தனி வழி செல்­வ­தற்கு கள­ம­மைக்கும் பஷில்

Published By: Vishnu

24 Sep, 2023 | 07:46 PM
image

நமது அர­சியல் நிருபர்

ஐக்­கிய நாடுகள் பொதுச்­சபை கூட்டம் மற்றும் ஜி77 உச்­சி­மா­நாடு ஆகி­ய­வற்றில் பங்­கேற்­ப­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமெ­ரிக்கா மற்றும்  கியூபா ஆகிய நாடு­க­ளுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை கடந்த வாரத்தில் மேற்­கொண்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி என்ற ரீதியில் ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்­டத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வியா­ழக்­கி­ழமை உரை­யாற்­றி­ருந்த போதிலும் 2002ஆம் ஆண்டில் பிர­த­ம­ரா­கவும் ஐ.நா. கூட்­டத்தில் அவர் உரை­யாற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

இந்தோ-பசிபிக் பூகோள அர­சி­யலில் இலங்­கையின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தும் வகையில் பல்­வேறு சம்­ப­வங்கள் அமெ­ரிக்­காவில் அரங்­கே­றி­யி­ருந்­தது. அவற்றில் மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாக இந்­திய – - சீன பிராந்­திய போட்­டியில் இலங்கை எந்தப் பக்கம் உள்­ளது என்­பது அனை­வ­ராலும் அவ­தா­னிக்­கப்­பட்ட விட­ய­மாகும். ஏனெனில் சீனா மேலா­திக்­கத்தை கொண்ட ஜி77 உச்­சி­மா­நாட்டில் கலந்­து­கொண்ட  ஜனா­தி­பதி ரணில், அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற ஐ.நா. பொதுச்­சபை கூட்­டத்­திலும் பங்­கேற்­றி­ருந்தார்.

பிராந்­தி­யத்தில் இந்­திய –- சீன போட்டி காணப்­பட்­டாலும் உலக அரங்கில் அமெ­ரிக்க –- சீன பனிப்போர் என்­பது கடு­மை­யான நிலையில்  உள்­ளது. இந்தப் பூகோள அர­சியல் சூழலில் இலங்­கையை சாத­க­மான தடத்தில் கொண்டு செல்­வது என்­பது ஜனா­தி­பதி ரணி­லுக்கு உள்ள பெரும் சவால்­களில் ஒன்­றாகும். இதன் தாக்கம் ஜனா­தி­ப­தியின் அமெ­ரிக்க விஜ­யத்தில் உணர முடிந்­தது.

இதே­வேளை உள்­ளக அர­சி­ய­லிலும் பல்­வேறு கொந்­த­ளிப்­புகள் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளன. இது­வரை காலமும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளித்த ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அடுத்து வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தனித்து வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது. இதனை மையப்­ப­டுத்­திய கலந்­து­ரை­யா­டல்­களை பசில் ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்­துள்ளார். குறிப்­பாக ஜனா­தி­பதி நாட்டில் இல்­லாத கடந்த வாரத்தில் பல முக்­கிய சந்­திப்­பு­களை பசில் ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்­தி­ருந்­தமை குறித்து அர­சியல் வட்­டா­ரங்­களின் அவ­தா­னத்தை பெற்­றி­ருக்­கின்­றது.

ரணில் - பைடன் சந்­திப்பு

எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அமெ­ரிக்க விஜ­யத்தின் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடனை சந்­தித்து இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை இலங்கை தரப்பு முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அனைத்து இரா­ஜ­தந்­திர மையங்கள் ஊடா­கவும் அமெ­ரிக்க –- இலங்கை இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இந்த முயற்­சி­களின் பிர­காரம் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி ஜோ பைடன் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு சாத்­தி­ய­மாக்­கப்­பட்ட போதிலும், அது வெறு­மனே ஒரு புகைப்­ப­டத்­திற்­கான சந்­திப்­பாக மாத்­தி­ரமே இருந்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்­டத்­தொ­டரில் பங்­கு­பற்­றிய அனைத்து நாட்டுத் தலை­வர்­க­ளுக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் இரவு விருந்­து­ப­சாரம் ஒன்றை வழங்­கி­யி­ருந்தார். இதன்­போதே ஜனா­தி­பதி ரணில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடனை சந்­தித்தார்.

