குற்றச்செயல்கள் இடம்பெற போதைப்பொருள் பாவனையே பிரதான காரணம் - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

Published By: Digital Desk 3

21 Sep, 2023 | 04:39 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொலைகள் மற்றும் பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெற போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகும். சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் போதைப்பொருள் வர்த்தகர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சமூகத்தில் குற்றச்செயல்களை இல்லாதொழிப்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

பாணந்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று பெண் ஒருவர் வீதியில் நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வருகை தரும் சிலர் கழுத்தில் உள்ள தங்க நகையை பறித்து செல்கிறார்கள். இரவில் திருடர்கள் வந்து வீட்டில் இருப்பவர்களிடத்தில் ஆயுதங்களை காண்பித்து  பயமுறுத்தி சொத்துக்களை அபகரித்து செல்கிறார்கள்.

 சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் போதைப்பொருள் வர்த்தகர்களாலேயே  மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் மாளிகாகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது 6 வயது சிறுமி  பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார். சிறுமியின் தந்தை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என்பதனாலேயே அன்று துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று எம்மிடத்தில் இந்த குற்றச்செயல்கள் மூலம் பயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் பற்றிய தினசரி செய்திகளே இந்த குற்ற பயத்திற்கு காரணமாகும்.குற்றச்சம்பவங்கள் குறித்த அச்சத்தை இல்லாதொழிப்பது பொலிஸாரின் பொறுப்பாகும். போதைப்பொருள் பாவனையே இந்த குற்றச்செயல்களுக்கு முக்கியக் காரணமாகும். 

போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அடிமையாதல் போன்றவற்றினால் இவர்கள் திருட்டு, கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட முனைகிறார்கள். எனவே சமூகத்தில் குற்றச்செயல்களை இல்லாதொழிப்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49