துணி­வாரா ஜனா­தி­பதி?

Published By: Vishnu

24 Sep, 2023 | 03:35 PM
image

சத்­ரியன்

அடுத்த ஆண்டில் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­படக் கூடாது, பொரு­ளா­தார நெருக்­க­டியால், தேர்தல் நடத்­து­வ­தற்கு போதிய நிதி இல்லை, அதனால் ஜனா­தி­பதி தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­பட வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வஜிர அபே­வர்­தன வெளி­யிட்ட கருத்து, அர­சியல் அரங்கில் தீவி­ர­மாக எடுத்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி தேர்­தலை ஒத்­தி­வைப்­பது சாத்­தி­யமோ அவ்­வ­ளவு இல­கு­வான காரி­யமோ அல்ல என்­பது அனை­வ­ருக்கும் தெரியும்.

ஆனாலும், வஜிர அபே­வர்­த­னவின் இந்தக் கருத்தை யாரும் புறக்­க­ணித்து ஒதுக்கும் நிலையில் இல்லை என்­ப­தையே, உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பு உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

வஜிர அபே­வர்­தன அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர் அல்ல. ஆனால் அர­சாங்­கத்தின் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியின் குர­லாக அவர் அவ்­வப்­போது ஒலிக்­கிறார்.

சில­வே­ளை­களில் அர­சாங்கம் அதி­கா­ரப்­பூர்வ தக­வலை வெளி­யிட முன்­னரே அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்தை வெளி­யி­டு­கிறார்.

க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையை பிற்­போட அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக கடந்த திங்­கட்­கி­ழமை அவர் தான் முதலில் செய்­தியை வெளி­யிட்டார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த கடந்த வியா­ழக்­கி­ழமை தான் அது­பற்றி பாரா­ளு­மன்­றத்தில் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்தார்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முதல் நிலை விசு­வா­சி­களின் வரி­சையில் இப்­போது இருப்­ப­வர்­களில் சாகல ரத்­நா­யக்க, வஜிர அபே­வர்­தன, பாலித ரங்கே பண்­டார போன்­ற­வர்கள் முக்­கி­ய­மா­ன­வர்கள்.

பாரா­ளு­மன்­றத்தில் ஐ.தே.க.வின் ஒற்றை உறுப்­பி­ன­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கம் வகித்துக் கொண்­டி­ருந்த போதே, அவர் விரைவில் அதி­கா­ரத்­துக்கு வருவார் என்று கூறி­யவர் வஜிர அபே­வர்­தன.

அவர் அதனைக் கூறிய போது, யாரும் நம்­ப­வில்லை. அதனை நம்பக் கூடிய சூழ்­நி­லையும் அப்­போது இருக்­க­வில்லை.

பலம்­வாய்ந்த ஜனா­தி­ப­தி­யாக கோட்­டாவும், அசைக்க முடி­யாத பிர­த­ம­ராக மஹிந்­தவும் அதி­கா­ரத்தில் இருந்த சூழல் அது.

அப்­போது, ரணில் ஜனா­தி­ப­தி­யாக விரைவில் பொறுப்­பேற்பார் என யாரா­வது நம்பக் கூடிய சூழல் இருந்­தி­ருக்­க­வில்லை.

அர­க­லய போராட்டம் எல்­லா­வற்­றையும் மாற்­றி­யது, வஜிர அபே­வர்­தன கூறி­யது போல, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் அதி­கா­ரத்­துக்கு கொண்டு வந்­தது.

பிர­த­ம­ராக இருந்த ரணில், கோட்­டாவின் பதவி வில­கலை அடுத்து இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்ற பின்னர், பாரா­ளு­மன்­றத்தில் புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான வாக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது.

வாக்­கெ­டுப்­புக்கு முன்­னரே, ரணில் விக்­ர­ம­சிங்க 140இற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்று ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என எதிர்வு கூறி­யி­ருந்தார் வஜிர அபே­வர்­தன.

அவ­ரது அந்தக் கணிப்பும் பொய்­யா­க­வில்லை.

இதனால் தான், ஜனா­தி­பதி தேர்­தலை ஒத்­தி­வைக்க வேண்டும் என அவர் கூறிய கருத்தை யாரும் இல­கு­வாக எடுத்துக் கொள்­ள­வில்லை.

நடை­முறைச் சாத்­தியம், சாத்­தி­ய­மற்ற நிலை­மை­க­ளுக்கு அப்­பாலும் சில விட­யங்கள் இருக்­கின்­றன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதி­கா­ரத்­துக்கு வந்­ததும் அவ்­வா­றான ஒரு விபத்­தினால் தான்.

அவ்­வா­றான விபத்து தொடர்ந்து நடந்து கொண்­டி­ருக்கும் என்றோ, அதுவே ஒரு­வ­ருக்கு சாத­க­மாக இருக்கும் என்றோ எதிர்­பார்க்க முடி­யாது.

ஆனாலும், ஜீ.எல். பீரிஸ் போன்­ற­வர்கள் வஜிர அபே­வர்­த­னவின் கூற்றை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ளத் தயா­ராக இல்லை.

அதனால் தான், ஜனா­தி­பதி தேர்­தலை ஒத்­தி­வைக்க முடி­யாது, 2024 ஒக்­டோ­ப­ருக்குப் பின்னர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் ஜனா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யாது என்று கூறி­யி­ருக்­கிறார்.

2024 ஒக்­டோ­ப­ருக்குள் தேர்தல் நடத்­தப்­ப­டாது போனால், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டின் தலை­வ­ராக சட்­ட­ரீ­தி­யாகப் பத­வியில் இருக்க முடி­யாது.

அவ்­வா­றான நிலையில், 2024 ஒக்­டோ­பரில் அவர் பதவி விலக வேண்டும். தேர்தல் நடத்­தப்­ப­டாது போனால் ஜன­நா­ய­கத்­துக்கு சாவு ஏற்­படும். ஜனா­தி­ப­தியின் எல்லா கட­மை­களும் முடி­வுக்கு வந்து விடும்.

அது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் பல்­வேறு சவால்­களை ஏற்­ப­டுத்தும் என்று எச்­ச­ரித்­தி­ருக்­கிறார் பீரிஸ்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜன­நா­யக வழியில் நடப்­ப­தாக காண்­பித்துக் கொள்­பவர். ஆனாலும், தேர்­தல்­களை நடத்தும் விட­யத்தில், அவ­ருக்கு ஆர்வம் இருக்­கி­றது எனக் கருத முடி­யாது.

அவர் பிர­த­ம­ராக பத­வியில் இருந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் தான், மாகாண சபைத் தேர்­தல்கள் நடத்­தப்­பட முடி­யாத நிலை உரு­வாக்­கப்­பட்­டது.

அவர் ஜனா­தி­ப­தி­யாக பத­விக்கு வந்த பின்னர் தான், உள்­ளூ­ராட்சித் தேர்தல் அறி­விக்­கப்­பட்டு, அதனை நடத்த முடி­யாத நிலை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த இரண்டு விட­யங்­களும், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை, தேர்­த­லுக்கு அஞ்சும் நப­ரா­கவே அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. தான் ஆட்­சியில் இருந்­த­போது, உரிய நேரத்தில் தேர்­தல்­களை நடத்­தி­ய­தாக மஹிந்த ராஜபக் ஷ எப்­போதும் பெரு­மை­யாக கூறிக் கொள்வார்.

அவ­ரது ஆட்­சியில் ஜன­நா­யக உரி­மைகள் மறுக்­கப்­பட்­டதை மறைப்­ப­தற்­காக, தேர்­தல்­களை ஒழுங்­காக நடத்­தினார்.

ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதற்கு நேர்­மா­றான நிலையில் இருக்­கிறார்.

அவர் ஜன­நா­ய­கத்தின் ஏனைய விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தாக காண்­பித்துக் கொண்டு மக்­களின் வாக்­கு­ரி­மையை பறிக்­கின்ற வேலையை செய்­பவர்.

மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை அவர் இது­வரை நடத்­த­வில்லை.

