மன்னாரில் 13 நீர் ஜெல் குச்சிகள், படகுடன் 5 பேர் கைது

20 Sep, 2023 | 06:25 PM
image

மன்னார் கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மன்னாரில் 13 நீர் ஜெல் குச்சிகளுடன் 05 சந்தேக நபர்கள் டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மன்னார் சவுத்பார் கடற்கரைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றது.

இது தொடர்பாக தெரியவருவதாவது :

மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் கடற்தொழில் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மீன் பிடிப்பதற்காக 13 வாட்டர் ஜெல் குச்சிகளுடன் மீன்பிடித் தேவைகளுக்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்த திட்டமிட்ட 05 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். 

மீன்பிடிக்க வெடி மருந்துகளை பயன்படுத்துவது கடல்வாழ் உயிரினங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அத்தோடு, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்துகிறது. 

இந்நிலையில், பிற சட்ட விரோத மீன்பிடி நடைமுறைகளை ஒடுக்குவதற்கு  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டன. 

கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மீன்பிடிக்க வணிக ரீதியிலான வெடிமருந்துகளை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 41 வயதுக்குட்பட்ட மன்னாரில் வசிப்பவர்கள் என கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள், 13 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00