திருகோணமலை, குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்தூர் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி, மதுரங்குடா - செந்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் ஜனுஜன் (வயது 19) எனவும் தெரிய வருகின்றது.
செந்தூர் மதுரங்குடா களப்புப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இரு இளைஞர்கள் சென்றபோது குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM