நினைவேந்தல்  நிகழ்வுகளுக்கு; பொதுக்கட்டமைப்பு அவசியம்

Published By: Vishnu

24 Sep, 2023 | 03:36 PM
image

திலீ­பனின்  நினைவு ஊர்தி மீது திரு­கோ­ண­ம­லையில்  நடத்­தப்­பட்ட தாக்­குதல்  தொடர்­பிலும்  அந்த  ஊர்­தி­யுடன் பய­ணித்த  தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செய­லா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வ­ராஜா கஜேந்­திரன் மீதான கொலை­வெறி தாக்­குதல் குறித்தும்  பெரும் கண்­டங்கள்  தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.  உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும்  பல்­வேறு தரப்­பி­னரும்  இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில்  தமது  விச­னத்­தினை  தெரி­வித்­தி­ருந்­தனர்.

தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் ஆறுபேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன்  விசா­ர­ணைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தியா­க ­தீபம் திலீ­பனின் நினை­வேந்­தலை முன்­னிட்டு பொத்­து­விலில் இருந்து  யாழ்ப்­பாணம் வரையில்   அவ­ரது  உரு­வப்­ப­டத்தை  தாங்­கிய   நினைவு ஊர்தி  பவனி மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் ஏற்­பாட்டில்   நடை­பெற்ற இந்த ஊர்தி  பவனி மீது   திரு­கோ­ண­ம­லையில் வைத்து  குழு­வொன்­றினால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த ஊர்தி பய­ணத்­தின்­போது  அக்­க­றைப்­பற்று வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பா­கவும் ஒரு குழு­வி­னரால் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டமும் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இத­னை­விட   மற்­று­மொரு பகு­தியில் இந்த   ஊர்தி மீது தாக்­குதல் நடத்த முயற்­சிக்­கப்­பட்­ட­தா­கவும்   குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன.  தியா­க­தீபம் திலீ­பனின் நினை­வேந்தல் நிகழ்­வுகள்  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பல்­வேறு பகு­தி­க­ளிலும்   கடந்த 15ஆம் திகதி ஆரம்­ப­மாகி இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆனாலும்  பொத்­து­விலில் இருந்து யாழ்ப்­பாணம் வரையில் நினைவு ஊர்தி பயணம்   மேற்­கொண்­டதன் விளை­வா­கவே இத்­த­கைய தாக்­குதல் சம்­ப­வங்­களும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களும்  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இத்­த­கைய   ஊர்தி பவ­னியை  தவிர்த்­தி­ருக்­கலாம் என்றும்   கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த விடயம் தொடர்பில்  கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்­டமான்  தெரி­வித்த  கருத்­துக்கள்   இதனை ஒத்­த­தா­கவே  காணப்­ப­டு­கின்­றன. பொலி­ஸா­ரிடம் அனு­மதி பெறாமல் திலீ­பனின் நினைவு ஊர்தி  சிங்­கள கிரா­மங்கள்  வழி­யாக பய­ணித்­தது  தவ­றான செயற்­பாடு என்றும் இத்­த­கைய செயற்­பா­டுகளை  தவிர்த்­துக்­கொள்ள வேண்டும் எனவும் அவர்  கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து  தெரி­விக்­கையில், கஜேந்­திரன் ஒரு பொறுப்­பு­வாய்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர். மாவட்டம் விட்டு  இன்னொரு மாவட்டத்திற்கு     ஊர்­தியை கொண்டு வரும் போது  பொலி­ஸாரின் அனு­ம­தியை பெற்று வந்­தி­ருக்­க­வேண்டும்.  இன்­றைய சூழ்­நி­லையில் திலீ­பனின் ஊர்­தியை சிங்­கள  கிரா­மங்­களின் ஊடாக கொண்டு வர முற்­பட்ட போது  உரிய அனு­மதி  பெறப்­ப­ட­வில்லை.  இதன் கார­ண­மா­கவே  இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த சம்­பவம்  சம்பந்தப்பட்ட மாவட்­டத்தில் மட்­டு­மல்ல  இலங்கை பூரா­கவும் இனக்­க­ல­வ­ரத்­தை­ஏற்­ப­டுத்தும் நிலை­மையை  உரு­வாக்­கி­யி­ருக்கும். இது தவிர்க்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும் என  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