இரு­த­ரப்பு பேச்சு இல்லை

ஆனால், ஏனைய நாட்டு தலை­வர்கள் மற்றும் முக்­கிய உலக அமைப்­பு­களின் தலை­மை­க­ளுடன் பிரத்­தி­யேக சந்­திப்­பு­க­ளையும் இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னெ­டுத்­தி­ருந்தார். ஆனால் அவ்­வா­றா­ன­தொரு இரு­த­ரப்பு கலந்­து­ரை­யாடல் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைட­னுக்கும் ஜனா­தி­பதி ரணி­லுக்கும் இடையில் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

மாறாக அமெ­ரிக்க சர்­வ­தேச உதவித் திட்­டத்தின் தலைமை அதி­கா­ரி­யான சமந்த பவரை சந்­தித்து ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இரா­ஜ­தந்­திர விளக்கம்

இவ்­வாறு அமெ­ரிக்க மற்றும் இலங்கை தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்பு கலந்­து­ரை­யாடல் நடை­பெ­றா­மைக்கு பல்­வேறு கார­ணங்­களை இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்று ஒரு வருட காலம் கடந்­துள்ள நிலை­யிலும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் வாழ்த்து இது­வரையில் கிடைக்­கப்­பெ­ற­வில்லை என்ற ஒரு விட­யமும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

காலி­மு­கத்­திடல் ஆர்ப்­பாட்­டங்கள் மற்றும் அமைதி வழி போராட்­டங்கள் மீதான தாக்­குதல்கள் ஊடாக பொது மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் கடு­மை­யாக கேள்­விக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக வொஷிங்டன் கரு­து­கின்­றது. அதுவும் ஜனா­தி­ப­தி­யாக ரணில் பதவியேற்­றதன் பின்னர், அமைதி வழிப் போராட்­டங்கள் மீதான தாக்­கு­தல்­களை அமெ­ரிக்கா கண்­டித்­துள்­ளது.

இலங்­கையின் மனித உரிமை மீறல்­களை மையப்­ப­டுத்தி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யிலும் அமெ­ரிக்கா தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தொடர்ந்தும் மனித உரி­மைகள் மற்றும் பொறுப்­புக்­கூறல் போன்ற விட­யங்­களில் ஆர்வம் செலுத்­தாது, அர­சியல் நலன்­களை மையப்­ப­டுத்தி இலங்கை அர­சாங்கம் செயல்­ப­டு­கின்­ற­மையை அமெ­ரிக்கா ஒருபோதும் விரும்பாது.  

அடுத்­த­ப­டி­யான முக்­கிய காரணி, பூகோள அர­சி­ய­லுடன் தொடர்­பு­பட்ட விட­ய­மா­கவே உள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கு செல்­வ­தற்கு முன்னர் ஜி77 சீனத் தலை­வர்கள் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கியூ­பா­வுக்கு சென்­றி­ருந்தார். கியூபா மீது அமெ­ரிக்கா பல்­வேறு தடை­களை ஏற்­க­னவே விதித்­தி­ருந்த போதிலும், தனது ஆளு­மையை அமெ­ரிக்­கா­வுக்கு வெளிப்­ப­டுத்தும் வகையிலேயே  கியூபா ஜி77 மாநாட்டை நடத்­தி­யது.

ஆனால் அமெ­ரிக்­காவை பகைத்­துக்­கொள்ள விரும்­பாத சில நாடு­களின் தலை­வர்கள் ஜி77 மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக கியூபா செல்­வதை தவிர்த்­தி­ருந்­தனர்.

 கியூ­பா­வுக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான நெருக்­கத்தை அமெ­ரிக்கா பெரும்பாலும் விரும்­பு­வ­தில்லை. சீன உள­வா­ளி­க­ளுக்கு முகா­மிட கியூபா வாய்ப்­ப­ளிப்­ப­தாக கடந்த ஜூன் மாதம் அமெ­ரிக்கா விசேட அறிக்­கை மூலம்   குறிப்­பிட்­டி­ருந்­தது. இவ்­வாறு இரு­நா­டு­க­ளுக்கு இடை­யிலும் கடு­மை­யான மோதல்கள் காணப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜி77 சீனத் தலை­வர்கள் மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக கியூ­பா­வுக்கு சென்­றி­ருந்தார்.  எனவே இந்த விஜ­யமும் ரணில் –- பைடன் இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­றா­மைக்கு கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கின்­றது.

கியூபா செல்ல முன் பஷிலை சந்­தித்த ரணில்

இவ்­வாறு உலக வல்­ல­ர­சு­க­ளுக்கு இடை­யி­லான மோதல்­க­ளுக்குள் இலங்கை சிக்­கி­யுள்ள நிலையில் தேசிய அர­சி­ய­லிலும் முக்­கிய நகர்­வு­களை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கியூபா விஜ­யத்­திற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் நிழல் தலை­வ­ரான பஷில் ராஜ­ப­க் ஷவை அழைத்து ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

பொது­வா­கவே ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்­றதன் பின்னர் பல­ தடவைகள் பஷில் ராஜ­ப­க் ஷவுடன் கலந்­து­ரை­யா­டல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அவை அனைத்­துமே பஷில் ராஜ­ப­க் ஷவின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வை­யாகும்.

ஆனால் இம்­முறை ஜனா­தி­ப­தியின் அழைப்பின் பேரி­லேயே பசில் ராஜ­ப­க் ஷ கலந்­து­ரை­யா­ட­லுக்கு வருகை தந்­தி­ருந்தார். இரு­த­ரப்பு சந்­திப்பின் போது நடை­முறை அர­சியல் சார்ந்த விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக ஜனா­தி­ப­தி­யு­ட­னான இந்த சந்­திப்பின் போது ஆகஸ்ட் மாதத்தில் ஏற்­ப­டுத்­தப்பட்ட இணக்­கப்­பா­டுகள் குறித்தும் பஷில் ராஜ­ப­க் ஷ   கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

அதா­வது அமைச்­ச­ரவை மாற்றம் மற்றும் உத்­தேச தேர்­தல்கள் குறித்து வின­வி­யுள்ளார். அடுத்த வருடம் ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்ற தேர்­தல்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இதில் எந்த தேர்தல் முதலில் நடத்தப்படும் என்று பஷில் ராஜ­ப­க் ஷ கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். இவற்­றுக்கு உரி­யவாறு பதி­ல­ளிக்­காது பொது­வான விட­யங்­க­ளுக்கே ஜனா­தி­பதி பதி­ல­ளித்­துள்ளார்.

புதிய அமைச்­சர்கள் பட்­டியல்

 அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது அமைச்சு பத­விகள் வழங்க வேண்­டிய ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன உறுப்­பி­னர்­களின் பெயர்ப்பட்­டி­யல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்கப்பட்டிருந்த போதிலும் இன்­ற­ளவில் அதற்கு எந்­த­வொரு பதி­லும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை என்ற விட­யத்­தையும் பஷில் ராஜ­ப­க் ஷ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதனால் ஜனா­தி­ப­திக்கும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வி­ன­ருக்கும் இடை­யி­லான விரி­சல்கள் அதி­க­ரிக்க தொடங்­கி­யுள்­ள­தா­கவும் இதன் போது தெரி­விக்­கப்­பட்­டது.

இவற்­றுக்கு பதி­ல­ளித்­த ஜனா­தி­பதி, 13 பேருக்கு அமைச்சு பத­வி­களை வழங்க முடியும் என்று குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் அவற்றை யார் யாருக்கு வழங்­கு­வது என்­பது குறித்து தெளி­வாக எத­னையும் அவர் குறிப்­பி­ட­வில்லை.

தனித்து வேட்­பா­ளரை நிறுத்தத் திட்டம்

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் பின்னர் ஜனா­தி­பதி நாட்டில் இல்­லாத சந்­தர்ப்­பத்தில் பஷில் ராஜ­பக் ஷ பல்­வேறு சந்­திப்­பு­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். குறிப்­பாக பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் தெரி­வித்த முக்­கிய விட­யங்­களை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெளிப்­ப­டுத்­தி­ருந்தோம்.

அதே­போன்று பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில்  அமைந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முவின் அலு­வ­ல­கத்தில் ஆளும் கட்­சியின் உறுப்­பி­னர்­களை அழைத்து முக்­கிய கலந்­து­ரை­யா­டல்­களை பஷில் முன்­னெ­டுத்­தி­ருந்தார். இந்தக் கலந்­து­ரை­யா­டல்­களின் போது அடுத்து வரக்­கூ­டிய ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிப்­பதா அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ளரை கள­மி­றக்­கு­வதா என்­பது குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

நெலும் மாவத்தை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­களின் போது முதல் தட­வை­யாக பொது­ஜன பெர­முன சார்பில் தனித்து ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்­கு­வது குறித்து பஷில் ராஜ­ப­க் ஷ கருத்து தெரி­வித்­துள்ளார்.

பஷிலின் அவ­சர அழைப்பு

அர­சியல் ரீதியில் பல்­வேறு முக்­கிய நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரும் பஷில் ராஜ­ப­க் ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முக்­கி­யஸ்­தர்கள் சிலரை நெலும் மாவத்தை அலு­வ­ல­கத்­திற்கு கடந்த வியா­ழக்­கி­ழமை அழைத்­தி­ருந்தார்.

இந்த அழைப்பின் பிர­காரம் நாமல் ராஜ     ­ப­க் ஷ, கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, ரஞ்சித் பண்­டார, ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ, அருந்­திக பெர்­னாண்டோ, பியல் நிஷாந்த, இந்­திக அநு­ருத்த மற்றும் காமினி லொக்­குகே ஆகியோர் இந்தக் கலந்­து­ரை­யா­ட­லுக்கு சென்­றி­ருந்­தனர்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் மறு­சீ­ர­மைப்பை துரி­தப்­ப­டுத்த முன்­னெ­டுக்­கப்­படும் திட்­டங்­களில் தலை­மைத்­தாங்கி செயல்­ப­டு­மாறு பஷில் ராஜ­ப­க் ஷவிடம் இதன்­போது ஏனை­ய­வர்கள் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய அர­சியல் கூட்­டணி

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் அதி­ருப்தி குழு­வி­னரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய அர­சியல் கூட்­ட­ணியின் செயல்­பா­டுகள் மிகவும் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எதிர்­வரும் ஜன­வரி மாதத்தில் உத்­தேச புதிய அர­சியல் கூட்­ட­ணியின் கன்னி சம்­மே­ளனம் இடம்­பெ­ற­வுள்ள நிலையில், அதற்­கான ஒழுங்­கு­களை கூட்­ட­ணியின் செயல்­பாட்டு தலை­வ­ரான அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா  தலை­மை­யி­லான குழு முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் புதிய கூட்­ட­ணி­யுடன் பல தரப்­பையும் இணைக்கும் செயல்­பா­டு­களும் ராஜ­கி­ரிய அலு­வ­ல­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­தான கட்­சி­க­ளு­டனும் முக்­கிய பேச்சுவார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எதிர்­வரும் நாட்­களில் முக்­கிய தொழிற்­சங்­கங்கள் பல புதிய அர­சியல் கூட்­ட­ணிக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் ராஜ­கி­ரிய அலு­வ­லகத் தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.

அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பாவின் இல்­லத்தில் சந்­திப்பு

புதிய கூட்­ட­ணியின் செயல்­பாட்டு தலை­வ­ரான அநுர பிரி­ய­தர்­ஷன யாப்­பாவின் குளி­யாப்­பிட்­டிய  இல்­ல­த்தில் விசேட சந்­திப்பு ஒன்று சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. அமைச்சர் நளின் பெர்­னாண்டோ,  நிமல் லான்சா, முன்னாள் பிரதி அமைச்சர் தாரநாத் பஸ்­நா­யக, முன்னாள் முத­ல­மைச்சர் தர்­ம­சிறி தச­நா­யக்க, மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான நிலந்த ராஜ­ப­க் ஷ, சுமித் ராஜ­ப­க் ஷ, சந்­தன யாப்பா மற்றும் ரண­விரு ஹேரத் உள்­ளிட்ட பலரும் சந்திப்பில் கலந்­து­கொண்­டனர்.

