உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விவாதித்து பிளவுபட்டுக்கொள்வதன் மூலம் அழிவடையப்போவது இந்த தேசியமாகும் - வஜிர அபேவர்த்தன

Published By: Digital Desk 3

22 Sep, 2023 | 06:38 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

ஈஸ்டர் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 20 நிமிடங்கள்வரை வெளியில் அறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அத்துடன் ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள் நாட்டுக்குள் இருப்பதாக நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இரண்டாவது நாளாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிபெற்றவர்கள் நாட்டுக்குள் இருப்பதாக நான் தெரிவித்ததாக இந்த சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். அவ்வாறானதொரு விடயத்தை நான் தெரிவிக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் ஈஸ்டர் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு சபையில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 20 நிமிடங்கள்வரை வெளியில் அறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்போது நானும் அவருடன் சென்றிருந்தேன். பிரதமர் அங்கு வந்திருப்பதை அறிந்த பாதுகாப்பு தரப்பின் சிலர் அங்கு வந்து, சிறிது நேரம் இருக்குமாறு தெரிவித்திருந்தனர். அப்போது பாதுகாப்பு சபை கூட்டத்தில் முப்படைகளின் தளபதி,  பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இருந்தனர். ஆனால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கவில்லை.

பின்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் காரியாலயத்துக்கு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி எஞ்சிய குண்டுதாரிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தபோது குண்டுதாரிகள் அனைவரும் குண்டை வெடிக்கவைத்துக்கொண்டனர்.

அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பல விடயங்களை தெரிவித்திருந்தார். இந்த விடயங்களை அவர் விரும்பினால் மேல் நீதிமன்ற மூன்றுபேர் கொண்டு விசாரணைக்குழுவுக்கு வழங்க முடியும். அவ்வாறு வழங்கினால் அந்த விடயங்கள் விசாரணைக்கு முக்கியமாக இருக்கும். 

அத்துடன் புலனாய்வு பிரிவு தொடர்பாக அரசியல்வாதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒருசில அரசியல்வாதிகளின் பேச்சுக்களை பார்க்கும்  பயங்கரவாதிகளும் உலகத்தாரும் சிரிக்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற விவாதத்தை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இதுதொடர்பாக விவாதித்து பிளவுபட்டுக்கொள்வதன் அழிவடையப்போவது இந்த தேசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளின் நண்பியை பாலியல் துஷ்பிரோயகம் செய்ய...

2025-01-25 12:20:10
news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 12:03:28
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14