அஷ்ரப்பின் 23வது நினைவு தினம் கூறும் செய்தி?

Published By: Vishnu

24 Sep, 2023 | 02:14 PM
image

எம்.எஸ்.தீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்­ரப்பின் 23ஆவது வருட நினைவு தினம் கடந்த 16ஆம் திகதி பலத்த பாது­காப்­பு­க­ளுக்கு மத்­தியில் சாய்ந்­த­ம­ருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஏற்­பாட்டில் நடை­பெற்­றது. இதே வேளை, தேசிய காங்­கி­ரஸின் ஏற்­பாட்டில் மூதூ­ரிலும் நினைவு தின வைபவம் நடை­பெற்­றது. இன்னும் பல இடங்­க­ளிலும்   வைப­வங்கள்  நடை­பெற்­றன.

இவ்­வாறு பல இடங்­களில் நினைவு தின நிகழ்­வுகள் நடை­பெற்­றாலும், அவை அர­சியல் தேவைக்­கா­கவே மேற்­கொள்­ளப்­ப­ட்டதே அல்­லாமல், அவரின் கொள்­கைளை வாழ வைக்க வேண்டும், அவ­ரால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முடித்து வைக்க வேண்­டு­மென்ற எண்­ணத்தை அஷ்­ரப்பின் பாச­றையில் வளர்ந்­த­வர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எவ­ரி­டத்­திலும் காண முடி­யாதிருந்தது. வரு­டத்­திற்கு ஒரு தடவை மாத்­திரம் நினைவு கூறப்­ப­டு­கின்ற ஒரு­வ­ரா­கவே அஷ்­ரப்பை பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் நினைவு தினக் கூட்டம் சாய்ந்­த­ம­ருதில் நடை­பெற்ற போதிலும் சாய்ந்­த­ம­ருதில் எங்கு நடை­பெறும் என்­பதில் இறுதி நேரம் வரை பலத்த இழு­ப­றிகள் இருந்­தன. ஏற்­க­னவே   அறி­வித்திருந்த மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வில்லை. 15ஆம் திகதி மாலை­யில் தான் சாய்ந்­த­ம­ருது கடற்­கரை பிர­தே­சத்தில் உள்ள பௌஸி மைதா­னத்தில் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இந்த மைதா­னத்தில் நடை­பெற்ற நினைவு தின ஏற்­பா­டு­களை அவ­தா­னித்த போது ஒரு நினைவு தினத்­திற்­கு­ரிய சாயல் எதுவும் தென்­ப­ட­வில்லை. கவிதை வாசித்தல் மற்றும் களி­கம்பு அடித்தல் (பொல்­லடி) ஆகிய நிகழ்வுகள் இடம்­பெற்­றன. கவிதை  வாசிப்­ப­தற்கு 3 பேர் ஏற்­பா­டு  செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

கட்­சியின் தவி­சாளர் எம்.ஏ.அப்துல் மஜீட், கட்­சியின் செய­லாளர் சட்­டத்­த­ரணி நிஸாம் காரி­யப்பர், தமி­ழ­கத்­தி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த பேரா­சி­ரியர் மு.அப்துல் காதர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், கட்­சியின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் ஆகி­யோர்  உரை­யாற்­றி­னார்கள்.

இந்த நினைவு தினக் கூட்டம் சுமார் 2 மணித்­தி­யா­லங்­களே நடை­பெற்­றது. இத­னால்தான் கவிஞர் சோலைக்­கி­ளிக்கு  போதிய நேரம் வழங்­கப்­ப­ட­வில்லை. அவர் இடை­யி­லேயே மேடையை விட்டு கீழே இறக்­கப்­பட்டார். இத­னி­டையே பேச்­சா­ளர்­க­ளுக்கும், கவிதை வாசிப்­போ­ருக்கும் ஒரு குறு­கிய நேரமே வழங்­கப்­பட்­டது. அதனை மீறும் போது சிவப்பு லைட் எரியும். அதா­வது சிவப்பு லைட் எரிந்தால் உங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நேரம் முடி­வ­டைந்து விட்­டது என்று அர்த்தமாம்.

இத­னி­டையே நினைவு தினக் கூட்­டத்தை ரவூப் ஹக்கீம் சாய்ந்­த­ம­ருதில் நடத்தக் கூடா­தென்று 15ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக  ஆர்ப்­பாட்­ட­மொன்று நடை­பெற்­றது. இந்த ஆர்ப்­பாட்­டத்தை ஏற்­பாடு செய்­த­வர்கள் அஷ்­ரப்பின் நினைவு தினக் கூட்­டத்தை தடுத்து நிறுத்­து­வ­தற்கு பல நட­வ­டிக்­கை­களை எடுத்­தார்கள். ஈற்றில் அர­சாங்­கத்தின் உயர்­மட்­டத்­தி­ன­ருடன் தொடர்பு கொண்டு பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளுடன் நினைவு தினக் கூட்­டத்தை நடத்த வேண்­டிய நிலைக்கு முஸ்லிம் காங்­கிரஸ் தள்­ளப்­பட்­டது.