ராஜ­கி­ரிய அலு­வ­ல­கத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் அதன் பிர­தா­னி­க­ளான சுகீஷ்­வர பண்­டார மற்றும் சிறி­பால அம­ர­சிங்க ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இந்தச் சந்­திப்பில் புதிய கூட்­ட­ணியின் எதிர்­கால செயல்­பா­டுகள் மற்றும் நடை­முறை அர­சியல் விவ­கா­ரங்கள் குறித்தும் கருத்­துக்கள் பகிரப்பட்டன.

புதிய கூட்­ட­ணியின் செயல்­பா­டுகள் தொடர்பில் கிரா­மிய மக்கள் மத்­தியில் நல்­ல­தொரு அபிப்­பி­ராயம் ஏற்­பட்­டுள்­ளது. ராஜ­ப­க் ஷர்­களின் அர­சி­யலை வெறுத்­த­வர்­க­ளுக்கு மாற்று இடம் ஒன்று இருக்கவில்லை. சஜித் பிரே­ம­தா­ச­வுடன் இணை­யவும் அவர்கள் விரும்­ப­வில்லை. எனவே இந்தக் கூட்­டணி சிறந்த ஆரம்­ப­மாக உள்­ளது என்று வடமேல் மாகா­ணத்தின் முன்னாள் முத­ல­மைச்சர் தர்­ம­சிறி தச­நா­யக்க இதன் போது குறிப்­பிட்டார்.

சிறந்த அர­சியல் தலை­மைத்­துவம் இன்­மையே பெரும்­பா­லா­ன­வர்­களின் பிரச்­சி­னை­யாக உள்­ளது. உத்­தேச புதிய அர­சியல் கூட்­டணி ஊடாக அந்தக் குறை நிவர்த்­திக்­கப்­ப­டு­கின்­றது என்று நிலந்த ராஜ­ப­க் ஷ கூற அனை­வரும் அதனை ஆமோ­தித்தனர்.

புதிய அர­சியல் கூட்­ட­ணியை எப்­ப­டி­யா­வது தடுத்து விட வேண்டும் என்ற நிலைப்­பா­ட்டுடன் பஷில் ராஜ­ப­க் ஷ ஓய்­வின்றி செயல்­ப­டு­கின்றார் என்று அநுர பிரி­ய­தர்­ஷன யாப்­பாவை நோக்கி முன்னாள் முத­ல­மைச்சர் தர்­ம­சிறி தச­நா­யக்க மீண்டும் கூறிய போது, அனை­வரும் புன்­ன­கைத்­தனர்.

புதிய கூட்­ட­ணியில் அநா­வ­சி­ய­மா­ன­வர்­களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்ற கோரிக்­கையை முன்­வைத்த சுமித் ராஜ­ப­க் ஷ,

பொது மக்கள் எம் மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை தொடர்ந்து பாது­காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நளின் பெர்­னாண்டோ, இல்லை. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மக்கள் வெறுக்­கின்ற, பிரச்­சி­னைக்கு உரி­ய­வர்­களை புதிய கூட்­ட­ணியில் இணைத்துக் கொள்ளப் போவ­தில்லை என்று கூறினார்.

எமது நிலைப்­பாட்டில் எவ்­வி­த­மான மாற்­றமும் இல்லை. ஆனால் அர­சியல் ரீதியில் எம்மை விமர்­சிப்­ப­வர்கள் நேருக்கு நேர் விவா­தத்­திற்கு வர விரும்­பு­வ­தில்லை என்று நிமல் லான்சா இதன் போது கூறினார்.

