சர்வதேச நீதியைக் கோரி திருகோணமலையில் ஜனநாயகப் போராட்டம்

Published By: Vishnu

21 Sep, 2023 | 11:07 AM
image

(துரைநாயகம் சஞ்சீவன்) 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் வியாழக்கிழமை (21)  காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

இதன்போது 74 வருட தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதிசெய், வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம்களின் இன, மத அடையாளங்களை அழிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் இறுதியில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறையை உறுதிப்படுத்துமாறு கோரிய ஜனநாயக மக்கள் போராட்டம் இன்று 21ம் திகதி வியாழக்கிழமை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்ற நிலையில்  பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான இப்போராட்டமானது திருகோணமலையிலும் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32