இந்­திய - கனே­டிய இரா­ஜ­தந்­திர முறுகல் நிலை : படு­கொலை குற்­றச்­சாட்டு ஏற்­ப­டுத்­திய எதிர்­வி­னைகள்

Published By: Vishnu

24 Sep, 2023 | 03:36 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

உலக இரா­ஜ­தந்­தி­ரத்­திற்கு ஒன்­று­கூ­டல்கள் முக்­கி­ய­மா­னவை. ஒன்­று­கூ­டல்­களில் அர­சியல் பேசு­வார்கள். அது கூட்­டணி அர­சி­ய­லா­கவும் இருக்கும். இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உற­வுகள் பற்­றிய அர­சி­ய­லா­கவும் இருக்­கலாம்.

ஒன்­று­கூ­டல்கள் உலக அர­சியல் போக்­கு­களை பிர­தி­ப­லிக்கும். சமீ­பத்தில் நடந்த ஜீ-20 உச்­சி­மா­நாட்டைப் போல.

இங்கு உலக நாடு­களின் தலை­வர்கள் இந்­தியப் பிர­த­ம­ருடன் கைகு­லுக்­கி­னார்கள். உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பேசி­னார்கள். இதனை கனே­டிய பிர­தமர் மாத்­திரம் தவிர்த்தார்.

மாநாட்டு மண்­ட­பத்­திற்கு வெளியே நரேந்­திர மோடி, கன­டா­வையும், ஜஸ்டின் ட்ரூடோ, இந்­தி­யா­வையும் பரஸ்­பரம் குற்றம் சுமத்­தி­னார்கள். சற்று பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுக்கள்.

இந்­தி­யாவும், கன­டாவும் நட்பு நாடுகள் தான். பெரு­ம­ளவு இந்­தி­யர்கள் கன­டாவில் வசிப்­ப­தாலும், இரு நாடு­க­ளுக்கும் இடையில் அதிக வர்த்­தகம் நடை­பெ­று­வ­தாலும் உற­வுகள் நன்­றா­கவே இருந்­தன.

கடந்த கால­மாக படிப்­ப­டி­யான மாற்றம். இப்­போது இரு­த­ரப்பு உறவு ஆகவும் இறுக்­க­மான நிலையை எட்­டி­யுள்­ளன.

இதற்குப் பிர­தான காரணம், கன­டாவில் சீக்­கிய சமு­தாயம் பற்­றிய பிரச்­சினை.

சீக்­கிய பிரி­வினை இயக்­கத்­திற்கு கனடா துணை போகி­றது என்­பது இந்­தி­யாவின் குற்­றச்­சாட்டு. பதி­லுக்கு, புலம்­பெ­யர்ந்த சீக்­கி­யர்கள் விவ­கா­ரத்தில் இந்­தியா அனா­வ­சி­ய­மாக மூக்கை நுழைக்­கி­றது என கனடா குற்றம் சாட்­டு­கி­றது.

இத்­த­கைய பின்­ன­ணியில், கனே­டிய பிர­தமர் தமது பாரா­ளு­மன்­றத்தில் அர­சியல் குண்டைத் தூக்கிப் போட்டார்.

இது கன­டாவில் வாழும் சீக்­கிய பிரி­வினை இயக்­கத்தின் முக்­கிய தலை­வர்­களுள் ஒரு­வ­ரான ஹர்தீப் சிங் நிஜ்­ஜாரின் படு­கொலை பற்­றிய குற்­றச்­சாட்டு.

கடந்த ஜூன் மாத நடுப்­ப­கு­தியில் கனே­டிய மண்ணில் நிஜ்ஜார் முக­மூ­டி­ய­ணிந்த ஆயு­த­பா­ணிகள் இரு­வரால் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்தார்.

படு­கொ­லையில் இந்­திய அர­சாங்கம் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிடும் வலு­வான ஆதா­ரங்கள் பற்றி ட்ரூடோ குறிப்­பிட்டார். இந்த ஆதா­ரங்கள் பற்றி கனே­டிய புல­னாய்வு அமைப்­புக்கள் விசா­ரிப்­ப­தா­கவும் அவர் கூறினார். கனே­டிய மண்ணில் நிகழ்ந்த படு­கொ­லைக்கு இந்­திய அரசு கார­ண­மாக இருக்­கலாம் என்ற குற்­றச்­சாட்டு போன்­ற­தொரு கருத்து. இது ராஜ­தந்­திர அரங்கில் பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இதனைத் தொடர்ந்து, கன­டாவில் வேலை செய்யும் சிரேஷ்ட இந்­திய இரா­ஜ­தந்­திரி ஒருவர் வெளி­யேற்­றப்­பட்டார். இந்­தி­யாவும் பதி­லுக்கு கனே­டிய இரா­ஜ­தந்­திரி ஒரு­வரை வெளி­யேற்றியதுடன், ட்ரூடோவின் கருத்­துக்கு மறுப்பு அறிக்கை விடுத்­தது.