அதனைப் போலவே அடுத்த ஆண்டில் ஜனா­தி­பதி தேர்­த­லையும் நடத்­தாமல் விடப் பார்­கிறார் என்ற அச்சம் பல­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனால் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் குறிப்­பி­டு­வது போல உள்­ளூ­ராட்சித் தேர்தல் அல்­லது மாகாண சபைத் தேர்­தலைப் போல, ஜனா­தி­பதி தேர்­தலை ஒத்­தி­வைப்­பது அவ்­வ­ளவு இல­கு­வான காரியம் அல்ல.

அது பாரிய அர­சியல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். அர­சி­ய­ல­மைப்பு நெருக்­க­டி­யையும் உரு­வாக்கும். அத்­த­கை­ய­தொரு சவாலை எதிர்­கொள்­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க துணி­வாரா என்­பது தான் பல­ரதும் கேள்வி.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதி­கா­ரத்தின் உச்­சத்தை தொடுவார் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால் சந்­தர்ப்ப சூழ்­நி­லைகள், அவரை ஜனா­தி­பதி ஆச­னத்­துக்கு கொண்டு வந்து விட்­டது.

அதுவும் அவர் யாரை எதிர்த்து அர­சியல் செய்­தாரோ அவர்­களே ஆட்­சியில் அமர வைக்கும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யது.

ராஜபக் ஷவி­ன­ருக்கு எதி­ராக தோன்­றிய மக்கள் அலை, அவ­ருக்கு அதீத நம்­பிக்­கையை கொடுத்­தது.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் தன்­னையே வேட்­பா­ள­ராக நிறுத்­து­வார்கள் என்ற அசட்டுத் துணிவை அவ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது. அர­சியல் நிலை­மை­களும் அவ்­வாறு தான் காணப்­பட்­டன.இப்­போது நிலை­மைகள் அப்­ப­டி­யில்லை.

தங்­களின் பினா­மி­யாக ஒருவர் இருப்­பதை விட தங்­களில் ஒருவர் அதி­கா­ரத்தில் இருப்­பதே பாது­காப்­பா­னது என்று அவர்கள் நினைக்கத் தொடங்கி விட்­டார்கள்.

அவர்கள் ராஜ­ப­க் ஷ­வி­னரில் இருந்து அடுத்த ஜனா­தி­ப­தியை தெரிவு செய்யும் முயற்­சியில் இறங்கி விட்­டனர்.

இந்­த­நி­லையில் ரணில் விக்கி­ர­ம­சிங்க அதி­கா­ரத்தில் நீடித்­தி­ருக்க விரும்­பு­கிறார். அவர் தேர்­தலை சந்­திப்­ப­தானால், மொட்டின் ஆத­ரவு கட்­டாயம் தேவை.அது கிடைக்­காது என்றால், தேர்தல் நடத்­தப்­படக் கூடாது. அதனை ஒத்­தி­வைக்க அவர் வழி தேடக் கூடும்.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான நாள் குறிக்­கப்­பட்ட போதும், அதனை நடத்த முடி­யாமல் செய்­தவர் ரணில். அவ்­வா­றான ஒருவர் ஜனா­தி­பதி தேர்தலை பிற்போடும் நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்று உறுதியாக கூறமுடியாது.

ஆனால், அது அவருக்கும் நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தேர்தலை நடத்தக் கோரி யாாராவது உயர்நீதிமன்றில் முறையிடலாம். அதன் தீர்ப்பு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாதகமாக வரலாம். அது அரசியல்சாசன நெருக்கடியை ஏற்படுத்தும்.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தடுத்த கட்ட நிதியுதவிகள் தடைப்படலாம். வெளிநாடுகள் தங்களின் நிதியுதவிகளை நிறுத்தலாம்.

அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு கூட செல்லலாம். இவையெல்லாம், ரணில் எடுக்கப் போகும் முடிவில் தான் தங்கியிருக்கிறது. இவ்வாறான பாரிய விளைவுகளுக்கு நாட்டை மீண்டும் தள்ளிச் செல்ல ரணில் விரும்பமாட்டார்.

ஆனால், அதிகார ஆசை யாரையும் எந்த முடிவையும் எடுக்கத் தூண்டும் என்பதை மட்டும் யாரும் மறந்து விடக் கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54