திருகோணமலையில் படகு கவிழ்ந்து விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

Published By: Vishnu

19 Sep, 2023 | 08:56 PM
image

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்தூர் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி, மதுரங்குடா - செந்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் ஜனுஜன் (வயது 19) எனவும் தெரிய வருகின்றது.

செந்தூர் மதுரங்குடா களப்புப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இரு இளைஞர்கள் சென்றபோது குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் மீட்கப்பட்டுள்ளார்.

 உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41