இது நீண்­ட­கா­ல­மாக குமுறிக் கொண்­டி­ருந்த பிரச்­சினை. இன்று எரி­ம­லை­யாக வெடித்துச் சித­றி­யி­ருக்­கி­றது என்­பது தான் உண்மை.

கன­டாவில் சீக்­கிய சமூ­கத்தின் செயற்­பா­டுகள் தீவிரம் பெற்று வரு­கின்­றமை இந்­தி­யா­வுக்கு பிடிக்­க­வில்லை. இதனைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இந்­திய அரசு அழுத்தம் கொடுத்து வந்­தது.

இந்­தி­யாவின் அழுத்­தங்­களை கனடா பொருட்­ப­டுத்­த­வில்லை. இந்­தி­யாவின் கவலை தீர்க்க பதில் நட­வ­டிக்கை எடுக்­கவும் இல்லை. இது தான் பிரச்­சி­னை­யாக இருந்­தது.

இந்­தி­யாவில் இருந்து புலம்­பெ­யர்ந்து சென்ற சீக்­கி­யர்கள் உலகின் பல நாடு­களில் வாழ்­கி­றார்கள். இவர்­களில் கன­டாவில் வாழ்­ப­வர்­களின் எண்­ணிக்கை அதிகம். இது ஏழரை இலட்­சத்தைத் தாண்­டு­கி­றது. கனே­டிய சனத்­தொ­கையில் இரண்டு சத­வீ­தத்தைத் தாண்­டிய எண்­ணிக்கை.

இந்த சீக்­கி­யர்கள் மத்­தியில் தனி­நாட்டுக் கோரிக்கை உண்டு. தாம் அடைய விரும்பும் தேசத்­திற்கு சீக்­கி­யர்கள் சூட்­டிய பெயர் காலிஸ்தான் என்­ப­தாகும்.

கனே­டிய சீக்­கி­யர்கள் மத்­தியில் காலிஸ்தான் இயக்கம் வலு­வாக வேரூன்­றி­யி­ருக்­கி­றது. இதனை இந்­தியா பிரி­வி­னை­வா­த­மாகக் கரு­து­கி­றது.

அதேபோல், காலிஸ்தான் இயக்­கத்தைச் சேர்ந்த கனே­டிய சீக்­கி­யர்கள் இந்­தி­யாவை பகை­யா­ளி­யாக கரு­து­கி­றார்கள்.

காலிஸ்தான் இயக்கம் எவ்­வ­ளவு வலு­வா­ன­தென்றால், இவர்கள் இந்­தி­யாவில் சீக்­கி­யர்­களின் விடு­த­லையை தொனிப்­பொ­ரு­ளாகக் கொண்ட கருத்துக் கணிப்­பையும் கன­டாவில் நடத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

காலிஸ்தான் இயக்­கத்தின் கடும்­போக்­கா­ளர்கள் சிலர் கடந்த ஆண்டு கன­டாவில் உள்ள இந்துக் கோயிலைத் தாக்கி, 'இந்­தியா ஒழிக' என்று எழு­தியும் இருக்­கி­றார்கள்.

கனே­டிய மண்ணில் பன்­மு­கத்­தன்­மையை ஆத­ரிப்­ப­வ­ராக தம்மைச் சித்­த­ரித்துக் கொள்­வதில் ட்ருடோ­விற்கு ஆர்வம் அதிகம். அது அவ­ரது அர­சி­யலின் பிர­தான பிர­சார வாச­க­மா­கவும் இருந்­தது.

2015இல் தேர்­தலில் வெற்றி பெற்று பிர­த­ம­ராகத் தெரி­வாகி அமைத்த முதல் அமைச்­ச­ர­வையில் நான்கு சீக்­கி­யர்கள் இடம்­பெற்­றார்கள். அதுவும் முக்­கி­ய­மான பத­வி­களை வகிக்கும் அமைச்­சர்­க­ளாக.

இன்­னொரு விஷ­யமும் உண்டு. 2018இல் ட்ரூடோ இந்­தியா சென்­ற­போது, அவ­ரது குழுவில் ஜஸ்பால் அத்வால் என்ற சீக்­கி­யரும் இருந்தார்.

இது இந்­தி­யாவை ஆத்­தி­ரப்­ப­டுத்­தி­யது. ஏனெனில், இந்­திய அமைச்சர் ஒரு­வரை படு­கொலை செய்ய முனைந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில், குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­ட­வரே இந்த ஜஸ்பால் அத்வால்.

இவை பார­தூ­ர­மான விட­யங்கள் தான். ஆனாலும், சீனாவை ஓரங்­கட்ட வேண்டும் என்­ப­தற்­காக, இந்­தி­யாவும் கன­டாவும் கருத்து முரண்­பா­டு­களைக் கிடப்பில் போட்­டன. வர்­த­தகம் செய்­தன.

கன­டாவைப் பொறுத்­த­வ­ரையில், இந்­தோ-­ப­சுபிக் பிராந்­தி­யத்தில் இந்­தி­யாவை முக்­கி­ய­மான பங்­கா­ள­ராக பார்த்­தது. இதற்கு இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி ஒரு காரணம். பூகோள ரீதியில் இந்­தி­யாவின் முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்து வரு­வது மற்­றொரு காரணம்.

குறை மறந்து, அல்­லது மறைத்து, இரு­த­ரப்பு உற­வு­களை முன்­னேற்ற கனடா முயன்­ற­போது, ஜூன் மாத முற்­ப­கு­தியில் இந்­திய வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர் சற்று கார­சா­ர­மாக பேசினார்.

ஜூன் 4ஆம் திகதி ஒன்­டா­ரியோ நகரில் காலிஸ்தான் தாயகக் கோரிக்­கை­யுடன் சிலர் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­னார்கள். இந்த ஆர்ப்­பாட்­டத்தின் வீடியோ காட்சி சமூக ஊட­கங்­களில் வைரல் ஆனது.

இது பற்றி விமர்­சித்த ஜெய்­சங்கர், சீக்­கிய பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு கனடா வாய்ப்­ப­ளிப்­பது இரு­த­ரப்பு உற­வு­க­ளுக்கு நல்­ல­தல்ல என்றார். கனே­டிய அர­சி­யல்­வா­திகள் சீக்­கிய வாக்­கு­க­ளுக்­கா­கவே இதனைச் செய்­கி­றார்கள் என்ற தொனியில் பேசினார்.

இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு பத்து நாட்­க­ளுக்கு பின்­னரே, சீக்­கிய ஆல­யத்­திற்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்­ஜாரின் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

இந்த சம்­பவம் பற்­றிய விசா­ர­ணையின் நீட்­சி­யாக, இம்­மாத முற்­ப­கு­தியில் இந்­தி­யா­வுடன் வர்த்­தக உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்தை ட்ரூடொவ் இடை நிறுத்­தி­யி­ருந்தார்.

ட்ரூடோ சடு­தி­யாக தீர்­மானம் செய்­த­தாகத் தெரி­ய­வில்லை. மாறாக, புல­னாய்வுத் தக­வல்­களைப் பரி­மாறிக் கொள்ளும் ஐந்து நாடு­க­ளுடன் இர­க­சிய பேச்­சு­வார்த்தை நடத்­திய பின்­னரே, இந்­தி­யாவை பகி­ரங்­க­மாக குற்றம் சுமத்­தி­யி­ருக்­கிறார்.

ஆனால், ட்ரூடோவைத் தவிர வேறெந்த நாடும் இந்தியாவிற்கு எதிராக வாய் திறக்கவில்லை என்பதும் முக்கியமானது.

அமெரிக்கா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், இந்த விடயத்தில் எப்படிப் பேசினாலும் இந்தியாவை அல்லது கனடாவை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

மறுபுறத்தில் பார்த்தால், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு சவால் விடுக்கக்கூடிய சக்தியாகத் திகழும் இந்தியாவை பகைத்துக் கொள்வதையும் அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்பமாட்டா.

இப்போதுள்ள மோசமான நிலையில் இருந்து உறவுகளை மீளவும் சுமுகமாக்கிக் கொள்ளக் கூடிய நிலைக்கு இந்தியாவும், கனடாவும் தாமாகவே நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய நிலைக்கு தள்ளப்படக்கூடும்.

இருந்தபோதிலும், உறவுகள் பழைய நிலைக்குத் திரும்ப சற்று காலம் எடுக்கலாம் என்றே தோன்றுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38