வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை  நிரா­க­ரிப்­ப­தற்­காக ஆய்­வா­ளர்­க­ளுக்கு சிஐஏ 'இலஞ்சம்' : சி.ஐ.ஏ. அதி­காரி சாட்­சியம்

Published By: Sethu

21 Sep, 2023 | 10:45 AM
image

(ஆர்.சேதுராமன்)

கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நக­ரி­லுள்ள ஆய்­வு­கூ­டத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறு­வ­தற்­காக தனது சொந்த ஆய்­வா­ளர்­க­ளுக்கு அமெ­ரிக்­காவின் மத்­திய புல­னாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)'இலஞ்சம்' வழங்­கி­ய­தாக சி.ஐ.ஏ.யின் சிரேஷ்ட ஒருவர் அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்றக் குழு­விடம் அண்­மையில் சாட்­சியம் அளித்­துள்ளார்.

சி.ஐ.ஏ பணிப்­பாளர் வில்­லியம் பர்ன்­ஸுக்கு, அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் இரு தெரி­வுக்­கு­ழுக்­களின் தலை­வர்கள் எழு­திய கடி­தத்தில் இச்­சாட்­சியம் குறித்து தெரி­வித்­துள்­ளனர்.

அமெரிக்கப் பாரா­ளு­மன்றத்தின் கொவிட்-19 பெருந்­தொற்று தொடர்­பான உப தெரி­வுக்­கு­ழுத் தலைவர் பிரெட் வென்ஸ்ட்ரப், புல­னாய்வு தொடர்­பான தெரி­வுக்­குழுவின் தலைவர் மைக் டேர்னர் ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

"பல தசாப்­த­கால அனு­ப­வ­மு­டைய, சிரேஷ்ட தரத்­தி­லான, தற்­போ­தைய சி.ஐ.ஏ. அதி­காரி ஒருவர், மேற்­படி பணக்­கொ­டுப்­ப­னவு தொடர்­பான தக­வல்கள் வழங்க முன்­வந்தார்" என 12.-09-.2023 ஆம் திக­தி­யி­டப்­பட்ட அக்­க­டி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அந்த அதி­கா­ரியின் தக­வ­லின்­படி "கொவிட்19 மூலம் குறித்து ஆராய்­வ­தற்­காக, விஞ்­ஞான நிபு­ணத்­துவம் கொண்ட, பல்­துறை சார்ந்த, அனு­ப­வம்­மிக்க 7 அதி­கா­ரிகள் கொண்ட குழு­வொன்றை, தனது கொவிட் கண்­டு­பி­டிப்பு அணிக்கு (Covid discovery team)   சி.ஐ.ஏ. நிய­மித்­தது.

அவர்­களின் ஆய்வின் முடிவில், கொவிட் 19 ஆனது, சீனாவின் வுஹான் நக­ரி­லுள்ள ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து தோன்­றி­யது என அவ்­வ­ணியின் 6 அதி­கா­ரிகள் நம்­பினர். ஆனால், அவ்­வ­ணியின் மிகவும் சிரேஷ்ட அதி­காரி, கொவிட் 19 வைரஸ் ஆனது விலங்­குகள் ஊடாக இயற்­கை­யாக தோன்­றி­யி­ருக்­கலாம் என நம்­பினார். 

அதன் பின்னர், ஏனைய 6 அதி­கா­ரி­களும், அவர்­களின் நிலைப்­பா­டு­களை மாற்­றிக்­கொள்­வ­தற்­காக  'குறிப்­பி­டத்­தக்க பண ஊக்­கு­விப்­புகள்' வழங்­கப்­பட்­டன என மேற்­படி சாட்சி தெரி­வித்­துள்ளார்" எனவும் அக்கடிதத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இறு­தியில் குறைந்த நம்­பிக்­கை­யுடன் தானும் எந்­த­வொரு மதிப்­பீட்­டையும் சி.ஐ.ஏ. பகி­ரங்­க­மாக முன்­வைக்­க­வில்லை.

 "நம்­ப­க­மா­ன­தாகத் தென்­படும் மூலத்­தி­லி­ருந்து வெளி­வந்த இக்­குற்­றச்­சாட்­டு­க­ளா­னவை, கொவிட்19 மூலம் குறித்த உள்­ளக விசா­ர­ணை­களை சி.ஐ.ஏ. எவ்­வாறு கையாண்­டது என்­பது குறித்து இத்­தெ­ரி­வுக்­கு­ழுவை விசா­ரிக்கச் செய்­கின்­றன' என பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழுத் தலை­வர்கள் இரு­வரும் தமது கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இவ்­வி­சா­ர­ணை­க­ளுக்­காக, சி.ஐ.ஏ.யின் கொவிட் கண்­டு­பி­டிப்பு அணியின் செயற்­பா­டுகள் தொடர்­பான அனைத்து ஆவ­ணங்கள், சி.ஐ.ஏயின் கொவிட்19 கண்­டு­பி­டிப்பு அணி மற்றும் ஏனைய ஊழி­யர்கள், ஒப்­பந்­தக்­கா­ரர்கள், ஏனைய முக­வ­ர­கங்­க­ளுக்கு  இடை­யி­லான, கொவிட்19 மூலம் தொடர்­பான ஆவ­ணங்கள்  மற்றும் தொடர்­பா­டல்கள், சி.ஐ.ஏவின் கொவிட்19 கண்­டு­பி­டிப்பு அணியின் அங்­கத்த­வர்­க­ளுக்­கான ஊதியம், செயற்­பாட்டு அடிப்­ப­டை­யி­லான கொடுப்­ப­ன­வுகள், போனஸ் ஊக்­கு­ விப்­புகள் உட்­பட அனைத்து கொடுப்­ப­ன­வு­களின் வர­லாறு, போன்­ற­வற்றை தமக்கு வழங்­கு­மாறு சி.ஐ.விடம் மேற்­படி தெரி­வுக்­குழுத் தலை­வர்கள் கோரி­யுள்­ளனர். 

இந்த ஆவ­ணங்கள், விப­ரங்­களை எதிர்­வரும் 26 ஆம் திக­திக்கு முன்னர் சமர்ப்­பிக்க வேண்டும் எனவும் அக்­க­டித்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது,

 சி.ஐ.ஏ.யின் பொது உற­வுகள் விவ­காரப் பிரிவின் பணிப்­பாளர் டெம்­மி­ குப்­பேர்மன் தோர்ப், இது தொடர்பாக விடுத்த அறிக்­கை­யொன்றில், “சி.ஐ.ஏ.யில் நாம், பகுப்­பாய்வு கடி­னத்­தன்மை, நேர்மை, பக்­கச்­சார்­பின்மை ஆகி­ய­வற்றை உயர்ந்த தரத்தில் பேணு­வ­தற்கு உறு­தி­பூண்­டுள்ளோம். இக்­குற்­றச்­சாட்­டு­களை நாம் தீவி­ர­மாக கருத்­திற்­கொள்­வ­துடன், அது குறித்து ஆராய்கிறோம்” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

 2 ஆவது விசா­ரணைக் குழு

இதே­வேளை, கொவிட் 19 மூலம் தொடர்­பான மேலும் தக­வல்­களை சீனா வழங்க வேண்டும் என உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பணிப்­பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்­ரி­யேசுஸ் வலி­யு­றுத்­தி­யதுடன், இது குறித்து ஆராய்­வ­தற்­காக 2 ஆவது குழு­வொன்றை அனுப்­பு­வ­தற்கு அந்த ஸ்தாபனம் தயா­ரா­க­வுள்­ளது எனவும்  அவர் தெரி­வித்­துள்ளார்.

 சீனாவின் வுஹான் நகரில்   2019 டிசெம்பர் மாதத்தில் கொரோனா எனும் கொவிட்19 நோய் பரவ ஆரம்­பித்­தது. இது­வரை சுமார் 70 இலட்சம் பேர் கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­துள்­ளனர் .

கொவிட்19 மூலம் தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன், அந்­நாட்டின் புல­னாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும், இவ்விடயத்தில் அமெரிக்காவின் பல்வேறு புலனாய்வு முகவரகங்களும் இவ்விடயத்தில் வெவ்வேறு விதமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதை அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10