13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவி உடை தரித்த ஒருவரை எஹட்டுவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விஹாரை ஒன்றில் வாழ்ந்துவரும் காவி உடை தரித்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரான காவி உடை தரித்த நபர் வசிக்கும் விஹாரையில் சிறுவன் ஒருவன் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எஹட்டுவெவ பொலிஸாருக்கு அறிவித்திருந்தது.
இதன்படி, எஹட்டுவெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM