மறுக்க முடி­யாத உரிமை

Published By: Vishnu

24 Sep, 2023 | 07:45 PM
image

கபில்

தியாக தீபம் திலீபன் நினை­வேந்­தலை கொழும்பில் நடத்­து­வ­தற்கு நீதி­மன்­றங்­களின் ஊடாக பொலிசார் தடை உத்­த­ரவைப் பெற்­றி­ருக்­கின்­றனர்.

கொழும்பில் திலீபன் நினை­வேந்தல் நிகழ்வு எதுவும் இதற்கு முன்னர் நடை­பெற்­ற­தில்லை.

கிறிஸ்­தவ ஒத்­து­ழைப்பு இயக்கம் முதல் முறை­யாக அதற்­கான ஏற்­பா­டு­களை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மேற்­கொண்­டி­ருந்­தது. ஆனால், கோட்டை மற்றும் மாளி­கா­கந்தை நீதி­மன்­றங்கள் இந்த நினை­வேந்­தல்­க­ளுக்கு தடை­வி­தித்­தன.

இந்த நிகழ்வு குறித்த அறி­விப்பு வெளி­யா­கி­யதும், “முது­கெ­லும்பு உள்­ள­வர்கள் தயா­ரா­குங்கள், கொழும்­புக்கு வரும் புலிகள் மீது தாக்­குதல் நடத்­துவோம்” என அழைப்பு விடுக்கும் பதி­வுகள் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கின.

இந்த அச்­சு­றுத்­தல்­களை அடுத்து, மக்­களின் பாது­காப்பு மற்றும் அநா­வ­சி­ய­மான குழப்­பத்தை தவிர்க்க குறித்த நினை­வேந்தல் நிகழ்வை ரத்துச் செய்­வ­தாக கிறிஸ்­தவ ஒத்­து­ழைப்பு இயக்கம் அறி­வித்­தி­ருந்­தது. அதற்குப் பின்­னரே, கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நிகழ்­வுக்­கான தடை­உத்­த­ரவைப் பிறப்­பித்­தது.

திலீபன் நினை­வேந்தல் நிகழ்வு இடம்­பெறு­வதால் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு பாதிக்­கப்­படும், நல்­ல­ணக்கச் சூழ­லுக்கு ஆபத்து நேரிடும் என பொலிஸார் நீதி­மன்­றத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். இதே­போன்ற விண்­ணப்பம் வவு­னியா, யாழ்ப்­பாணம் நீதி­மன்­றங்­க­ளிலும் பொலி­ஸாரால் முன்­வைக்­கப்­பட்­டது.

ஆனால், அந்த நீதி­மன்­றங்கள் அதனை நிரா­க­ரித்து விட்­டன. நினை­வேந்தல் உரி­மையை மறுக்க முடி­யாது என்றும், இன நல்­லு­றவு குலை­யாமல் பாது­காப்பு வழங்­கு­மாறும் பொலி­ஸா­ருக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது,

அதே­வேளை, திரு­கோ­ண­ம­லையில் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை சாட்­டாக வைத்துக் கொண்டே, இந்த நீதி­மன்ற தடை உத்­த­ர­வுகள் பெறப்­பட்­டன அல்­லது தடை உத்­த­ரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

திரு­கோ­ண­மலை கப்­பல்­துறை இரா­ணுவ முகா­முக்கு அருகே, திலீபன் நினைவு ஊர்தி தாக்­கப்­பட்­டமை குறித்து விட­யத்தை திசை திருப்­பு­வ­தற்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்­டமான், சிங்­களப் பிர­தே­சங்­களை ஊடு­ருவிச் சென்­றது நல்­லி­ணக்­கத்தை குழப்பும் செயல் என்று விமர்­சித்­தி­ருக்­கிறார். அனு­ம­தி­யின்றி அந்த ஊர்தி சிங்­களப் பிர­தே­சத்­துக்குள் சென்­ற­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இன்னும் பலர் சிங்­கள பிர­தே­சத்­துக்குள் திலீபன் நினைவு ஊர்தி பிர­வே­சித்­தது தான் தாக்­கு­த­லுக்கு காரணம் என்று நியாயம் கற்­பிக்க முனை­கின்­றனர்.

வடக்கும் கிழக்கும் தமி­ழரின் தாயகம் என்­பதை வலி­யு­றுத்தி- சிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுக்க கோரி, ஊர்­கா­வற்­ப­டை­யி­னரின் ஆயு­தங்­களைக் களையக் கோரி அமைதி வழியில் போராடி உயிர் துறந்­தவர் தான் திலீபன்.

திலீபன் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும், யாழ்ப்­பா­ணத்­தி­லேயே அவர் உயிர் துறந்­தி­ருந்­தாலும், அவ­ரது சாவுக்கு முக்­கி­ய­மான காரணம் கிழக்குத் தான்.

வடக்கும் கிழக்கும் இணைந்­தது தான் தமிழர் தாயகம் என்­பதில் உறு­தி­யாக இருந்­தவர் அவர்.  கிழக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்கள் நிறுத்­தப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் அவர்.

சிங்­கள ஊர்­கா­வல்­ப­டை­யி­ன­ரிடம் இருந்து ஆயு­தங்­களைக் களைய வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யவர் அவர்.

இத்­த­கைய செயற்­பா­டு­க­ளினால் தமிழர் தாயகம் சிங்­கள மயப்­ப­டுத்­தப்­படும் ஆபத்தை அவர் உணர்ந்­தி­ருந்தார். தமிழர் தாயகப் பிர­தேசம் பறி­போகும் என்­பதை உணர்ந்­தி­ருந்தார். தமிழர் தாயகம் துண்­டா­டப்­படும் என்று உணர்ந்­தி­ருந்தார்.

திலீ­பனின் அந்தக் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டவும் இல்லை. தமி­ழர்­களின் நிலங்கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வதில் இருந்தும் சிங்­களக் குடி­யேற்­றங்கள் நிறு­வப்­ப­டு­வதில் இருந்தும் பாது­காக்­கப்­ப­டவும் இல்லை. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற நிலையில், அதனை இந்­தி­ய -- - -­இ­லங்கை ஒப்­பந்­த­ததில் இலங்கை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்ள நிலையில், சிங்­களப் பகுதி என்­பது எங்­கி­ருந்து வந்­தது?

நினை­வேந்தல் ஊர்தி சிங்­களப் பகுதி ஊடாகச் சென்­றது தான் தவறு என்று வைத்துக் கொண்­டாலும், இதனை இனக்­க­ல­வ­ரத்தை தூண்­டு­கின்ற முயற்சி என்று குற்­றம்­சாட்­டு­வது பொருத்­த­மா­னதா?

அத்­த­கைய குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் இன முரண்­பாடு ஏற்­படும் என்று பொலிஸார் நீதி­மன்­றத்­திடம் தடை உத்­த­ரவு பெற முடி­யுமா?

முற்­றிலும் தமிழர் வாழு­கின்ற பிர­தே­சங்­க­ளுக்குள்  நுழைந்து, பௌத்த பிக்­குகள் விகா­ரை­களை அமைக்கும் போது, தமி­ழர்கள் எதிர்ப்பை வெளி­யிட்­ட­னரே தவிர தாக்­குதல் நடத்­த­வில்லை.

தையிட்டி விகாரை, குருந்­தூர்­மலை விகாரை போன்­ற­வற்­றுக்கு எதி­ராக தமி­ழர்கள் அமை­தி­யாக போராட்­டங்­களைத் தான் நடத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

தங்­களின் பகு­திக்குள் நுழைந்­தனர், தங்­களின் நிலங்­களை அப­க­ரித்து விகா­ரை­களை அமைத்­துள்­ளனர் என்று அவர்கள், தாக்­குதல் நடத்தி விரட்­ட­வில்லை.

பௌர்­ணமி தினங்­களில் தமி­ழர்­களின் பிர­தே­சங்­களை ஊட­றுத்து எத்­தனை பௌத்த ஊர்­வ­லங்கள் வடக்கு கிழக்கில் நடக்­கின்­றன.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குள் கூட, புத்­தரை எடுத்துச் சென்று வழி­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அதனை எதிர்த்து தமி­ழர்கள் யாரும், வன்­மு­றை­களில் ஈடு­ப­ட­வில்லை.