கலந்­து­ரை­யா­டலை வேறு திசைக்கு கொண்டு செல்லும் வகையில், எமது இந்த புதிய கூட்­டணி பஷில் ராஜ­ப­க் ஷவின் திட்­ட­மென்றும் பலரும் கூறு­கின்­றனர் என்று ரண­விரு ஹேரத் தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நளின் பெர்­னாண்டோ, அவ்­வா­றெனில் பஷில் ராஜ­ப­க் ஷ

ஏன் எமக்கு எதி­ரா­கவும் கூட்­ட­ணிக்கு எதி­ரா­க

வும் செயல்­பட வேண்டும். தனது விசு­வா­சி­களை கொண்டு புதிய கூட்­ட­ணிக்கு எதி­ராக விமர்­ச­னங்கள் செய்ய வேண்டும்? புதிய அர­சியல் கூட்­ட­ணி­யுடன் இணை­ப­வர்­களை தடுப்­பதே இவ்­வா­றான பிர­சா­ரங்­களின் நோக்கம் என்று சற்று கோபத்­துடன் கூறினார்.

பக­லு­ணவு வரை தொடர்ந்த  இந்த கலந்­து­ரை­யா­டலில் புதிய தொழிற்­சங்­கங்­களின் இணைவு குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து செயல்­பட்ட பல தொழிற்­சங்­கங்கள் புதிய கூட்­ட­ணி­யுடன் இணை­வ­தற்கு விருப்­பத்தை தெரி­வித்­துள்­ள­தாக நிமல் லான்சா கூறினார்.

ரணி­லுடன் நியூயோர்க் சென்­றி­ருந்த எம்.பி.க்கள்

ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக நியூயோர்க் சென்ற ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வில் அமைச்­சர்­க­ளுடன் எம்.பி.க்களும் சென்­றுள்­ளனர்.

பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்த முன்னாள் அமைச்­சர்­க­ளான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, ரோகித அபே­கு­ண­வர்­தன மற்றும் பிரேம்நாத் தொல­வத்த ஆகி­யோரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான வடிவேல் சுரேஷ், முஷாரப் ஆகி­யோரே ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் நியூயோர்க் சென்­றி­ருந்த எம்.பி.க்களாவர்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க உலகத் தலை­வர்கள் பலரை சந்­தித்த போது, அந்தச் சந்­திப்பில் இந்த எம்.பி.க்களும் பங்­கேற்­றி­ருந்­தனர். ஜனா­தி­பதி பங்­கேற்ற கூட்­டங்­க­ளிலும் இவர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இந்த விட­ய­மா­னது உள்­நாட்டில் எதிர்க்­கட்­சி­யினர் மத்­தியில் பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, பொது­ஜன பெர­மு­னவின் எம்.பி.க்களை ஜனா­தி­பதி நியூயோர்க் அழைத்துச் சென்­றமை தொடர்பில் கடும் விசனத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதேபோன்றே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரும் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற பொதுஜன பெரமுன எம்.பி.க்க ளை  ஜனாதிபதி இவ்வாறு அழைத்துச்சென்றமை மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல்

சுரேஷ் மற்றும் முஷாரப் ஆகியோர் அரசாங்க த்தை ஆதரித்து வருகின்றனர். அதற்கு பரிகார மாகவே நியூயோர்க் விஜயத்தில்  அவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப் படுகின்றது.

ஹக்கீம், பிள்ளையான் வாக்குவாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்

கடந்த 21, 22ஆம் திகதிகளில் பாராளுமன்ற த்தில் விசேட விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்துக்கு முன்னர் கடந்த செவ்வாய்க் கிழமை பாராளுமன்ற குழு அறையில் பொது

மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

தலைமையில் பாதுகாப்பு அமைப்பினரின் பங்கேற்புடன் இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தின்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம்  இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் தாக்குதல் குறித்து விளக்கிக் கூறிய போது, ஸஹ்ரானின் தம்பி ரில்வான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது ரவூப் ஹக்கீம் அவரைச் சென்று பார்வையிட்டிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியிருந்தார். இதனையடுத்தே  ஹக்கீமுக்கும் சந்திரகாந்தனுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54