திலீ­பனின் நினைவு ஊர்தி மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­துடன்  செல்­வ­ராஜா கஜேந்­திரன் எம்.பி. மீதும் கொலை­வெ­றித்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.   இந்த தாக்­கு­தலில்  உயி­ரி­ழப்­புக்கள்   ஏற்­பட்­டி­ருந்தால்  அது பெரும்  இன­மு­று­கலை  ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.  இவ்­வா­றான   ஆபத்­தான   செயற்­பா­டுகள்  தவிர்க்­கப்­பட வேண்டும் என்ற   தொனிப்­ப­டவே   கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்­ட­மானின் இந்த கருத்து அமைந்­தி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள்  மற்றும்  போராட்ட வர­லாற்றில்  உயிர்­நீத்­த­வர்கள் போன்­றோரை நினை­வு­கூ­ர­வேண்­டி­யது  அவ­சி­ய­மா­ன­தாகும். அவ்­வாறு நினைவு கூர்­வ­தென்­பது  மக்­களின் அடிப்­படை உரி­மை­யாகும். இறுதி யுத்­தத்­தின்­போது  முள்­ளி­வாய்க்­காலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டனர். அவ்­வாறு  கொன்று குவிக்­கப்­பட்ட மக்­களை  மே மாதம் 18ஆம் திகதி  முள்­ளி­வாய்க்கால்   நினை­வேந்­தலை அனுஷ்­டிப்­பதன் மூலம் தமிழ் மக்கள் நினை­வு­கூர்ந்து வரு­கின்­றனர்.  

இதே­போன்றே தியா­க­தீபம்  திலீ­பனின் நினை­வேந்தல் ,அன்னை பூப­தியின் நினை­வேந்தல், மற்றும்  மாவீரர்  வார  நினை­வேந்தல்  என்­பன வரு­டம்­தோறும் மக்­களால்  நினை­வு­கூ­ரப்­பட்டு வரு­கின்­றன .  இவ்­வா­றான நினை­வேந்­தல்கள்  உரி­ய­வ­கையில்   அர­சியல் மயப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில்  பொதுக்­கட்­ட­மைப்பின் அடிப்­ப­டையில்  மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம்   தொடர்ச்­சி­யாக   வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை  நினை­வேந்தல் செய்­வ­தற்கு கூட முடி­யாத நிலைமை நீடித்து வந்­தது. அன்­றைய ஜனாதிபதி மஹிந்த ராஜ­   பக் ஷ  தலை­மை­யி­லான அர­சாங்கம் இதற்கு  அனு­மதி வழங்­க­வில்லை. யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்­களை நினை­வு­கூர்­வ­தற்­காக  முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லைக்­கூட  நடத்­து­வ­தற்கு  அனு­ம­திக்­காத  அர­சாங்கம்   தியாக தீபம்  திலீ­பனின்  நினை­வேந்­த­லையோ, மாவீரர் வார நினை­வேந்­த­லையோ மேற்­கொள்­வ­தற்கு  அனு­ம­திக்கும் என்று  யாருமே எதிர்­பார்க்க முடி­யாது.

இவ்­வா­றான அடக்­கு­மு­றை­யான   நிலைமை  அன்­றைய ஆட்­சிக்­கா­லத்தில் நீடித்­தி­ருந்­தது. உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு ­கூர அனு­மதி வழங்­கப்­பட வேண்டும் என்றும்  அது அந்த  மக்­களின் அடிப்­படை உரிமையாகும் எனவும் சர்­வ­தேச  சமூகம் வலி­யு­றுத்­தி ­வந்­தது. ஐ.நா. மனித உரிமை பேர­வை­யிலும் இந்த விடயம்  வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனால்   அன்­றைய அர­சாங்­க­மா­னது அதற்­கெல்லாம்  செவி­சாய்க்­க­வில்லை.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி  அர­சாங்கம்  பத­வி­யேற்­ற­தை­ய­டுத்தே  மே மாதம் 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்கால்  நினை­வேந்­தலை மேற்­கொள்­வ­தற்­கான சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.  முள்­ளி­வாய்க்கால் நினை­வு­முற்­றத்தில் மக்கள் ஒன்­று­கூடி தமது உற­வு­களை நினை­வேந்தல்  செய்து வந்­தனர்.  இந்த ஆட்­சி­கா­லத்தில் திலீ­பனின் நினை­வேந்தல் மற்றும் மாவீரர் நினை­வேந்தல் நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன.

 இந்த நினை­வேந்­தல்­களை அனுஷ்­டிக்கும் விட­யத்தில்  அர­சியல்  கட்­சி­களின் தலை­யீ­டுகள்   நினை­வேந்தல் நிகழ்­வு­களை  உரிய வகையில்  நடத்­து­வ­தற்­கான சூழலை  குழப்பும் வகையில் அமைந்­தி­ருந்­தன.  இதனால் நினை­வேந்­தல்­களை  பொதுக்­கட்­ட­மைப்­பொன்றின் அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­க­வேண்டும் என்ற  கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.  இதன் பின்னர் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை  பொதுக்­கட்­ட­மைப்­பொன்றின் அடிப்­ப­டையில் நடத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதே­போன்றே தியா­க­தீபம் திலீ­பனின் நினை­வேந்தல் விவ­கா­ரத்­திலும்  தமிழ்த் தேசிய  மக்கள் முன்­ன­ணி­யினர்   தலை­யீடு செய்­த­தை­ய­டுத்து கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் குழப்­ப­மான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சி­யி­ன­ருக்கும்  தமிழ்த் தேசிய மக்கள்    முன்­ன­ணி­யி­னருக்­கு­மி­டையில்   முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது.

