வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இராணுவ வீரர் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
கடந்த 05.11.2017 அன்று இராணுவ வீரர் நுவான் கேஜி ( வயது - 27) கிருமிநாசினி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
அதன் பின்னர் 14ஆம் வாட்டிற்கு மாற்றப்பட்ட குறித்த இராணுவ வீரர் நேற்று (10) இரவு 11.45 மணியளவில் வைத்தியசாலை மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனினும் கால் இரண்டும் உடைந்த நிலையில் உயிர்பிழைத்த இராணுவ வீரர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்ட போது, தற்போது குறித்த இராணுவ வீரரின் கால்கள் இரண்டினையும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM