கிழக்கு ஆளுநர் முகங்­கொ­டுத்து வரும் முத்­த­ரப்பு நெருக்­க­டிகள்

Published By: Vishnu

24 Sep, 2023 | 01:06 PM
image

தேசியன்

கிழக்கு மாகாணம் பெரும்­பான்­மை­யாக தமிழ் பேசும் மக்­க­ளை  கொண்ட பிர­தே­ச­மாகும். ஆனால் இங்­குள்ள மக்கள் ஆளு­நர்கள் விட­யத்தில் ஆரம்ப காலந்­தொட்டே குழப்­ப­க­ர­மான சிந்­த­னை­களை கொண்­ட­வர்­க­ளாக விளங்­கு­கின்­றனர். 2019 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆளு­ந­ராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லா நிய­மிக்­கப்­பட்­ட­போது இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­வர்கள் தமிழ்ப் பேசும் இரண்டு தரப்­பி­ன­ரு­மாவர்.

அவ­ருக்குப் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷவால் நிய­மிக்­கப்­பட்ட அனு­ராதா யஹம்பத் தமி­ழர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் கசக்கி பிழிந்த போது, அனை­வரும் வாய் மூடி மெளனம் காத்­தனர். தற்­போ­தைய கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்­ட­மானும் தற்போது இதில் சிக்­கி­யுள்ளார். இவரை  ஆரம்­பத்­தி­லி­ருந்து எதிர்த்து வந்­த­வர்கள் சிறிய எண்­ணிக்­கை­யான முஸ்­லிம்­க­ளாவர். இதில் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தற்­போ­தைய சுற்­றாடல் துறை அமைச்­ச­ரு­மான ஹாபிஸ் நசீர் அஹமட் பிர­தா­ன­மாக விளங்­கு­கிறார்.

இவர் ஆளுநர் செந்­திலை பகி­ரங்­க­மா­கவே விமர்­சித்­தி­ருந்தார். மலை­ய­கத்தில் போட்ட ஆட்­டங்­களை இங்கு போட முடி­யாது என முழங்­கினார். உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­களில் அவரை உரையாற்ற விடாது தடுத்தார்.  ஆனால், ஆளுநர் செந்தில் தொண்­ட­மானின் பின்­பு­லத்­தையும் அவ­ரது அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளையும்  அமைச்சர் நசீர் அறிந்­தி­ருக்­க­வில்­லை­யென்றே தெரி­கின்­றது.

ஒரு கட்­டத்தில் தனது பாணியில் பதில் கூறத் தொடங்­கினார் கிழக்கு ஆளுநர்.  காத்­தான்­குடி பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தில் தன்னைப் பற்றி பொய்­யான கருத்­துக்­களை அமைச்சர் நசீர் கூறி­ய­தாக 250 மில்­லியன் ரூபா  நட்ட ஈடு கோரி தனது சட்­டத்­த­ரணி மூலம் ஆளுநர் செந்தில் கடிதம் அனுப்­பினார். இந்த சம்­பவம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்­பெற்­றது. அதன் பிறகு இதுவரை அமைச்சர்  நசீர் வாய் திறந்து கிழக்கு ஆளு­ந­ரைப்­பற்றி  ஒன்றும் பேசி­ய­தாகத் தெரி­ய­வில்லை.

கிழக்கு மாகா­ணத்தின் நிர்­வாக பத­வி­களில் முஸ்­லிம்­களை ஆளுநர்  நிய­மிக்­க­வில்­லை­யென்­பது அமைச்சர் நசீரின் முக்­கிய குற்­றச்­சாட்­டு­க­ளி­லொன்று. ஆனால் ஜூன் மாதம் 19 ஆம் திகதி கிழக்கு மாகாண வீட­மைப்பு அதி­கார சபையின் தலை­வ­ராக சம்­மாந்­து­றையைச் சேர்ந்த றனூஸ் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். இவர் கிழக்கை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஸா­ரப்பின் சிபா­ரிசின் பேரில் நிய­மிக்­கப்­பட்­ட­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இது தான் அமைச்சர் நசீ­ருக்கு எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மலை­ய­கத்தைச் சேர்ந்த பழம்­பெரும்  தொழிற்­சங்கம் மற்றும் கட்­சி­யொன்றின் தலை­வ­ராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான் விளங்­கு­கின்றார். கட்­சியின் அதி கூடிய செல்­வாக்கு பிர­தே­ச­மாக மத்­திய மாகா­ணத்தின் நுவ­ரெ­லியா மாவட்டம் விளங்­கி­னாலும் இவர் ஊவா மாகா­ணத்தை கட்­டி­யெ­ழுப்ப கட்­சியின் முன்னாள் தலைவர் அமரர் ஆறு­முகன் தொண்­ட­மானால் அங்கு அனுப்பி வைக்­கப்­பட்டார்.  தனக்கு வழங்­கப்­பட்ட பொறுப்பை சிறப்­பாக செய்த ஆளுநர் செந்தில் தொண்­டமான், மாகாண சபைத் தேர்­தலில் வெற்றி பெற்று  ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்­ச­ரா­கவும் பின்­னொரு சந்­தர்ப்­பத்தில் பதில் முத­ல­மைச்­ச­ரா­கவும் விளங்­கினார்.  

