மடை மாற்றும் அர­சியல்

Published By: Vishnu

24 Sep, 2023 | 11:42 AM
image

கார்­வண்ணன்

தற்­போது ஜெனி­வாவில் நடந்து கொண்­டி­ருக்கும் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 54 ஆவது அமர்வில், ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த அறிக்­கையில், நினை­வேந்தல் உரிமை பற்­றிய குறிப்பு 45 ஆவது விட­ய­மாக இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

“நல்­லி­ணக்­கத்­துக்­கான தனது உறு­திப்­பாட்டை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்தும் அதே­வே­ளையில்,  நினை­வேந்தல் செய்யும் முயற்­சி­க­ளையும் தடுக்­கி­றது, அது பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நம்­பிக்­கையை மேலும் சிதைக்­கி­றது.

உதா­ர­ண­மாக, கடந்த ஜூலை 23 அன்று, 1983 கறுப்பு ஜூலை கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்தும் வகை­யி­லான ஒரு சிவில் சமூக நினை­வேந்­தலை, பொலிஸார் வன்­முறை மூலம் கலைத்­தனர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களை நினைவு கூரு­வ­தற்கும் துக்கம் அனு­ச­ரிப்­ப­தற்கும் பாது­காப்­பான இடங்­களை அனு­ம­திப்­பது நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒரு முக்­கி­ய­மான சமிக்ஞை ” என்று ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

2009இல் போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்னர், கேள்­விக்­குள்­ளா­கிய பல விட­யங்­களில் நினை­வேந்தல் உரி­மையும் ஒன்று.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் உயி­ருடன் திரும்பக் கிடைப்­பார்­களா என்­பது எந்­த­ள­வுக்கு நிச்­ச­ய­மற்­ற­தாக இருந்­ததோ, அது­போன்று தான் நினை­வேந்தல் உரி­மையை மீளப் பெறு­வதும் சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தா­கவே காணப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதிக்கு எந்­த­ள­வுக்கு உத்­த­ர­வா­த­மற்ற நிலை இன்­றைக்கு இருக்­கி­றதோ, அதே­போன்று நினை­வேந்தல் உரி­மையும் உத்­த­ர­வாதம் அற்ற நிலை தான் காணப்­பட்­டது.

குறிப்­பாக ராஜபக் ஷவி­னரின் ஆட்­சிக்­கா­லங்­களில், நினை­வேந்தல் என்­பது ஒரு பயங்­க­ர­வாத குற்­ற­மா­கவே பார்க்­கப்­பட்­டது.

நினை­வேந்­தல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு, நீண்டகாலம் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

தமிழ் மக்கள் போர்க்­கா­லத்தை மீள நினை­வு­ப­டுத்திக் கொள்ளக் கூடாது. தங்­க­ளுக்­காக உயிர் நீத்­த­வர்­களை, தங்­களின் உற­வு­களை நினை­வேந்தக் கூடாது என்­பதில், ராஜபக் ஷவினர் உறு­தி­யாக இருந்­தனர். அதனால் தான், போர் முடிந்த கையுடன், வடக்கு, கிழக்கில் காணப்­பட்ட தமி­ழர்­களின் அனைத்து போர் நினைவுச் சின்­னங்­களும், துயி­லு­மில்­லங்­களும் இடித்­த­ழிக்­கப்­பட்­டன. அவற்றின் மீது படைத்­த­ளங்கள் அமைக்­கப்­பட்­டன.

மைத்­திரி - ரணில் கூட்டு அர­சாங்­கத்தின் காலத்தில், நினை­வேந்­த­லுக்­கான வெளி ஒன்று விடப்­பட்­டது. அது சர்­வ­தேச சமூ­கத்தை கையா­ளு­வ­தற்­கா­கவும், சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவும், விட்டுவைக்­கப்­பட்ட ஒரு நீக்கல் என்றே அதனைக் குறிப்­பி­டலாம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழும், நினை­வேந்­த­லுக்­கான உரிமை கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றாகத் தான் இருக்­கி­றது.

அதனைச் சுட்­டிக்­காட்­டியே ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் தனது அறிக்­கையைப் பதி­விட்­டி­ருந்தார்.

கடந்த ஜூலை மாதம் கொழும்பில் கறுப்பு ஜூலை நினை­வேந்­தலை முன்­னெ­டுக்க முயன்ற சிவில் சமூ­கத்­தினர், அடித்து விரட்­டப்­பட்­டனர்.

அதை­விட, வடக்கு கிழக்கில் நினை­வேந்தல் உரி­மையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வெளி, தமி­ழர்­க­ளுக்கு திறந்து விடப்­ப­ட­வில்லை என்­பதை உணர்த்­தி­யி­ருக்­கி­ன்றன, திரு­கோ­ண­ம­லையில் கடந்த ஞாயி­றன்று நடந்த சம்­பவம்.

அம்­பா­றையில் இருந்து யாழ்ப்­பாணம் நோக்கி பயணம் செய்து கொண்­டி­ருந்த தியாக தீபம் திலீபன் உரு­வப்­படம் தாங்­கிய நினை­வேந்தல் ஊர்தி, திரு­கோ­ண­மலை கப்­பல்­துறைப் பகு­தியில், சிங்­களக் காடை­யர்­களின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யது.  கப்­பல்­துறை இரா­ணுவ முகா­முக்கு அருகே, பொலிஸார் மற்றும் புல­னாய்­வா­ளர்கள் முன்­னி­லையில் இந்த தாக்­குதல் இடம்­பெற்­றி­ருந்த போதும், அவர்கள் இதனைத் தடுக்க முற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

புல­னாய்­வா­ளர்­களே இந்த தாக்­கு­தலின் பின்னால் இருந்­தனர் என்றும், பிறகு எப்­படி அவர்கள் இந்த தாக்­கு­தலை தடுக்க முற்­ப­டு­வார்கள் என்றும்  கேள்வி எழுப்­பி­யி­ருந்தார், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­திரன்.

தியாக தீபம் திலீபன் நினை­வேந்தல் பல சந்­தர்ப்­பங்­களில் இரா­ணுவ, பொலிஸ் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. யாழ்ப்­பா­ணத்தில் அதனைத் தடுப்­ப­தற்கு நீதி­மன்ற உத்­த­ர­வு­களைக் கூட பொலிஸார் பயன்­ப­டுத்திப் பார்த்­தனர்.

அவற்­றை­யெல்லாம் மீறி இந்த நினை­வேந்தல் இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்ற நிலையில், ஊர்தி பவனி மீதும் அதில் பயணம் செய்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்தச் சம்­பவம், தமி­ழர்­களின் நினை­வேந்தல் உரிமை மீது நடத்­தப்­பட்­டுள்ள தாக்­குதல். அதே­வேளை இந்தச் சம்­ப­வத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­திரன் தாக்­கப்­பட்ட விவ­கா­ரமே அர­சி­யலில் பலரால் முன்­னி­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

சுமந்­திரன் வெளி­யிட்ட அறிக்­கை­யிலும், வேறு பல அர­சியல் பிர­மு­கர்கள் வெளி­யிட்ட அறிக்­கை­க­ளிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­திரன் தாக்­கப்­பட்­டது பற்­றியே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தமி­ழர்­களின் நினை­வேந்தல் உரிமை மீது தொடுக்­கப்­பட்ட தாக்­குதல் அங்கு மறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

கொழும்பில் கறுப்பு ஜூலை நினை­வேந்­தலைத் தடுக்க முயன்ற சம்­ப­வத்தை நினை­வேந்தல் உரி­மை­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­ய­வர்கள், திலீபன் நினை­வேந்தல் ஊர்தி தாக்­கப்­பட்­டதை, ஏன் நினை­வேந்தல் உரிமை மீதான தாக்­கு­த­லாக அடை­யா­ளப்­ப­டுத்­தாமல் மறைத்­தனர்?

இதனை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­திரன் மீதான தாக்­கு­த­லாக மட்டும் அடை­யா­ளப்­ப­டுத்திக் கண்­டித்­த­வர்கள், இன்­னமும் புலி­வெ­றுப்பு அர­சியல் செய்யும் நிலை­யி­லேயே இருக்­கின்­றனர்.

திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்­க­ளிடம் இன­வெ­றுப்பும், புலி­வெ­றுப்பும், இன­வா­தமும் நிரம்­பி­யி­ருந்­தது. புலி­களை நினைவு கூரும் உரி­மையை தமி­ழர்­க­ளுக்கு விட்டு வைக்க கூடாது என்ற சிந்­த­னையே அவர்­க­ளிடம் மேலோங்­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, இவ்­வா­றான செயற்­பாட்டைக் கண்­டிக்­காமல், வெறு­மனே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மீதான தாக்­கு­த­லாக மட்டும் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது, அபத்­த­மான அர­சியல்.