முஸ்­லிம்­க­ளினால் பெரிதும் மதிக்­கப்­ப­டு­கின்ற பெருந்­த­லைவர் அஷ்­ரப்பின் நினைவு தினக் கூட்டம்  அமை­தி­யான முறை­யிலும், பாது­காப்பு கெடு­பி­டிகள் இல்­லாத வகை­யிலும் நடத்­தப்­பட வேண்டும். அதுவே அஷ்­ரப்­புக்­கான மரி­யா­தை­யாகும். ஆனால், அஷ்­ரப்பை போற்­று­கின்ற ஒரு தரப்­பினர் சாய்ந்­த­ம­ரு­துக்கு உள்­ளூ­ராட்சி சபை வழங்­கப்­ப­ட­வில்லை.

இதற்கு முஸ்லிம் காங்­கிரஸ் தடை­யாக இருக்­கின்­றது என்று தெரி­வித்துக் கொண்டு நினைவு தினக் கூட்­டத்தை தடுப்­ப­தற்கு முயற்­சி­களை எடுத்துக் கொண்­டி­ருந்த வேளையில், என்ன விலை கொடுத்­தா­வது நினைவு தினக் கூட்­டத்தை நடத்த வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸினர் செயற்­பட்டு அதில் வெற்­றியும் கண்­டார்கள். இந்த இரண்டு தரப்­பி­னரும் அர­சியல் நோக்­கத்தைக் கொண்­ட­வர்கள்.

இதில் யார் வெற்றி பெற்றார், யார் தோல்­வி­ய­டைந்தார் என்­பது இங்கு முக்­கி­ய­மல்ல. முஸ்லிம் அர­சி­யலில் தடம்­ப­தித்­துள்­ள­வர்­களில் அதிகம் பேர் அஷ்­ரப்­பினால் அர­சி­ய­லுக்கு அறி­முகம் செய்­யப்­பட்­ட­வர்கள். இவர்கள் தமக்கு அர­சியல் அரிச்­சு­வடி சொல்லித் தந்த தலை­வனின் நினைவு தினம் என்­பதை மறந்து தங்­களின் அர­சியல் செல்­வாக்கை நிரூ­பித்துக் காட்­டு­வ­தற்­கு­ரிய ஒரு நிகழ்­வா­கவே பெருந்­த­லைவர் அஷ்­ரப்பின் நினைவு தினத்தை மாற்றிக் கொண்­டார்கள்.

அஷ்­ரப்பின் 22 ஆவது நினைவு தினம் கடந்த ஆண்டு அக்­க­ரைப்­பற்றில் நடை­பெற்­றது. இங்கு தென்­னிந்­திய நடிகர் கவிஞர் வ.ஐ.ச.ஜெய­பாலன் சிறப்­பு­ரை­யாற்­று­வ­தற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார். 23 ஆவது நினைவு தினக் கூட்­டத்­திற்கு தமி­ழ­கத்தை சேர்ந்த பேரா­சி­ரியர் மு.அப்துல் காதர் சிறப்­பு­ரை­யாற்­று­வ­தற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஆனால் 22ஆவது நினைவு தினத்தைப் போலவே 23ஆவது நினைவு தினமும்  இழுபறி நிலையில் நடந்து முடிந்துள்ளது.  கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் 11 நிமி­டங்கள் பேசும் வகை­யிலே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்­தது. அந்­த­ள­வுக்கு மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட நேர ஒதுக்­கீட்­டி­லேயே கூட்டம் நடை­பெற்­றது. இதற்கு 15ஆம் திகதி நடை­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டமும் ஒரு கார­ண­மாகும். மொத்­தத்தில் ஒரு அவ­சரக் கூட்­ட­ம் போலவே  கூடிக் கலைந்­தது எனலாம்.

முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டு­மன்றி அஷ்­ரப்பின் பாச­றையில் வளர்ந்­த­வர்கள் என்று சொல்லிக் கொண்­டி­ருக்கும் தேசிய காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றின் முக்­கிய உறுப்­பி­னர்கள் இன்னும் அஷ்­ரப்பின் புக­ழையே போற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவ­ரது கொள்­கை­களைப் பின்­பற்றுவதாகவும்  கூறுகின்றனர். ஆனால், இவர்களில் பெரும்­பா­லானோர் அஷ்­ரப்பின் கொள்­கை­க­ளுக்கு முற்றிலும்  முரணாகவே பெரும்­பாலும் நடந்து கொள்கின்றனர்.

அஷ்ரப் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் உட்­பட பல நிலை­யான அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்டார். சுமார் 5 ஆயிரம் தமிழ், முஸ்லிம், சிங்­கள இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்ளார். இத்­த­னைக்கும் அவர் சுமார் 11 வரு­டங்கள் தான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­துள்ளார். சுமார் 5 வரு­டங்கள் அமைச்­ச­ராக இருந்­துள்ளார்.

ஆனால் அவரின் பாச­றையில் வளர்ந்த சீடர்கள் சுமார் இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும், அமைச்­சர்­க­ளா­கவும் உள்ளனர். இந்த காலப்­ப­கு­தியில் எந்­த­வொரு நிலை­யான, போற்­றத்­தகும் அபி­வி­ருத்தி சாத­னை­களை செய்­ய­வில்லை. ஆனால்  அஷ்ரப் எனும் மாலு­மியின் பெயரில் கப்பலை ஓட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

மேலும் 23 ஆவது நினைவு தினத்தை வழக்கம் போல தமது அர­சியல் செல்­வாக்கை பரி­சோ­தித்து பார்க்கும் கள­மா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளார்கள். இன்று மர்ஹூம் அஷ்­ரப்பின் சீடர்கள் முஸ்­லிம்­களின் கொள்­கை ரீதி­யான அர­சி­ய­லை வெறு­மனே அதி­கா­ரத்தை மாத்­திரம் பெற்றுக் கொள்ளும் அர­சி­ய­லாக மாற்றி வைத்­துள்­ள­வர்கள்.

முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் சிதைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் காங்­கிரஸ் என்னும் குடையின் கீழ் திரண்டு இருந்த முஸ்லிம் வாக்­கா­ளர்கள் தேசிய காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எனப் பல கட்­சி­க­ளிலும் கூறு போடப்­பட்­டுள்­ளனர். இதற்கு அஷ்­ரப்பின் சீடர்­க­ளுக்கு ஏற்­பட்ட தலைவர் பதவி ஆசையும், அமைச்சர் பத­வி­களில் உள்ள போதை­யுமே கார­ண­மாகும்.

அஷ்­ரப்பின் காலத்தில் முஸ்­லிம்­களின் அர­சியல் மிகவும் பலம் வாய்ந்­த­தாக இருந்­தது. அவர் முஸ்­லிம்­களின் அர­சி­யலை இன்னும் பலப்­ப­டுத்தும் நோக்கில் தேசிய ஐக்­கிய முன்­னணி எனும் கட்­சி­யையும் ஆரம்­பித்தார். தேசிய கட்­சியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் போன்­ற­வர்­களுக்கு இக்­கட்­சியில் இணைந்து கொள்­ளுமாறு அழைப்பு விடுத்தார். அவ­ரது அழைப்பை பலரும் ஏற்றுக் கொண்டு அவ­ரோடு இணைந்து செயற்­பட்­டனர்.

ஆனால், அவ­ரது மர­ணத்தின் பின்னர் முஸ்லிம் காங்­கிரஸ் பல கூறு­க­ளாக சுய­நலம் எனும் ஆயு­தத்­தினால் வெட்டி கூறு­போ­டப்­பட்­டது. பல கட்­சிகள் முளைத்­தன. இன்று முஸ்­லிம்­க­ளுக்கு பல அர­சியல் தலை­வர்கள் உள்ளனர்.ஆனால் எவ­ரி­டமும் சமூக சிந்­தனை கிடை­யாது. தனிக்­கட்­சியை வைத்துக் கொண்­டாலும் தேசிய கட்­சி­களின் ஒரு அங்­க­மா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.  

இவர்­களின் இத்­த­கைய செயற்­பா­டு­க­ளினால் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்­ற­வர்­களை மீண்டும் கட்­சிக்குள் இணைத்துக் கொள்­வ­தற்கு வீடு ­வீ­டாகச் செல்ல வேண்­டிய திட்­டத்தை வகுக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு வீடு­வீ­டாகச் சென்று அவர்­களை கட்­சி­யுடன் இணைத்துக் கொள்­வ­துதான் பெருந் தலைவர் அஷ்ரப்புக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலியாகும் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 23ஆவது நினைவு தின நிகழ்வில்  ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸில் பிரிவினை என்பது மூன்று வகையில் ஏற்பட்டுள்ளது. ஒன்று சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கட்சியை விட்டு பிரிந்து சென்றார்கள். சிலர் கட்சி  நிர்வாகத்தினரால் திட்டமிடப்பட்டு துரத்தப்பட்டார்கள். இன்னும் ஒரு பிரிவினர் அஷ்ரப்பின் கொள்கைகள் பாழாக்கப்பட்டுள்ளன என்ற விரக்தியில் அரசியலில் இருந்தே ஒதுங்கியுள்ளார்கள்.

பல்வேறு தனிப்பட்ட தேவைக்களுக்காக கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டு இன்று அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் அப்படி ஒரு விடயம்   நடந்தால்தான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளலாம். இது போன்று பல தடவைகள் கூறியுள்ளனர். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54