கிழக்கு வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு நிர்­வாக ரீதி­யான பத­விகள் கிடைப்­ப­தற்கு தடை­யா­கவே செயற்­பட்ட ஒருவர் என்றால் அவர்  முன்னாள் ஆளுநர் அனு­ராதா யஹம்­பத்­தாகத் தான் இருக்க முடியும்.      

 தனது பதவிக் காலத்தில் அவர் கிழக்கு மாகா­ணத்தின் போக்­கு­வ­ரத்து அதி­காரசபை, பொதுச் சேவைகள் ஆணைக்­குழு, வீட­மைப்பு அதி­கார சபை, முன்­பள்ளி மற்றும் சுற்­றுலா பணி­யகம் ஆகி­ய­வற்­றுக்கு முஸ்­லிம்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் நிய­மிக்­க­வில்லை.  

தென்­மா­கா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கக்­கொண்­டுள்ள அவர் கடும்­போக்­கா­ள­ரா­கவும் விளங்­கினார். ஏறாவூர் பொதுச்­சந்­தையை ஒரு சந்­தர்ப்­பத்தில் அவர் ‘ஏறாவூர் சிங்­கள சந்தை’ என குறிப்­பிட்டு நகர சபைக்கு கடிதம் எழு­தி­யி­ருந்தார். அது மிகவும் விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளா­னது. அதே போன்று நூற்­றுக்கு நூறு வீதம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் ஏறாவூர் நக­ரி­லி­ருந்து சில கிலோ மீற்­றர்கள் தூரம் அமைந்­துள்ள கரை­யோர பிர­தே­ச­மான புன்­னக்­குடா பகு­தியை அறி­விக்கும் புன்­னக்­குடா வீதி என்ற பெயர்ப்­ப­ல­கையை  ‘எல்மிஸ் வல்­கம’ என சிங்­களப் பெய­ராக  மாற்­று­வ­தற்கு முடி­வெ­டுத்தார். இப்­படி  பெயரை மாற்­று­வ­தற்கு அவ­ருக்கு கடிதம் எழு­தி­ய­வர்கள் அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த பத்­துக்கும் குறை­வான நபர்­களே என்­பது தான் இதி­லுள்ள வேடிக்கை.

சிங்­களப் பெயரை சூட்­டு­வ­தற்­காக தமிழ்ப் பெயர்ப்­ப­லகை அகற்­றப்­பட்­ட­வுடன் அப்­பி­ர­தேச மக்கள் கொதித்­துப்­போ­யினர். பின்பு அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவ்­விடம் வந்து மீண்டும் பழைய தமிழ்ப் பெயர் கொண்ட பெயர்ப்­ப­ல­கையை நாட்­டி­ய­துடன் ஆளு­நரின் இன­வாத செயற்­பாட்டை வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்தார். முன்னாள் ஆளுநர் அனு­ராதா தனது பதவி காலத்தில் இறு­திப்­ப­கு­தியில் மேற்­கொண்ட செயற்­பா­டுகள் இவை.  இந்த சம்­ப­வங்­க­ளை­யெல்லாம் அறிந்­த­வர்கள் தற்­போ­தைய ஆளுநர் செந்தில் தொண்­டமான் எவ்­வ­ளவோ பர­வா­யில்லை என்ற மன­நி­லையை இன்னும் எட்­டா­ம­லி­ருப்­பது ஆச்­ச­ரி­யமே.