 இந்த நிலையில்  சிவில் சமூக அமைப்­பினர், மதத்­த­லை­வர்கள்  உட்­பட்டோர் ஒன்­றி­ணைந்து   பொதுக்­கட்­ட­மைப்­பொன்றை ஏற்­ப­டுத்தி இத்­த­கைய   நினை­வேந்­தல்­களை   ஒழங்கு செய்­ய­வேண்டும் என்று  கோரப்­பட்­டது. இதற்­கான நட­வ­டிக்­கைகள்   எடுக்­கப்­பட்ட  போதிலும்  அந்த செயற்­பாடு பூரண வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.  2019ஆம் ஆண்டு  கோட்­டா­பய ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான  பொது­ஜன பெர­முன அர­சாங்கம்  பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து மீண்டும்   நினை­வேந்­தல்­களை நடத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது. பெரும் கெடு­பி­டிகள்  மேற்­கொள்­ளப்­பட்­டன.  முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லைக்­கூட பெரும் கொடு­பி­டி­க­ளுக்கு மத்­தி­யி­லேயே  நடத்­த­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

 திலீ­பனின் நினை­வேந்­தலை மேற்­கொள்­வ­தற்கு பல்­வேறு தடைகள்  ஏற்படுத்தப்பட்டன. நீதி­மன்ற உத்­த­ர­வுகள்   பிறப்­பிக்­கப்­பட்­டன.  தற்­போது  ஜனா­தி­ப­தி­யாக ரணில்  விக்­கி­ர­ம­சிங்க பதவி வகிக்கும் நிலையில்  நினை­வேந்­தல்­களை நடத்­து­வ­தற்­காக   சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  ஆனால் திரு­கோ­ண­ம­லையில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­பவத்தின் பின்னர்  நீதி­மன்றத் தடை உத்­த­ர­வு­களை பெறு­வ­தற்­கான முயற்­சிகள் பொலி­ஸா­ரி­னால்­ எ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கொழும்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  திலீ­பனின் நினை­வேந்­தலை  மேற்­கொள்­வ­தற்கு கிறிஸ்­தவ ஒத்­து­ழைப்பு இயக்கம் நட­வ­டிக்கை  எடுத்­தி­ருந்­த­போது  அதற்கு எதி­ராக  கோட்டை மற்றும் மாளி­கா­கந்த நீதி­மன்­றங்­களில்  தடை உத்தரவு  பெறப்பட்டிருந்தது.  இதேபோன்றே   திலீபனின் வாகன ஊர்தி பயணத்துக்கும் வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடை உத்தரவு  கோரப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை.  யாழ்ப்பாணத்திலும் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு கோரி மனுக்கள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

திலீபனின் நினைவேந்தலை  உரிய வகையில் உரிய இடத்தில் உணர்வுபூர்வமாக   நடத்தியிருந்தால்  இத்தகைய  தடை உத்தரவு கோரும்  நிலைமைகள்  ஏற்பட்டிருக்கமாட்டாது.  அதேபோலவே பொதுகட்டமைப்பொன்றின் அடிப்படையில், பொது நிகழ்ச்சி நிரலின் கீழ்   திலீபனின் நினைவேந்தலுக்கான திட்டங்கள்  வகுக்கப்பட்டிருந்தால்  அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து  உணர்வுபூர்வமாக   அதனை மேற்கொண்டிருக்க முடியும்.

எனவே  எதிர்காலத்தில்  எத்தகைய நினைவேந்தல்களாயினும்  பொதுக்கட்டமைப்பின் கீழ் மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விடயம் தொடர்பில் சகல தரப்பும்  கவனம் செலுத்த வேண்டும்  என்று  வலியுறுத்த விரும்புகின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் வகிபாகத்தை பெறுவதற்கான வழி என்ன?

2025-01-19 15:02:55
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசியம்

2025-01-12 14:32:54
news-image

பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் இழுத்தடிப்பு வேண்டாம்

2025-01-05 15:33:27
news-image

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற...

2024-12-29 08:58:38
news-image

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

2024-12-15 22:38:25
news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47
news-image

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு...

2024-01-21 21:05:37
news-image

நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

2024-01-14 11:49:14
news-image

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானம்...

2024-01-07 12:15:27
news-image

பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசியல் தீர்வும் அவசியம்

2023-12-31 17:06:11