பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - செல்வம், இராதாகிருஷ்ணன் சபையில் கோரிக்கை

Published By: Vishnu

19 Sep, 2023 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன மீதான துப்பாக்கி பிரயோகம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி. சபையில் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன துப்பாக்கி பிரயோகத்துக்கு ஆளாகி மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

அதேபோன்று திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிலரால் தாக்கப்பட்டு  உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.

அதனால் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அத்துடன் வே. இராதாகிருஷ்ணன் எம்.பி குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் மற்றும்  தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும்போது அவரை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளும் அவரை பாதுகாக்க தவறி இருக்கின்றனர். அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கிறது.

இது எமது நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் இதுதொடர்பாக முறையான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு்ம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00
news-image

ஊடக உயர்தொழிலாளர் பட்டய நிறுவக சட்டமூலத்திற்கு...

2026-08-07 22:33:48
news-image

மூதூர் படுகொலைகள் நிகழ்ந்து 20 வருடங்கள்...

2026-08-07 18:34:21
news-image

உயிரியல் பாட பரீட்சை வினாத்தாளில் பாரிய...

2026-08-07 22:28:49