அதை­விட பெளத்த பேரி­ன­வாத நெருக்­க­டி­களில் கிழக்கு ஆளுநர் தற்­போது சிக்­கிக்­கொண்­டி­ருக்­கின்றார். அவரை பதவி விலக்­கு­மாறு கோரி ஒரு இலட்சம் கையெ­ழுத்­துக்­களை திரட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர் ஐக்­கிய சங்­கத்­தினர். இந்த நட­வ­டிக்கை கடந்த 19 ஆம் திகதி திரு­கோ­ண­மலை மணிக்­கூட்டு கோபு­ரத்­துக்கு அருகில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­கோ­ண­மலை நிலா­வெளி பெரி­ய­குளம் பகு­தியில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வி­ருந்த விகா­ரையின் நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்தி வைத்­த­து­மட்­டு­மல்­லாது இது இனங்­க­ளுக்கு மத்­தியில் முரண்­களை ஏற்­ப­டுத்தும் என பெளத்த பிக்­கு­களை அழைத்து பேச்சு வார்த்­தை­க­ளையும் நடத்­தி­யி­ருந்தார் ஆளுநர்.  

ஆளு­ந­ருக்கு எதி­ராக கடந்த  மாதம் 28 ஆம் திகதி குறித்த பிக்­குகள் ஆர்ப்­பாட்­ட­மொன்­றையும் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.  குறித்த பகு­தியில் ஐந்­நூ­றுக்கும் மேற்­பட்ட தமிழ்க்­ குடும்­பங்கள் வசித்து வர, இரண்டே இரண்டு சிங்­கள குடும்­பங்­க­ளுக்கு ஒரு விகாரை அமைத்தால் அது நியா­ய­மா­ன­தில்லை என்­பதே ஆளு­நரின் விளக்கம். அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய விட­ய­மாகும். ஆனால், இந்­நாட்டில் பெளத்த பிக்­குகள் வைத்­ததே சட்டம் என்­ற­ப­டியால் இவ்­வி­ட­யத்தில் ஆளு­நரின் விளக்­கங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இது இப்­படி இருக்­கவே தியாகி திலீபன் நினை­வேந்தல் விவ­காரம் தற்­போது சர்ச்­சைக்­கு­ரி­ய­தா­கி­யுள்­ளது. கஜேந்­திரன் எம் பி. தலை­மை­யி­லான குழு­வினர் தியாகி திலீ­பனின் நினைவு தின ஊர்­வ­லத்தை திரு­கோ­ண­மலைப் பகு­தியில் மேற்­கொண்ட போது அங்கு வந்த சிங்­க­ள­வர்கள் கஜேந்­திரன் மீது தாக்­குதல் மேற்­கொண்­ட­தோடு திலீ­பனின் உரு­வப்­படம் தாங்­கிய ஊர்­தி­யையும் சேதப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இந்தச் சம்­பவம் குறித்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்­டமான் ஊட­கங்­க­ளிடம் கருத்து தெரி­விக்கும் போது,  ‘சிங்­கள மக்கள் வாழும் பகு­தி­களில் இவ்­வாறு நினை­வேந்தல் ஊர்­வ­லத்தை முன்­னெ­டுத்­தமை தேவை­யில்­லாத இனக்­க­ல­வ­ரத்தை தூண்­டு­வ­தற்­கான முயற்சி என்­ப­துடன் இது­போன்ற ஊர்­வ­லங்கள் தவிர்க்­கப்­பட வேண்டும் என்று கூறி­யுள்ளார்.  ‘ஏனைய இனத்­த­வர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டா­த­வ­கையில் பொறுப்­புடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நடந்­து­கொள்ள வேண்டும். இது­போன்ற சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக பொலிஸாரினால் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்’  என்றும் கூறி­யுள்ளார்.

இது கிழக்கு வாழ் தமிழ்த் தேசி­ய­வா­தி­க­ளுக்கு கோபத்தை கிளறி விட்­டுள்­ளது. ஆரம்பத்தில் பிரதேச வாழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் ஆளுநரை வசைபாடினர். பின்பு பிரதேசத்தின் பிக்குகள் உட்பட பெளத்த சிங்கள மக்கள் அவரை பதவி விலக்க கையெழுத்துகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இப்போது அதே பிரதேசத்தின் தமிழ்த் தேசியவாதிகள் அவரின் உரைக்கு போர்க்கொடியை தூக்கியுள்ளனர். கையெழுத்து சேகரிப்பின் பின்னணியில் பெளத்த பேரினவாதிகள் இருப்பதை அறியலாம்.  கிழக்கு மாகாணத்துக்கு தற்போது கிடைத்திருக்கும் ஒரு தமிழ் ஆளுநரைக்கொண்டு கிழக்கின் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் இரண்டு தரப்பினரும் எந்தளவுக்கு பயன்களையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சிந்திப்பதை ஆரம்பத்திலேயே தவிர்த்து விட்டுள்ளனர். இதன் பாதிப்பு அடுத்ததாக ஒரு கடும்போக்கு சிங்கள ஆளுநர் நியமிக்கப்படும் போது அவர்களுக்கு விளங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07