­ப­தியின் கீழுள்ள பாது­காப்பு அமைச்சு இதனை மறுத்­து­ரைக்­கின்­றது. இது ஒரு முரண்­ந­கை­யாகும். இது ஏன் என்பது தான் தெரி­ய­வில்லை.

அர­சாங்­கத்­திற்­குள்­ளேயே இவ் விவ­கா­ரத்தில் இரட்டை நிலைப்­பா­டுகள் உள்­ள­னவா என்ற நியா­ய­மான சந்­தே­கத்தை இது ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அது­மட்­டு­மன்றி, மேலும் பல சந்தேகங்­க­ளுக்கும் இது வித்­தி­டு­கின்­றது.   இப்­ப­டி­யான ஒரு சூழலில், அர­சி­யல்­வா­திகள், அதிகாரிகள், அரச இயந்திரம், மக்கள் என அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பைப் பெற்று, முறையான விசாரணை ஒன்றை மேற்கொண்டு, உண்மையை கண்டறிவதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும் எப்போது சாத்தியமாகும் என்பது நிச்சயமில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது மிகவும் காட்டுமிராண்டித்தனமான பலியெடுப்பாகும். உயிர்ப்பலி எடுத்ததற்கு அப்பால் நாட்டில் இன முரண்பாட்டையும் பெரும் பிரளயத்தையும் உண்டுபண்ணியது. அது அரசியல் அதிகாரத்திற்காக நடந்திருந்தால் அது மிகப் பெரிய குற்றமும், பிழையான முன்மாதிரியுமாகும்.

எனவே, அதனை கண்டுகொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக கடந்து செல்ல முடியாது. அரச இயந்திரம் எந்தக் காரணத்திற்காகவும் உண்மையைக் கண்டறிந்து, குற்றவாளிகளை தண்டிப்பதில் தவறு இழைக்குமாயின், விசாரணை நடத்தப்படாமலேயே மக்கள் 'உண்மையை' ஊகித்து உணர்ந்து கொள்வது அவ்வளவு சிரமமாக இருக்காது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54