ஆனால், தமி­ழர்கள் தங்­களின் நினை­வேந்தல் ஊர்­தியில் பயணம் செய்தால், மட்டும் சிங்­க­ள­வர்கள் தாக்­குதல் நடத்­து­கின்­றனர்.

இலங்கை ஒரு சிங்­கள பௌத்த பூமி என்றும் எங்­கேயும், புத்தர் சிலையை வைத்து வழி­படும் உரிமை தங்­க­ளுக்கு இருப்­ப­தா­கவும் முன்னர் சரத் வீர­சே­கர கூறி­யி­ருந்தார்.

இந்த நாடு சிங்­க­ள­வர்­க­ளுக்கு மட்டும் உரித்­தா­ன­தல்ல. தமி­ழர்­க­ளுக்கும் உரி­யது.

இலங்கை தமி­ழர்­களின் பூர்­வீக தேசம். இங்கு நட­மாடும் சுதந்­தி­ரமும், நினை­வேந்தும் சுதந்­தி­ரமும் தமி­ழர்­க­ளுக்கு உள்­ளது.

அதனை சிங்­கள ஆட்­சி­யா­ளர்­களோ, அல்­லது அதி­கார வர்க்­கமோ நிரா­க­ரிக்க முடி­யாது.

இந்த நாட்டில் பிறந்த அனை­வ­ருக்கும் எங்­கேயும் நட­மா­டு­கின்ற உரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. அது அடிப்­படை உரி­மை­க­ளாக அர­சி­ய­ல­மைப்பில் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

அப்­ப­டி­யி­ருக்க சிங்­களப் பகு­தியின் ஊடாகச் சென்­றதால் தான் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக நியா­யப்­ப­டுத்­து­வது தவறு.

அவ்­வாறு நியா­யப்­ப­டுத்­து­ப­வர்கள், நாட்டின் அடிப்­படை உரிமைக் கோட்­பா­டு­களை மறுக்­கி­றார்கள். அல்­லது அது பறிக்­கப்­ப­டு­வதை ஏற்றுக் கொள்­கி­றார்கள் என்று தான் அர்த்தம்.

வடக்கு, கிழக்கில் தமி­ழர்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் பௌத்த விகா­ரை­களை அமைப்­பது சரி­யா­னதே என்றால், சிங்­களப் பகு­தி­களின் ஊடாக திலீபன் நினை­வேந்தல் ஊர்தி பயணம் செய்­ததும் சரி­யா­னது தான். இந்த இடத்தில் அதற்கு வேறு கணக்கு, இதற்கு வேறு கணக்கு கிடை­யாது.

தமிழர் பகு­தி­களில் விகா­ரைகள் கட்­டப்­ப­டு­வதை எதிர்த்து தமி­ழர்கள் போரா­டிய போது, மௌனம் காத்­த­வர்கள் இப்போது, சிங்களப் பகுதி ஊடாக சென்றதால் தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நியாயம் கூற வந்திருக்கிறார்கள்.

சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் தங்களின் நியாயமான உரிமைகளுடன் வாழுகின்ற நிலை உருவாக்கப்படாது போனால், எதிர்காலத்தில் இவ்வாறான உரசல்களும் முரண்பாடுகளும் தான் மேலோங்கும்.

அத்தகையதொரு நிலையைத் தான் திருகோணமலையில் தாக்குதல் நடத்தியவர்கள் உருவாக்க முனைகிறார்கள்.

தமிழர்களுடன் இணைந்து வாழ விரும்பினால் தமிழர்களின் விருப்பு வெறுப்புகளையும் வாழ்வியல் நடத்தைகளையும் புரிந்து கொள்வதுடன் அதற்கு இணங்கி நடக்கவும் தயாராக இருக்கவேண்டும்.

அது தான் நல்லுறவுக்கு - நல்லிணக்கத்துக்கு வழிகோலும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54