ஒஸ்லோ உடன்படிக்கையும் மரணித்துவிட்டது

Published By: Vishnu

24 Sep, 2023 | 07:54 PM
image

லத்தீப் பாரூக்

ஒஸ்லோ உடன்­ப­டிக்கை ஒப்­ப­மி­டப்­பட்டு 30 ஆண்­டுகள் கழிந்­துள்ள நிலையில் இஸ்ரேல் அதன் அட்­ட­கா­சங்­களை இன்­னமும் தொட­ர்கின்றது. சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள், இணைப்­புக்கள், அட்­டூ­ழி­யங்­களும் சட்ட சீர்­கு­லை­வு­களும் என இவை தொட­ரு­கின்­றன. இதே­வேளை, பலஸ்­தீன மக்கள் சுதந்­தி­ரத்­துக்­கான தமது போராட்டம் உட்­பட எல்­லா­வற்­றையும் இழந்து நிற்­கின்­றனர்.

1993 செப்­டம்­பரில் பி.எல்.ஓ. என அழைக்­கப்­பட்ட பலஸ்­தீன விடு­தலை அமைப்பும் இஸ்­ரேலும் ஒஸ்லோ உடன்­ப­டிக்­கையில் ஒப்­ப­மிட்­டன. ஒஸ்­லோவை தலை­ந­க­ராகக் கொண்­டுள்ள நோர்வே, இஸ்­ரேலின் மிக நெருங்­கிய நட்பு நாடாகும். பலஸ்­தீன மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்து பி.எல்.ஓ.வும் இஸ்­ரேலும் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டன.

இது இடம்­பெற்று 30 ஆண்­டுகள் கழிந்­துள்ள நிலையில் டெய்லி ஜெரூ­ஸலம் போஸ்ட் என்ற இஸ்­ரே­லிய தின­சரி வெளி­யிட்­டுள்ள கருத்தில் 'ஒஸ்லோ உடன்­ப­டிக்கை மர­ணித்து விட்­டது. இனி பலஸ்­தீன நாடு என்ற பேச்­சுக்கே இட­மில்லை' என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரத்­தக்­க­றையில்; ஊறிப்­போன சியோ­னிஸ யூத வர­லாற்றில், கடந்த ஒரு நூற்­றாண்டு கால­மாக அவர்கள் குறிப்­பாக பலஸ்­தீன மக்கள் மீதும் பொது­வாக அர­பு­லகம் மீதும் புரிந்­துள்ள குற்­றங்­க­ளோடு ஒப்­பி­டு­கையில் இந்தக் கருத்­தா­னது எதிர்ப்­பார்க்­கப்­ப­டாத ஒரு விட­யமும் அல்ல.

1980களின் பின்­ப­கு­தியில் பலஸ்­தீன மக்­களின் இன்­தி­பாதா போராட்டம் (இஸ்­ரே­லுக்கு எதி­ரான மக்கள் எழுச்சி) வெடித்­ததை தொடர்ந்து தான் இந்த சமா­தான நாட­கமும் அரங்­கேறத் தொடங்­கி­யது. 1988இல் அன்­றைய பலஸ்­தீன விடு­தலை அமைப்பின் தலைவர் யஸிர் அரபாத் ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்ட 242 மற்றும் 338 தீர்­மா­னங்­களை ஏற்றுக் கொள்­வ­தாக அறி­வித்தார். 'இஸ்­ரேலின் எல்­லை­களை அங்­கீ­க­ரித்து அதனைப் பாது­காத்துக் கொள்ளும் உரி­மையை இஸ்­ரே­லுக்கு வழங்­கு­வதே' இந்தத் தீர்­மா­னங்­களின் சாராம்­ச­மாகும்.

ஆனால், அந்தக் காலப்­ப­கு­தி­யா­னது அமை­தி­யான ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வந்த பலஸ்­தீன மக்­களை இஸ்ரேல் மிகக் கொடூ­ர­மாக நசுக்கி வந்­ததால் உலகம் முழு­வதும் பெரும் கண்­ட­னத்­துக்கு ஆளா­கி­யி­ருந்த கால­மாகும். பலஸ்­தீ­னர்­க­ளுடன் சமா­தான பேச்­சுக்­களைத் தொடங்­கு­மாறு இஸ்­ரே­லுக்கு சர்­வ­தேச ரீதி­யாக பெரும் அழுத்­தங்கள் விடுக்­கப்­பட்­டதால் இஸ்ரேல், பலஸ்­தீன விடு­தலை அமைப்­புடன் 1993ல் நோர்­வேயின் தலை­நகர் ஒஸ்­லோவில் இர­க­சிய சமா­தான பேச்­சுக்­களைத் தொடங்­கி­யது.

அன்­றைய ஈராக்கின் அதிபர் சதாம் ஹுஸைன் குவைத் மீது ஆக்­கி­ர­மிப்பு நடத்­திய போது பிஎல்ஓ தலைவர் யஸிர் அரபாத், சதாம் ஹுஸைனின் நிலைப்­பாட்டை ஆத­ரித்தார். இதனால் குவைத்தில் அப்­போது பணி­யாற்றி வந்த சுமார் ஐந்து லட்சம் பலஸ்­தீன மக்கள் குவைத்தில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர்.

அதன் பிறகு இந்த விட­யத்தில் அமெ­ரிக்கா தலை­யிட்­டதால் சதாம் ஹுஸைன் தோல்­வியைத் தழு­வினார். இதனைத் தொடர்ந்து பலஸ்­தீன விடு­தலை அமைப்பும் பல­வீனம் அடைந்­தது. அதனால் அர­பாத்தின் நிலையும் பல­வீனம் அடைந்­தது. இவ்­வாறு செல்­வாக்கு இழந்த ஒரு நிலை­யி­லேயே அரபாத் இஸ்­ரே­லுடன் இர­க­சிய சமா­தான பேச்­சுக்­களில் கலந்து கொண்டார்.

இதனால் இந்த உடன்­ப­டிக்­கையின் போது மிகவும் பலம் பொருந்­திய சக்­தி­யாக இருந்த இஸ்­ரேலின் கரங்­களே ஓங்கி இருந்­தன. அதனால் இந்த உடன்­ப­டிக்கை மூலம் ஒட்டு மொத்த பலஸ்­தீ­னத்­துக்கும் விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டது என்றே குறிப்­பிட வேண்டும்.

நோர்­வேயின் வர­லாற்­றி­ய­லாளர் ஹைட் ஹென்­றிக்ஸன் வேஜ் இது பற்றி தெரி­விக்­கையில் பாது­காப்பு, அக­திகள் திரும்பிச் செல்லல், ஜெரூ­ஸலம், எல்­லைகள் என எல்­லாமே பிர­தான கலந்­து­ரை­யா­டலில் இருந்து அகற்­றப்­பட்­டி­ருந்­தன என்று குறிப்­பிட்­டுள்ளார்.

பலஸ்­தீன புத்­தி­ஜீவி முஸ்­தபா பர்­கொதி இது­பற்றிக் கூறு­கையில் 'இஸ்­ரே­லிடம் அன்­றி­ருந்த மிகப் பெரிய திட்டம் ஒஸ்­லோ­வாகத் தான் இருந்­தது. அது இழப்­புக்கள் பற்­றிய எந்தக் கரி­ச­னையும் இன்றி தொடர்ந்து ஆக்­கி­ர­மிப்­புக்கு வழி­ய­மைத்­தது. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­கரைப் பகு­தியில் ஒட்டு மொத்­த­மாக இஸ்­ரேலின் கரங்­களை அது ஓங்க வைத்­தது. இதனால் பலஸ்­தீ­னர்கள் தொடர்ந்து குடிநீர் தட்­டுப்­பாட்­டையும் எதிர்­கொள்ள வேண்டி உள்­ளது' என்று தெரி­வித்­துள்ளார்.

அன்­றைய இஸ்ரேல் பிர­தமர் இட்ஷாக் ராபின், பி.எல்.ஓ. தலைவர் யஸிர் அரபாத் ஆகிய இரு­வரும் வொஷிங்­டனின் வெள்ளை மாளி­கையில் அதி­தி­களின் ஆர­வாரக் கை தட்­ட­லோடு கை குலுக்கி கொண்­டனர்.

இந்த உடன்­ப­டிக்கை பிர­காரம், காஸா பள்­ளத்­தாக்கில் இருந்தும் மேற்குக் கரை பிர­தே­சத்தில் இருந்தும் 1994 ஏப்­ரலில் இஸ்ரேல் தனது படை­களை வாபஸ் வாங்க இணங்­கி­யது. பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஏதோ ஒரு வகை­யி­லான சுயாட்சி அரசை நிறுவிக் கொள்ளும் வகையில் இந்தப் பகு­தி­களில் தேர்தல் நடத்­தவும் இணக்கம் ஏற்­பட்­டது.

எவ்­வா­றா­யினும் இஸ்ரேல் இன்று வரை இந்த உடன்­ப­டிக்­கையை 1967ல் தான் ஆக்­கி­ர­மித்த பகு­தி­களில் தனது சட்­ட­வி­ரோத விரி­வாக்­கத்­தையும், குடி­யேற்றத் திட்­டங்­களை அமுல் செய்­ய­வுமே பயன்­ப­டுத்தி வரு­கின்­றது. இஸ்­ரே­லுக்கு தேவை­யா­னது எல்லாம் இதன் மூலம் கிடைத்­தது. மறு­புறம் பலஸ்­தீனம் இருந்­ததை எல்லாம் இழந்­தது.

 இந்த உடன்­ப­டிக்கை குறைந்த பட்சம் ஐந்து வருட இடைக்­காலப் பகு­திக்கு அமுலில் இருக்கும் என எதிர்ப்­பார்க்­கப்­பட்­டது. இதற்­கி­டையில் 1996 மே மாதம் அளவில் நிரந்­தர உடன்­ப­டிக்­கைக்­கான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­றலாம் எனவும், எஞ்­சி­யுள்ள பிரச்­சி­னை­க­ளான ஜெரூ­ஸலேம் விடயம், பலஸ்­தீன அக­திகள் பிரச்­சினை, இஸ்ரேல் குடி­யி­ருப்­புக்கள், பாது­காப்பு மற்றும் எல்­லைகள் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த நிரந்­தர பேச்­சுக்கள் அமையும் எனவும் எதிர்ப்­பார்க்­கப்பட்­டது.

பலஸ்­தீன அமைச்சர் யஸிர் அப்த றப்பூ இது­பற்றிக் குறிப்­பி­டு­கையில் 'எதை செய்­யு­மாறு நாங்கள் வேண்­டப்­பட்­டோமோ அதை நாங்கள் செய்தோம். அது பரஸ்­பர அங்­கீ­கா­ரமும் பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­மாகும். எமது வாக்­கு­று­தி­களை நாம் பாது­காத்­துள்ளோம். ஆனால், இஸ்ரேல் அவ்­வாறு நடந்து கொள்­ள­வில்லை' என்று தெரி­வித்­துள்ளார்.

உண்­மையில் அர­பாத்தின் தலை­மையின் கீழ் பி.எல்.ஓ. ஒரு தனி­நபர் அமைப்­பா­கவே அன்­றி­ருந்­தது. ஊழலும் உறவு முறை­களும் தான் அங்கு மலிந்து காணப்­பட்­டன. பலஸ்­தீ­னத்தில் ஊழலின் ஞானத் தந்­தை­யாக பார்க்­கப்­பட்­ட­வர்தான் அரபாத். அவர் தனது குடும்­பத்­த­வர்­க­ளையும் நண்­பர்­க­ளையும் கொண்ட 11 பேர் அடங்­கிய அர­சியல் ஆலோ­சனை சபையை ஏற்­ப­டுத்­தினார். மக்கள் சேவைக்­காக அமர்த்­தப்­பட்ட அவர்­க­ளுக்கு அபி­ரி­மி­த­மான சம்­ப­ளங்கள் வழங்­கப்­பட்­டன. உண்­மை­யான பலஸ்­தீன சுதந்­திரப் போரா­ளி­க­ளுக்கு பெரும் ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

இந்த விட­யத்தில் அரபாத் தனது இஸ்ரேல் மற்றும் அர­பு­லக சர்­வா­தி­கார சகாக்­க­ளுக்கு ஈடா­ன­வ­ராக காணப்­பட்டார்.

இந்த வெட்­கக்­கே­டான மர­பு­களை பேணிக் கொண்டு தான் பலஸ்­தீன அதி­கார சபையும் கூட மிக விரை­வாக ஊழ­லையும் உற­வு­முறை கலா­சா­ரத்­தையும் தழுவிக் கொண்­டது.

சவ்ஸான் றமாஹி எனும் இணைய சேவை வெளி­யிட்­டுள்ள விரி­வான அறிக்­கையில் பலஸ்­தீன மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக வழங்­கப்­பட்ட பணம் எவ்­வாறு சூறை­யா­டப்­பட்­டது என்ற விரி­வான வெட்கக் கேடான தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன. பலஸ்­தீன அதி­கார சபைக்குள் ஊழல் என்­பது தீவி­ர­மாகப் பரவி உள்­ளது. அது பலஸ்­தீன சமூ­கத்தின் எல்லா பிரி­வு­க­ளுக்­குள்ளும் ஊடு­றுவி உள்­ளது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றியம் தயா­ரித்த ஓர் அறிக்­கையில் பலஸ்­தீன அதி­கார சபையின் நிதி மோச­டிகள் கார­ண­மாக அவர்­க­ளுக்கு கிடைத்த உத­வி­களில் சுமார் இரண்டு பில்­லியன் யூரோ காணாமல் போயுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2008 க்கும் 2012க்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் மேற்கு கரை மற்றும் காஸா பகு­தி­க­ளுக்கு அனுப்­பப்ட்ட உதவித் தொகையே இவ்­வாறு காணாமல் போயுள்­ளது. பலஸ்­தீ­னர்­க­ளுக்­கான ஒரு நாட்டை உரு­வாக்க அனுப்­பப்­பட்ட இந்தப் பணம் தனி­ந­பர்­களின் சுவிஸ் வங்கிக் கணக்கு மீதி­க­ளாகக் காணப்­பட்­டது. அண்­டைய நாடு­களில் தனியார் திட்­டங்­க­ளிலும் இஸ்­ரே­லிய கம்­ப­னி­க­ளிலும் அவை முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளன.

பலஸ்­தீன அதி­கார சபை மற்றும் அல்­பத்தாஹ் இயக்கம் என்­ப­ன­வற்றின் சிரேஷ்ட அதி­கா­ரி­களைக் கொண்ட ஒரு குழு­வாக இந்த ஊழல் வட்டம் அமைந்­துள்­ளது. பலஸ்­தீன அதி­கார சபையின் தலைவர் அப்­பா­ஸுக்கு நெருக்­க­மா­ன­வர்­களும் இன்னும் பல சிரேஷ்ட தலை­வர்­களும் இந்த வட்­டத்­துக்குள் அடங்­குவர். இவர்­களின் ஊழல், இலஞ்சம், கடத்தல், திருட்டு என பல மோச­டிகள் இது­வரை அம்­ப­ல­மாகி உள்­ளன.

இந்த நிலை­மையை பயன்­ப­டுத்தி பலஸ்­தீ­னத்தின் உண்­மை­யான சுதந்­திர போரா­ளி­களை நசுக்கும் இலக்­கையும் இஸ்ரேல் பலஸ்­தீன அதி­கார சபை­யிடம் ஒப்­ப­டைத்­தது. பலஸ்­தீன அதி­கார சபை இஸ்­ரே­லுக்கு பதி­லாக தனது காட்­டு­மி­ராண்டித் தனத்தை தனது சொந்த மக்கள் மீதே கட்­ட­விழ்த்­து­விட்­டது. பார­பட்­ச­மான கைதுகள், நீண்ட கால தடுத்து வைப்­புக்கள், சித்­தி­ர­வ­தைகள், கொலைகள் என பலஸ்­தீன அதி­கார சபையின் அட்­டூ­ழி­யங்கள் தொடர்ந்­தன.

அவர்­க­ளது சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பலர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இன்னும் பலர் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளனர். தமது சகா இஸ்­ரே­லுக்­காக ஈவு இரக்­க­மின்றி அவர்கள் இந்தக் காரி­யங்­களில் ஈடு­பட்­டனர். முஹ்மூத் அப்­பாஸும் அவ­ரது பலஸ்­தீன அதி­கார சபையும் தமது இஸ்­ரே­லிய சகாக்­க­ளுடன் குற்­றங்­களில் கைகோர்த்­தனர். உண்­மை­யான பலஸ்­தீன சுதந்­திர போரா­ளி­களை நசுக்கி கொன்று குவித்து அதில் அவர்கள் இலாபம் ஈட்­டினர்.

இதனால் பலஸ்­தீன மக்கள் இஸ்­ரேலின் பிடியில் இருந்து தங்­களை விடு­விப்­ப­தற்கு பதி­லாக பலஸ்­தீன அதி­கார சபையின் அடக்­கு­மு­றையில் இருந்து தங்­களை விடு­வித்துக் கொள்ள வேண்­டிய துர­திஷ்­ட­வ­ச­மான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த கொடிய நிலைமைகளின் விளைவாக பலஸ்தீன மக்கள் எல்லாவற்றையும் இழந்தனர். அரபுலக கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியாளர்கள் உட்பட முழு உலகமும் அவர்களைக் கைவிட்டது. இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்திலும் வாழும் உரிமைக் குரலை இழந்த மக்கள் வேறு வழியின்றி மௌனமானர்கள் அல்லது மௌனமாக்கப்பட்டனர்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபுலக சர்வாதிகாரிகளின் கண்மூடித்தனமான ஆதரவுடன் நடத்தப்படும் இஸ்ரேலிய கொடுங்கோல் ஆட்சிக்குள் சிக்குண்ட பலஸ்தீன மக்கள் தங்களது சுதந்திரத்துக்காக, உரிமைகளுக்காக, சுயமரியாதைக்காக, சொத்துக்களுக்காக அன்றாடம் உயிரைக் கொடுத்து தனித்து நின்று போராடும் நிலைக்கு வந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54