திலீபன் ஆயுதப் போராட்டம் நடத்­திய உயிர் நீத்த ஒருவர் அல்ல. அவர் அகிம்சைப் போர் நடத்தி உயிர் துறந்­தவர்.

இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக திலீபன் அந்த அகிம்சைப் போரை நடத்­த­வில்லை. இந்­திய அர­சிடம் தான் அவர் நீதியைக் கோரினார்.

அவ­ரது ஐந்து அம்சக் கோரிக்­கையை நிறை­வேற்­றாமல் இந்­தியா, அவரைச் சாகும் நிலைக்குத் தள்­ளி­யது.

இவ்­வா­றான நிலையில், திலீபன் நினை­வேந்தல் ஊர்தி மீது நடத்­தப்­பட்­டி­ருக்­கின்ற தாக்­குதல், கிழக்கில் இனப்­ப­தற்றம் அதி­க­ரித்து வரு­வ­தையே உணர்த்­து­கி­றது.

தமி­ழர்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு, தமி­ழர்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வதும் அதனால் தோற்றம் பெறும் முரண்­பா­டு­களும் இனப்­ப­தற்­றத்தை உரு­வாக்­கு­வ­தாக அண்­மைக்­கா­லங்­களில் மனித உரிமை அமைப்­பு­களும், சிவில் சமூக அமைப்­பு­களும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன.

அர­சாங்கம் அதனைக் கண்டு கொள்­ள­வில்லை. மாறாக அதனைத் தூண்டி விட்­டது.

திலீபன் நினை­வேந்தல் ஊர்தி மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல், ஒரு திட்­ட­மிட்ட சதி என்றும், நினை­வேந்தல் உரி­மையை தடுப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு சூழ்ச்சி என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி குற்­றம்­சாட்­டி­யது.

அதனை நிரூ­பிக்கும் வகையில், திரு­கோ­ண­ம­லையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலைச் சுட்­டிக்­காட்டி, திலீபன் நினை­வேந்தல் ஊர்தி வவு­னியா ஊடாக பயணம் செய்­வதால், இனப்­ப­தற்றம் ஏற்­படும் என்று நீதி­மன்­றத்தில் தடை உத்­த­ரவு கோரி­யி­ருந்­தனர் வவு­னியா பொலிஸார்.

எனினும், நீதி­மன்றம் அதனை நிரா­க­ரித்­த­துடன், அந்த ஊர்­திக்குப் பாது­காப்பு வழங்­கவும் உத்­த­ர­விட்­டது.

யாழ்ப்பாண நீதிமன்றமும் அவ்வாறே தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்தது.

இனப்பதற்றம் என்ற பெயரில் தமிழரின் நினைவேந்தல் உரிமையின் மீது கை வைக்க முற்படுகிறது சிங்கள பௌத்த பேரினவாதம்.

தற்போது, தவிர்க்க முடியாமல் விடப்பட்டுள்ள இந்த நீக்கலையும் அடைத்து விடுவது தான் அவர்களின் இலக்கு.

அதனைத் தான் நிரூபித்திருக்கிறது கப்பல்துறை தாக்குதல்.

இதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாத அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குறிவைக்கப்பட்டதை மையப்படுத்துகின்றனர்.

கஜேந்திரன் தாக்கப்பட்டது உண்மையாயினும், தாக்கியவர்களின் நோக்கம் அதுவல்ல. கஜேந்திரனைத் தாக்குவதால் அவர்களுக்கு எந்த இலாபமும் கிட்டப் போவதும் இல்லை.

அவர்களின் இலக்கு நினைவேந்தல் உரிமை தான். அதனை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் தான், இந்த விவகாாரத்தை திசை திருப்ப முற்படுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15
news-image

"தையிட்டி விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள்...

2025-01-21 13:08:03
news-image

அதிகாரம் படைத்தவர்களுடன் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாமல்...

2025-01-21 08:45:36
news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13
news-image

தேவைப்படுவது தமிழ் மைய அரசியலே

2025-01-19 15:18:20
news-image

சேமிப்பாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய விதத்தில் புதிய நிதியியல்...

2025-01-19 15:13:50
news-image

அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை விடவும் சமூகத்தின்...

2025-01-19 15:06:36